பகுத்தறிவு_விமர்சனம்
-
ஆறறிவு மனிதர்களை தேடுகின்றேன்!
நம்முடைய ஐந்து புலன்களால் நாம் பெற்ற அனுபவத்தை அடிப்படையாக வைத்து எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து அறிவது தான் பகுத்தறிவு. மனிதனின் ஆறாவது அறிவு பகுத்தறிவு என்பதும், மற்ற உயிரினங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பதும் தவறு. நிகழ்காலத்தில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் அறிவு இருப்பதால்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே பகுத்தறிவு அனைத்து உயிர்களுக்கும் உள்ள அடிப்படை அறிவு…
-
சீ..சீ..இந்த பழம் புளிக்கும்
வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிருக்கும் அறிவு நமக்கு இன்பத்தை கொடுத்தால் அது நல்லறிவு,துன்பத்தைக் கொடுத்தால் அதற்கு அறிவு சூனியம் என்று பொருள். பலர் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அறிவு சூனியத்தால் துன்பத்தில் வாழ்கின்றார்கள் எது நல்லறிவு,எது அறிவு சூனியம் என்பதை அறிந்து நல்லறிவை மட்டும்…
-
AI எனும் செயற்கை மூளை
artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை. அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “குமார் விதிகள் “என்ற ஆய்வு புத்தகம் எழுதி இருக்கின்றேன். https://drive.google.com/file/d/1uO8Dul1V859ifE8qT_s0DNNBQDaU3X_4/view?usp=sharing ”குமார் விதிகள் “என்ற என்னுடைய புத்தகத்தை படித்து புரிந்து கொண்ட பிறகு இந்த கட்டுரையை படித்தால் தான் AI யின் பலமும், பலவீனமும் வாசகர்களுக்கு தெரிய வரும். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவு, ஒரு…
-
ஆறாவது அறிவின் அளவுகோல்
அறிவு என்றால் என்ன ?ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும் இந்த அறிவைப் பெறவில்லை நான் எழுதிய புத்தகத்தை படித்து அதை அறிவாக பெற முடியாத அறிவில்லாதவரிடம் இருந்து நான் பெற்ற அனுபவத்தால் தான் இந்த அறிவை பெற்றேன். நம்முடைய ஐந்து புலன்களின் அனுபவத்தால் பெறுவதுதான் அறிவு. அந்த, அந்த புலன்களின் வேலையை அந்த, அந்த புலன்கள்…
-
மக்கள் பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை
கடவுள் இல்லை என்பதை பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தெளிவு படுத்தாததால், மக்கள் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை. ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை மட்டுமல்ல, மக்களையும் சாதி ஏற்றத்தாழ்வில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், அதை நான் எழுதிய” குமார் விதிகள் “என்ற புத்தகத்தால் மட்டுமே முடியும். நான் எழுதிய புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை நாத்திகர்கள் எப்போது புரிந்து கொள்கின்றார்களோ அப்போதுதான்…
-
இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம்
நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல்லாத சமுதாயத்தில் இருந்து தான் கடவுள் நம்பிக்கை முற்போக்கு சிந்தனையாக உருவாகி உள்ளது.சீனாவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதிகம், எனவே கடவுள் இல்லை என்று சொல்வது முற்போக்கு சிந்தனை அல்ல. கற்கால மனிதனின் முற்போக்கான சிந்தனை தான் ஆத்திகம். தன்னுடைய வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால்தான் மனிதன்…
-
பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது
அறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பெரியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.கடவுளை வணங்குபவன் முட்டாள்,காட்டுமிராண்டி என்று உணர்வை தூண்டும் வகையில் பெரியார் கோபப்பட்டதால் தான் கடவுள் இல்லை என்பதை மக்கள் நம்பினார்கள்,கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரத்தையும் பெரியார் மக்களிடம் கொடுத்து புரிய வைக்கவில்லை, கடவுள் இல்லை என்ற நம்பிக்கையே பகுத்தறிவு என்று சொல்லி நம்ப வைத்தார்.கடவுளின் நம்பிக்கையால் நான் பல நன்மைகளைப் பெற்று இருக்கின்றேன் என்று சொல்பவர்களுக்கு பெரியாரிடம் இருந்து…
-
பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 2)
அறிவியல் ஆய்வின்படி தொடர்வினை தத்துவத்திர்க்கும், அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை உண்டு என்ற தத்துவத்திற்கு உட்பட்டு தான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அறிவியல் ஆய்வின்படி நேற்றைய நிகழ்வுகளே இன்றைய நிகழ்வுகளுக்கு காரணம், இன்றைய நிகழ்வுகளே நாளைய நிகழ்வுகளுக்கு காரணம் என்று உறுதியாவதால், எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்ற கருத்தை உள்ளடக்கிய விதி உண்மை என்பது என்னுடைய ஆய்வின் முடிவு. தந்தை பெரியாரும் முற்போக்கு பகுத்தறிவாளர்களும் விதியை பொய்யென்றும், ஆன்மிகவாதிகள் விதியை உண்மை என்றும், படித்த ஆன்மிகவாதிகளும்,…
-
பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 1)
இளைஞர்களை நேர்மையானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஊக்கப்படுத்தும் கட்டுரை இது. 12 வயது வரைக்கும் மாணவர்களால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியாது, எனவே 40 ஆண்டுகளுக்கு முன் பல நீதிக் கதைகளைச் சொல்லி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால் நன்மையே நடக்கும். நேர்மை தவறினால் கேடு தான் விளையும் என்று நம்ப வைத்தார்கள். சிறுவயதிலேயே மாணவர்கள் மனதில் நேர்மை விதைக்கப்பட்டதால் பெரும்பாலானவர்கள் ஒழுக்கமானவரகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருந்தார்கள். காலப்போக்கில் நீதி கதைகளை மாணவர்களுக்கு சொல்ல ஆசிரியர்கள் தவறிவிட்டார்கள்…
-
கற்பு
கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு. அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு, கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அனுபவம் இல்லை என்ற அறியாமையே கற்பு ஆகும். ஒருவர் கற்போடு வாழ்வதால் இந்த உலகத்திற்கு பெரிய பயன் ஏதும் இல்லை, ஆனால் தன் வாழ்க்கைத் துணையுடன் கற்போடு வாழ்கின்றவர்களால் மட்டும்தான் நிறைவான இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியும், கற்பு என்பது…
