அறிவின்_தோற்றம்

  • மரத்திற்கு அதன் இலைகளே உரம்

    மரத்திற்க்கு உதிரும் அதன் இலைகளே உரமாவது போல்,நான் எழுதும் எழுத்துக்கள் எனக்கு அறிவாக இருந்து என்னை இயக்குகின்றது.

  • தங்க கரண்டி

    தங்க கரண்டியால் எதை எடுத்துக் குடித்தாலும் நன்மை பயக்குமா? நாம் எதனால் சாப்பிடுகின்றோம் என்பதை விட எதை சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம்,  நாம் பெரும் தகவல் படிப்பதாலும் கிடைக்கின்றது, கேட்பதாலும் கிடைக்கின்றது, பார்ப்பதாலும் கிடைக்கின்றது இதில் படிப்பதால் தகவலை  பெறுகின்றவர்கள் தான் அறிவாளிகள் என்று அறிவைப் பற்றிய அறிவு இல்லாதவர்களை மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள்.கற்பனை கதைகளை இலக்கியமாக,நாவலாக படித்தாலும் நாடகமாக, திரைப்படமாக பார்த்தாலும், காதையாக கேட்டாலும், இவைகள் மூளையில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகள். தங்க கரண்டியால்…

  • பிறப்பால் (சாதியால்) மனிதர்களின் அறிவு வேறுபடுமா?

    குடும்ப புத்தி, சாதி புத்தி, மத புத்தி, பிறந்த ஊரின் புத்தி, என்று பிறப்பால் ஒருவர் அறிவைப் பெறுகின்றார்களா அல்லது அனுபவத்தால், படிப்பால் ஒருவர் அறிவிவை பெறுகின்றார்களா என்று அறிவைப் பற்றி  முழுமையாக ஆய்வு செய்து இந்த கட்டுரையில் எழுதி இருக்கின்றேன். இந்த கட்டுரையை படிப்பதற்கு முன் இதற்கு முன் அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளைப் படித்துவிட்டு இந்த கட்டுரையை படித்தால் புதிதாக என்னுடைய கட்டுரையை படிப்பவர்களுக்கு எளிதாக புரியும். (https://www.vijayakumaran.in/blog/understanding-knowledge-41) அறிவை…

  • ஆறறிவு மனிதர்களை தேடுகின்றேன்!

    நம்முடைய ஐந்து புலன்களால் நாம் பெற்ற அனுபவத்தை அடிப்படையாக வைத்து எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து அறிவது தான் பகுத்தறிவு. மனிதனின் ஆறாவது அறிவு பகுத்தறிவு என்பதும், மற்ற உயிரினங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பதும் தவறு. நிகழ்காலத்தில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் அறிவு இருப்பதால்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே பகுத்தறிவு அனைத்து உயிர்களுக்கும் உள்ள அடிப்படை அறிவு…

  • துன்பத்திற்கு மருந்து ஞானம்

    அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்!அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் இந்த கட்டுரையை படித்து பயன்பெறுங்கள், இதை உங்களுக்காக தான் எழுதி இருக்கின்றேன்.  அறிவில் இரண்டு வகை உண்டு, நான் என்ற உணர்வின் ஆளுமையில் ஐந்து அறிவு மூலம் பகுத்து அறிந்து வாழ்வதற்கு தேவையான அறிவை பெறுவது முதல் வகை. நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டும், வாழ்வதற்காக…

  • சுய பரிசோதனை

    நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும், எந்த ஊரில் இருக்கிறோம் என்பது தெரிந்தால் தான் பயணத்தின் திசை எந்த திசையை நோக்கி என்பதை அறிந்து பயணிக்க முடியும்,அப்போதுதான் செல்ல வேண்டிய ஊருக்கு சரியாக சென்றடைய முடியும். அதுபோல் நம் வாழ்க்கை பயணத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை முடிவு செய்வதற்கு முன் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு இலக்கை முடிவு செய்தால் தான் வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும்.நாம் ஒவ்வொருவரும்…

  • ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 1

    செவிடன் காதில் ஊதிய சங்கை போல், அறிவைப் பற்றியும், ஆறாவது அறிவை பற்றியும் நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரையால் இந்த சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை, உணர்விலிருந்து விடுபட்டு சிந்திக்கும் ஆற்றலே மனிதர்களிடம் இல்லை. இருப்பினும் புதிய யுத்தியில் புதிய முயற்சியாக இந்த கட்டுரையை எழுதுகின்றேன். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவுகள் இறந்த காலத்தின் தொடர்பு இல்லாமல் சுயமாக மனிதர்களால் சிந்திக்கவே முடியாது,அறிவால் யாரும் உயர்ந்தவரும் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல.ஆண்களின் அறிவும், பெண்களின் அறிவும்…

  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…

    அனைவரும் சமம் என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், மனிதர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தோடும் வாழ ஒவ்வொருவரின் உரிமையையும் துல்லியமாக வரையறுப்பது மனிதனின் நீதியாக இருப்பது போல்.விதி என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும் நம்முடைய முயற்சியும், உழைப்பும் தான் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.இதை புரிந்து கொள்ளாமல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளை மேற்கோள்காட்டி அனைவரும் சமம் என்று தனிமனித உரிமைகளுக்குள் அத்து மீறி ஒருவர் சென்றாலோ, அல்லது விதி என்பது இயற்கையின் நீதி…

  • AI எனும் செயற்கை மூளை

    artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை. அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “குமார் விதிகள் “என்ற ஆய்வு புத்தகம் எழுதி இருக்கின்றேன். https://drive.google.com/file/d/1uO8Dul1V859ifE8qT_s0DNNBQDaU3X_4/view?usp=sharing ”குமார் விதிகள் “என்ற என்னுடைய புத்தகத்தை படித்து புரிந்து கொண்ட பிறகு இந்த கட்டுரையை படித்தால் தான் AI யின் பலமும், பலவீனமும் வாசகர்களுக்கு தெரிய வரும். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவு, ஒரு…

  • ஆறாவது அறிவின் அளவுகோல்

    அறிவு என்றால் என்ன ?ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும் இந்த அறிவைப் பெறவில்லை நான் எழுதிய புத்தகத்தை படித்து அதை அறிவாக பெற முடியாத அறிவில்லாதவரிடம் இருந்து நான் பெற்ற அனுபவத்தால் தான் இந்த அறிவை பெற்றேன். நம்முடைய ஐந்து புலன்களின் அனுபவத்தால் பெறுவதுதான் அறிவு. அந்த, அந்த புலன்களின் வேலையை அந்த, அந்த புலன்கள்…