ஆறாவது_அறிவு

  • பயம்

    யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித்தவர், படிக்காதவர் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி என்னிடம் இல்லாத அறிவை மற்றவர்களிடமிருந்து நான் தினம் தினம் பெறுகின்றேன். அறிவும் நீரும் தாழ்வான பகுதியை நோக்கி தான் செல்லும், நம்மை அறிவாளி என்று நினைத்துக் கொண்டால் அறிவை பெற முடியாது, நம்மிடம் இல்லாத அறிவை…

  • ஒருவரின் சாதியை கேட்டு தெரிந்து கொள்வது சரியா? தவறா?

    பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்கள் ஒரு பெண்ணிடம் அவருடைய ஜாதியை கேட்டது பற்றி பலரும் பல கருத்துக்களை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர், இதை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது, யாரும் ஆறாவது அறிவின் ஆளுமையில் செயல்படவில்லை அனைவரும் சாதி உணர்வின் ஆளுமையில் தான் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகின்றார்கள். சாதியை கேட்டது சரி என்பதும், தவறு என்பதும் பகுத்தறிவின் வெளிப்பாடு, தனக்கு எது நன்மை என்று பகுத்தறிந்து செயல்படுவது தான் பகுத்தறிவு, இந்த பகுத்தறிவை ஆறாவது அறிவாக நினைத்து…

  • ஆறறிவு மனிதர்களை தேடுகின்றேன்!

    நம்முடைய ஐந்து புலன்களால் நாம் பெற்ற அனுபவத்தை அடிப்படையாக வைத்து எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து அறிவது தான் பகுத்தறிவு. மனிதனின் ஆறாவது அறிவு பகுத்தறிவு என்பதும், மற்ற உயிரினங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பதும் தவறு. நிகழ்காலத்தில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் அறிவு இருப்பதால்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே பகுத்தறிவு அனைத்து உயிர்களுக்கும் உள்ள அடிப்படை அறிவு…

  • ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 1

    செவிடன் காதில் ஊதிய சங்கை போல், அறிவைப் பற்றியும், ஆறாவது அறிவை பற்றியும் நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரையால் இந்த சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை, உணர்விலிருந்து விடுபட்டு சிந்திக்கும் ஆற்றலே மனிதர்களிடம் இல்லை. இருப்பினும் புதிய யுத்தியில் புதிய முயற்சியாக இந்த கட்டுரையை எழுதுகின்றேன். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவுகள் இறந்த காலத்தின் தொடர்பு இல்லாமல் சுயமாக மனிதர்களால் சிந்திக்கவே முடியாது,அறிவால் யாரும் உயர்ந்தவரும் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல.ஆண்களின் அறிவும், பெண்களின் அறிவும்…

  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…

    அனைவரும் சமம் என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், மனிதர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தோடும் வாழ ஒவ்வொருவரின் உரிமையையும் துல்லியமாக வரையறுப்பது மனிதனின் நீதியாக இருப்பது போல்.விதி என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும் நம்முடைய முயற்சியும், உழைப்பும் தான் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.இதை புரிந்து கொள்ளாமல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளை மேற்கோள்காட்டி அனைவரும் சமம் என்று தனிமனித உரிமைகளுக்குள் அத்து மீறி ஒருவர் சென்றாலோ, அல்லது விதி என்பது இயற்கையின் நீதி…

  • AI எனும் செயற்கை மூளை

    artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை. அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “குமார் விதிகள் “என்ற ஆய்வு புத்தகம் எழுதி இருக்கின்றேன். https://drive.google.com/file/d/1uO8Dul1V859ifE8qT_s0DNNBQDaU3X_4/view?usp=sharing ”குமார் விதிகள் “என்ற என்னுடைய புத்தகத்தை படித்து புரிந்து கொண்ட பிறகு இந்த கட்டுரையை படித்தால் தான் AI யின் பலமும், பலவீனமும் வாசகர்களுக்கு தெரிய வரும். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவு, ஒரு…

  • தொழிலாளிக்கு முதலாளி எதிரியா?முன்மாதிரியா?

    நமக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவரைப் போலவே இருவரும் நினைப்பதால் தான் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நான் ஆறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து நெய்வேலியில் நம்பர் ஒன் மின் ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்ததால் எனக்கு தொழிலாளியின் கஷ்டங்களும் தெரியும், முதலாளியின் கஷ்டங்களும் தெரியும். எனவே இந்த கட்டுரையை நான் எழுதுவது மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதி இருக்கும்…

  • பாலம்

    ஆறாவது அறிவு இல்லாத மனிதனும், மிருகமும் அறிவால் ஒன்று. மிருகமாக இருக்கும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவை கொடுப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த கட்டுரைக்கு “பாலம் “என்று தலைப்பு வைத்துள்ளேன்.ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு அல்ல, மிருகத்திடமும் பகுத்தறிவு இருப்பதால் ஆறாவது அறிவு என்பது உணர்விலிருந்து விடுபட்டு சிந்திப்பதால் பெறுவதே ஆறாவது அறிவு. நான் 25 சதவிகிதம் மிருகமாகவும், 50 சதவிகிதம் மனிதனாகவும்,மிதம்உள்ள 25 சதவீதம் உணர்வில்லாத இயந்திரம் என்ற நிலைக்கு நான் சென்றதால் தான் ஆறாவது…

  • ஆறாவது அறிவின் அளவுகோல்

    அறிவு என்றால் என்ன ?ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும் இந்த அறிவைப் பெறவில்லை நான் எழுதிய புத்தகத்தை படித்து அதை அறிவாக பெற முடியாத அறிவில்லாதவரிடம் இருந்து நான் பெற்ற அனுபவத்தால் தான் இந்த அறிவை பெற்றேன். நம்முடைய ஐந்து புலன்களின் அனுபவத்தால் பெறுவதுதான் அறிவு. அந்த, அந்த புலன்களின் வேலையை அந்த, அந்த புலன்கள்…

  • முன்பிறவி கர்மா உண்மையா?

    ”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற்றி பேசுவதற்கும்,அறிவைப் பற்றி பேசுவதற்கும் தகுதி இல்லாதவர்கள். ஆத்திகனும்,நாத்திகனும் தன்னுடைய நம்பிக்கையை அறிவின் புரிதலாக நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை நான் பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது இரண்டு முட்டாள்களும் தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு உணர்வின் ஆளுமையால் ஆறாவது அறிவைப் பெற முடியாமல் மிருகமாக…