All Blog Posts
-
நம்பிக்கை
நம்பிக்கை என்பது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது அல்ல.நம்பிக்கை என்பது நேர்மறை சிந்தனை.எனக்கு எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும்,நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே,நிச்சயம் நான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவேன் என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நிலையில்லா இந்த உலகில் தன்னம்பிக்கை முதல் கடவுள் நம்பிக்கை வரை அனைத்து நம்பிக்கைகளும் பொய்யே, ஆனால் நிலையில்லா இந்த உலகில்“இந்த நிலையும் மாறும் “என்ற நம்பிக்கையே உண்மையானது. இந்த நம்பிக்கை தான் ஒவ்வொரு மனிதனையும் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றது.
-
வாழ்வியல் அறிவு
அறிவு துன்பத்துக்கு மருந்தாகவும், அறியாமை இன்பத்திற்கு வித்தாகவும் இருக்கின்றது. அறிவு வலிக்கு மருந்து, இது வலி உணர்வை போக்குவதோடு மட்டுமில்லாமல் பக்கவிளைவாக இன்ப உணர்வையும் நம்மிடமிருந்து போக்கி விடும் எனவே வாழ்வியல் அறிவை வாழ்க்கையில் அனைத்து இன்பத்தையும் அனுபவித்த 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொடுத்தால் மட்டுமே சிறந்தது. மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை, இந்த நான் என்ற உணர்வில் இருந்து விடுதலையை ஒருவர் அறிவின் மூலம் பெற்றுவிட்டால் அவர் உயிருடன் இருக்கும் போதே இறந்து…
-
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான்
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறிவை கொடுத்து ஒருவர் நம்பிக்கையை உடைத்து விடலாம் அப்படி ஒருவர் நம்பிக்கையை உடைத்துவிட்டால் அவர் பெற்ற அறிவே அவருக்கு சூனியமாகிவிடும், எனவே யாருடைய நம்பிக்கையையும் யாரும் உடைக்க வேண்டாம் கனவிலும், கற்பனையிலும்மே மனிதன் வாழ்க்கை சுகமாக கழியட்டும் ! தன்னம்பிக்கையை போல் கடவுள் நம்பிக்கையும் தனிமனித…
-
கடவுள் நம்பிக்கை
கடவுள் இல்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை துன்பத்துக்கு மருந்தாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்றாலும் கடவுளை நம்புவதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகின்றது.யாமிருக்க பயம் ஏன், கடவுள் நிச்சயம் உன்னை காப்பார், இந்த நிலையும் மாறும் என்ற இதுபோன்ற நம்பிக்கையே ஒருவனை துன்பத்திலிருந்து மீண்டு வாழ நம்பிக்கை கொடுக்கின்றது, இதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் தான் அறிவு கடவுள் இல்லை என்று சொன்னாலும் உணர்வு கடவுளையே நம்புகின்றது.
-
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்…
கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள் இல்லை என்பதை புரிய வைக்க அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நான் எழுதிய விதி உண்மை என்ற ஆய்வுக்கட்டுரை மட்டுமே உள்ளது. இதை ஆத்திகமும், நாத்திகமும் புரியாதது போல் தவிர்க்கின்றது. விதி உண்மை என்ற அறிவியல் உண்மையை ஏற்காமல் (புரிந்துகொள்ளலாம்)…
-
அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும்
ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்திற்கு இல்லாததால்தான். அனுபவம் இல்லாமல் படிப்பால் தான் பெற்ற தகவலை அறிவாக நினைக்கும் இந்த சமுதாயத்தை அறியாமையில் இருந்து மீட்டெடுக்க, நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதி இருந்தாலும் அந்தத் தகவலை அறிவாக மாற்றி கொள்ளும் அனுபவம் (அறிவு )படித்தவர்களுக்கு…
-
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு சரியா?
