குற்றப்_பொறுப்பு

  • துன்பத்திற்கு மருந்து ஞானம்

    அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்!அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் இந்த கட்டுரையை படித்து பயன்பெறுங்கள், இதை உங்களுக்காக தான் எழுதி இருக்கின்றேன்.  அறிவில் இரண்டு வகை உண்டு, நான் என்ற உணர்வின் ஆளுமையில் ஐந்து அறிவு மூலம் பகுத்து அறிந்து வாழ்வதற்கு தேவையான அறிவை பெறுவது முதல் வகை. நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டும், வாழ்வதற்காக…

  • உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…

    ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின்றோம் என்பதையும் அறிவியல் ஆதாரத்தோடு நிரூபித்து ஆய்வு கட்டுரைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். இருப்பினும் புதிய நீதி உருவாகவில்லை. இந்த அறிவியல் உண்மையை ஆதாரமாக வைத்து உச்சநீதிமன்றம் புதிய நீதியை உருவாக்க வேண்டும்.மாறாக ஒருவன் செயலுக்கு அவன்தான் காரணம் என்ற பழைய நம்பிக்கையிலேயே நீதித்துறை செயல்பட்டால்…

  • கர்மா

    கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று பொருள். எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அறிவியல். கர்மா என்பது முன்ஜென்மத்தில் செய்த செயலின் பலன் அல்ல. கர்மா என்பது முன்னோர்கள் செய்த செயலின் பலன் என்று பொருள். முன் ஜென்மம், மறுபிறவி என்று எதுவும் இல்லை. மனிதனை…

  • ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம்

    ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி குறைத்தால் அது அரசியல் நகர்வாக தான் இருக்கும். அதுவே என்னுடைய இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து தண்டனையை குறைத்தால் அது அறிவியல் பூர்வமான, அறிவு பூர்வமான, உலகுக்கே முன்னுதாரணமாக இருக்கும்.] நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம்…

  • சமத்துவம்

    புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியார் சமத்துவத்தை பேசியது அரசியல் வெளிப்பாடு, சமத்துவம் பேசும் அனைவருக்கும் பல காரணம் இருக்கின்றது. இங்கு சமத்துவம் பேசுகின்றவர்கள் உயர்ந்த உடன் மற்றவர்களை அடிமைப்படுத்தும் குனம் இயல்பாகவே உள்ளது. மனிதன் சமத்துவம் பேசுவது சுயநலத்துக்காகவே, மனிதன் மிருகம் போல தான் உயர்ந்துவிட்டால் தாழ்ந்தவனை அடிமைப்படுத்தாமல் இருக்க மாட்டான், எனவே சமத்துவத்தை சரியாக…

  • தூக்குத் தண்டனை சரியா?

    நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியே அந்த சமுதாயத்தின் நீதியை மாற்றும். சாலை விபத்தால் உலகில் பல கோடி அப்பாவி மக்கள் இறக்கின்றார்கள் இதற்கு 90 சதவிகிதம் ஓட்டுனரின் தவறே காரணம், ஆனால் சட்டம் இந்த நிகழ்வை விபத்து என்றே பார்க்கின்றது. அதுபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே பல நோயாளிகள் இறப்பதற்கு காரணமாக உள்ளது…

  • சமத்துவ புரட்சி

    தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்ற அரசியலைக் கடந்து அனைத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்ற உரிமையை போராடிப் பெறமுடியும். பெஞ்சமின் மின்சாரத்தை கண்டுபிடித்ததால் மின்சாரம் அவருக்கு சொந்தமல்ல, யார் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றார்களோ அவர்களுக்கு தான் அது பலன் தரும், அதுபோல் விதி அறிவியல் உண்மை, எது நடக்குமோ அது…

  • நம் மனசாட்சி மாறவேண்டும்

    ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு.அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை.நீதி மாறவேண்டும் என்றால் சமுதாயத்தின் அறிவு மாறவேண்டும்.குற்றவாளி தண்டனைக்கு உரியவன் அல்ல இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அறிவியல் உண்மையை எப்போது இந்த உலகம் உணர்கின்றதோ அப்போதுதான் தூக்குத்தண்டனை தடை செய்யப்படும். இதை நான் எழுதுவதால் இந்த உலகில் நான் மட்டுமே அறிவாளி, மற்றவர்கள் அனைவரும் அறிவு இல்லாதவர்கள் என்று பொருளல்ல. அறிவால் யாரும்,…

  • விதியை நம்பாதீர்கள் !

    விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு புரிய வைப்பதும் கடினம், நம்ப வைப்பதும் கடினம். நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்ற தொடர்வினை தத்துவம் தான் விதி. விதி உண்மை என்று புரிந்துகொள்வதற்கும், விதியை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. விதி உண்மை என்று நான்…

  • வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு

    ” வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு ” வெளி உலக தொடர்போ, இறந்த கால தொடர்போ இல்லாமல் தூக்கு தண்டனையை கொடுக்கும் நீதி அரசர்களுடைய சிந்தனையும், செயலும் இருக்கும் என்று யாராவது நிருபித்து விட்டால் அவருக்கு 1,00,00,000 ரூபாய் பரிசாக குமார் பதிப்பகம் கொடுக்கும்.