அனுபவ_அறிவு

  • மரத்திற்கு அதன் இலைகளே உரம்

    மரத்திற்க்கு உதிரும் அதன் இலைகளே உரமாவது போல்,நான் எழுதும் எழுத்துக்கள் எனக்கு அறிவாக இருந்து என்னை இயக்குகின்றது.

  • தங்க கரண்டி

    தங்க கரண்டியால் எதை எடுத்துக் குடித்தாலும் நன்மை பயக்குமா? நாம் எதனால் சாப்பிடுகின்றோம் என்பதை விட எதை சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம்,  நாம் பெரும் தகவல் படிப்பதாலும் கிடைக்கின்றது, கேட்பதாலும் கிடைக்கின்றது, பார்ப்பதாலும் கிடைக்கின்றது இதில் படிப்பதால் தகவலை  பெறுகின்றவர்கள் தான் அறிவாளிகள் என்று அறிவைப் பற்றிய அறிவு இல்லாதவர்களை மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள்.கற்பனை கதைகளை இலக்கியமாக,நாவலாக படித்தாலும் நாடகமாக, திரைப்படமாக பார்த்தாலும், காதையாக கேட்டாலும், இவைகள் மூளையில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகள். தங்க கரண்டியால்…

  • பிறப்பால் (சாதியால்) மனிதர்களின் அறிவு வேறுபடுமா?

    குடும்ப புத்தி, சாதி புத்தி, மத புத்தி, பிறந்த ஊரின் புத்தி, என்று பிறப்பால் ஒருவர் அறிவைப் பெறுகின்றார்களா அல்லது அனுபவத்தால், படிப்பால் ஒருவர் அறிவிவை பெறுகின்றார்களா என்று அறிவைப் பற்றி  முழுமையாக ஆய்வு செய்து இந்த கட்டுரையில் எழுதி இருக்கின்றேன். இந்த கட்டுரையை படிப்பதற்கு முன் இதற்கு முன் அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளைப் படித்துவிட்டு இந்த கட்டுரையை படித்தால் புதிதாக என்னுடைய கட்டுரையை படிப்பவர்களுக்கு எளிதாக புரியும். (https://www.vijayakumaran.in/blog/understanding-knowledge-41) அறிவை…

  • சுய பரிசோதனை

    நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும், எந்த ஊரில் இருக்கிறோம் என்பது தெரிந்தால் தான் பயணத்தின் திசை எந்த திசையை நோக்கி என்பதை அறிந்து பயணிக்க முடியும்,அப்போதுதான் செல்ல வேண்டிய ஊருக்கு சரியாக சென்றடைய முடியும். அதுபோல் நம் வாழ்க்கை பயணத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை முடிவு செய்வதற்கு முன் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு இலக்கை முடிவு செய்தால் தான் வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும்.நாம் ஒவ்வொருவரும்…

  • AI எனும் செயற்கை மூளை

    artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை. அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “குமார் விதிகள் “என்ற ஆய்வு புத்தகம் எழுதி இருக்கின்றேன். https://drive.google.com/file/d/1uO8Dul1V859ifE8qT_s0DNNBQDaU3X_4/view?usp=sharing ”குமார் விதிகள் “என்ற என்னுடைய புத்தகத்தை படித்து புரிந்து கொண்ட பிறகு இந்த கட்டுரையை படித்தால் தான் AI யின் பலமும், பலவீனமும் வாசகர்களுக்கு தெரிய வரும். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவு, ஒரு…

  • ஆறாவது அறிவின் அளவுகோல்

    அறிவு என்றால் என்ன ?ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும் இந்த அறிவைப் பெறவில்லை நான் எழுதிய புத்தகத்தை படித்து அதை அறிவாக பெற முடியாத அறிவில்லாதவரிடம் இருந்து நான் பெற்ற அனுபவத்தால் தான் இந்த அறிவை பெற்றேன். நம்முடைய ஐந்து புலன்களின் அனுபவத்தால் பெறுவதுதான் அறிவு. அந்த, அந்த புலன்களின் வேலையை அந்த, அந்த புலன்கள்…

  • முன்பிறவி கர்மா உண்மையா?

    ”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற்றி பேசுவதற்கும்,அறிவைப் பற்றி பேசுவதற்கும் தகுதி இல்லாதவர்கள். ஆத்திகனும்,நாத்திகனும் தன்னுடைய நம்பிக்கையை அறிவின் புரிதலாக நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை நான் பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது இரண்டு முட்டாள்களும் தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு உணர்வின் ஆளுமையால் ஆறாவது அறிவைப் பெற முடியாமல் மிருகமாக…

  • கதை கேளு! கதை கேளு!

    போட்டி,பொறாமை,காமம்,பணம்,பதவி போன்ற உணர்வின் பிடியில் மக்கள் சிக்கி கிடப்பதால் மக்களிடம் சிந்தனை வறட்சி உள்ளது.அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றது. “நம்முடைய சிந்தனை நம் கட்டுப்பாட்டில் இல்லை இறந்த காலத்தின் தொடர்போடுதான் இருக்கின்றது, இதிலிருந்து விடுபட்டு சுயமாக, சுதந்திரமாக யார் ஒருவராலும் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது “என்ற இந்த நான்கு வரிகள் புரிந்தால் தான் நான் எழுதிய “குமார்விதிகள்” என்ற புத்தகத்தின் நாற்பது பக்கங்களும் புரியும். தங்க நாணயம் தரையில் கிடப்பதை பார்த்த நான்…

  • அறியாமையே இன்பத்தை கொடுக்கும் !

    அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் யாரும் “அறியாமையே இன்பத்தை கொடுக்கும் “என்ற வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் எழுதிய” புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்த பிறகு இந்த வாக்கியத்தை படித்தால் மட்டுமே புரியும். அறிவைப் பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே கெட்ட அறிவை தவிர்த்து நல்ல அறிவை மட்டும் பெற முடியும். அறிவில் நல்லறிவு, கெட்டறிவு என்று இரண்டு அறிவு இருக்கா என்று பலருக்கும் வியப்பாக இருக்கும். அறிவைப் பற்றிய புரிதல்…

  • உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா

    உனக்கு அறிவு இருக்கா?-இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜா அவர்கள் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு “உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்டது ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது, இன்றும் இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் அதை மேற்கோள்காட்டி தான் விமர்சிக்கின்றார்கள். “உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்பது குற்றமா ! என்று ஆய்வு செய்யவே இந்த கட்டுரை. நான் இளையராஜா சொன்னதை நியாயப்படுத்த இதை எழுதவில்லை, அறிவைப் பற்றி ஆய்வு செய்து…