அறிவு இல்லாமல் அறிவை புரிந்துகொள்ள முடியாது! அனுபவம் இல்லாமல் அறிவை பெறமுடியாது! அனுபவம் இல்லாத படிப்பு அறிவை கொடுக்காது! ஆணும், பெண்ணும் அறிவாலும் உணர்வாலும் வேறுபட்டவர்கள்! ஆண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும், பெண்களால் புரிந்துகொள்ள முடியாது! பெண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும் ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது!காரணம் ஆணுடைய அறிவும், பெண்னுடைய அறிவும் வேறு வேறு! இது என்னுடைய ஆய்வின் முடிவு. இது அறிவியல் உண்மை. இதை புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் புரியவில்லை என்றால் நம்புங்கள். உள்ளாட்சி…
-
நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது
நீதி, சட்டத்தை ஆதாரமாக வைத்திருக்கும் நம் நாட்டில், சட்டத்தை உருவாக்கக்கூடிய எம் எல் ஏ, எம் பி, யை குற்றவாளிகளாக தேர்ந்தெடுத்துவிட்டு, நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. நீதிமன்றம், நீதியை நிலைநாட்டுகின்ற இடம் அல்ல, அது சட்டத்தை செயல்படுத்தும் இடம். அங்கு நீதி கிடைக்காது. சட்டத்தை உருவாக்குகின்ற சட்டமன்றமும், நாடாளுமன்றமும் தான் நீதிமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் அங்கு நீதிபதிகள் என்பதை, மக்கள் புரிந்து கொண்டால் நேர்மையானவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்போதுதான் நீதி அனைவருக்கும்…
-
வாழ்க புரட்சிக் கவி பாரதியின் புரட்சி
“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பதில்லையே !!“ என்று வீர முழக்கத்தை நமக்கு அறிவாக கொடுத்துச் சென்ற புரட்சிக்கவி பாரதி நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் இன்றளவும் அவருடைய புரட்சி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாலேயே! பாரதி கவிதை மட்டும் எழுதி இருந்தால் அவர் மறைந்தபொழுதிலேயே மக்கள் பாரதியை மறந்திருப்பார்கள், ஆனால் பாரதி பெண் விடுதலைக்காகவும், சாதி சமத்துவத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் களத்தில் இறங்கி சமரசமில்லாமல் புரட்சி செய்ததாலேயே…
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு
பிள்ளைகளை பதட்டப்படுத்தாதீர்கள் மாறாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள், தோல்வியை எதிர்கொள்ள தயார் படுத்துங்கள், தோல்வி அடைந்தவன் வாழ முடியாது என்றால் இந்த உலகில் யாரும் உயிராக இருக்க முடியாது. நரியின் கதை படி கைக்கு எட்டாத பழம் “சீ சீ இந்தப் பழம் புளிக்கும் “என்பதை போல் நமக்குக் கிடைக்காதது அனைத்தும் நமக்கு தேவைப்படாதது என்ற சிந்தனையே வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தைக் கொடுக்கும். தோல்வியை எதிர்கொள்வது தான் வாழ்க்கையின் வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு துணையாக இருங்கள்,…
All Tags
அறிவுரை, அறிவின்_தோற்றம், தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, அனுபவ_அறிவு, கடவுள்_மறுப்பு, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, அரசுமொழி_அந்தஸ்து, திருமணமும்_குடும்பமும், பெரியார், மனமும்_உணர்வும், மறுப்புக்_கட்டுரை, குற்றமும்_தண்டனையும், பகுத்தறிவு_விமர்சனம், குற்றப்_பொறுப்பு, BJP, குமார்_விதிகள், நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, மாநில_உரிமை, இந்தி_திணிப்பு, மதமும்_சடங்கும், உச்ச_நீதிமன்றம், இட_ஒதுக்கீடு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, அனுபவமே_அறிவு, மதவாத_அரசியல், ஆறாவது_அறிவு, இயற்கையின்_நீதி, பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், அறிவுத்_தற்பெருமை, உணர்வுக்_கட்டுப்பாடு, கற்பு, அறிவு_உணர்வு_மோதல், திருமணத்திற்கு_முந்தைய_காதல், ஏழாவது_அறிவு, ஊடகமும்_கலையும், அரசியலமைப்புச்_சட்டம், புத்தக_வாசிப்பு, சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நீதிமன்ற_அதிகாரம், நிர்வாகமும்_ஊழலும், மூளைச்சலவை, நான்_எனும்_உணர்வு, ஊடக_நேர்மை, திமுக, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, கல்விக்_கொள்கை, கோயில்_சடங்கு, தன்_மதிப்பு, உள்_ஒதுக்கீடு, உழைப்பு, மும்மொழிக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, ஸ்டாலின், அம்பேத்கர், தோல்வியை_எதிர்கொள்ளல், திருமண_வாழ்க்கை, பாலியல்_குற்றம், நட்பும்_உறவும், கலப்புத்_திருமணம், ஆன்மீக_வணிகம், தேர்தல்_பணம், வாக்கு_வங்கி, இளையராஜா, திருக்குறள், பாமக, திருமாவளவன், இலவசத்_திட்டம், ஒன்றிய_அரசு, கருணாநிதி, ஜெயலலிதா, சனாதன_தர்மம், லஞ்சம், மது_பழக்கம், NLC, பெண்_ஆண்_வேறுபாடு, சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், தேர்தல்_ஆணையம், அப்துல்_கலாம், ஜக்கி_வாசுதேவ், பெற்றோர்_பிள்ளை_உறவு, மோடி, விவசாய_மானியம், கால்_தொடும்_வழக்கம், NLC_நிலப்_பிரச்சினை, கல்வி_மொழி, NEET, வரிக்_கொள்கை, பொதுப்_பணி_தரம், காவல்துறை, வைரமுத்து, விவேகானந்தர், ஏ_ஆர்_ரகுமான், விஜய், சீமான், வள்ளலார், போட்டி_மனப்பான்மை, ரஜினிகாந்த், காந்தி, மாணவர்_நெருக்கடி, காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, காமராசர், காங்கிரஸ், அதிமுக, சாதிக்_கணக்கெடுப்பு
