கற்பு
-
ஆள் பாதி, ஆடை பாதி
ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவலைப்படுவது இல்லை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றியும் நான் கவலைப்படுவதில்லை என்றால் அது தவறு இல்லை ஆனால் அதற்கான எதிர் வினையை நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். பார்த்தவுடன் மற்றவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் புரிதல், நம்பிக்கை உங்கள் ஆடையை அடிப்படையாக…
-
சீ..சீ..இந்த பழம் புளிக்கும்
வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிருக்கும் அறிவு நமக்கு இன்பத்தை கொடுத்தால் அது நல்லறிவு,துன்பத்தைக் கொடுத்தால் அதற்கு அறிவு சூனியம் என்று பொருள். பலர் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அறிவு சூனியத்தால் துன்பத்தில் வாழ்கின்றார்கள் எது நல்லறிவு,எது அறிவு சூனியம் என்பதை அறிந்து நல்லறிவை மட்டும்…
-
அறியாமையே இன்பத்தை கொடுக்கும் !
அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் யாரும் “அறியாமையே இன்பத்தை கொடுக்கும் “என்ற வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் எழுதிய” புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்த பிறகு இந்த வாக்கியத்தை படித்தால் மட்டுமே புரியும். அறிவைப் பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே கெட்ட அறிவை தவிர்த்து நல்ல அறிவை மட்டும் பெற முடியும். அறிவில் நல்லறிவு, கெட்டறிவு என்று இரண்டு அறிவு இருக்கா என்று பலருக்கும் வியப்பாக இருக்கும். அறிவைப் பற்றிய புரிதல்…
-
கற்பு
கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு. அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு, கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அனுபவம் இல்லை என்ற அறியாமையே கற்பு ஆகும். ஒருவர் கற்போடு வாழ்வதால் இந்த உலகத்திற்கு பெரிய பயன் ஏதும் இல்லை, ஆனால் தன் வாழ்க்கைத் துணையுடன் கற்போடு வாழ்கின்றவர்களால் மட்டும்தான் நிறைவான இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியும், கற்பு என்பது…
-
திருமண வாழ்த்து
அறிவற்ற நிலையில் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் ! இதை படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் வாழ்த்துவதாக நினைக்கமாட்டார்கள் சாபம் விடுவதாகதான் நினைப்பார்கள், புரிந்துகொண்டால் மணமக்களை வாழ்த்த இதைவிட சிறந்த வார்த்தை இல்லை என்பது புரியும். அறிவற்ற நிலையில்தான் உணர்வை அனுபவிக்க முடியும். இல்லறத்தில் இன்பமாக வாழ இந்த இரண்டு அறிவும் இருக்கக் கூடாது. ஒன்று, இளமைப்பருவத்தில் இருந்தது போன்று யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயக்கூடிய அறிவு இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டாவது, கற்பு என்ற…
-
ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம்.
புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன் இயல்பான வாழ்க்கையை வாழாமல் துறவு கொண்டார்கள் ! உணர்வுபூர்வமான, இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு, கற்பு போன்ற அறியாமையே ஒரு மனிதனுக்கு தேவைப்படுகின்றது,எனவே உலகில் உள்ள அனைவரும் ஞானம் பெற்று வாழ்க்கையை ஞானத்தால் தொலைக்க வேண்டுமென்று அவசியமில்லை, எனவே நோயை குணப்படுத்த ஊருக்கு ஒரு…
-
திருமண வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற்கான தீர்வை பதிவு செய்து உள்ளேன். நாம் பெற்ற அறிவு தான் நம் வாழ்க்கைக்கு சூனியம், நாம் பெற்ற அறிவே நம்மை உணர்வுபூர்வமாக வாழ விடாமல் தடுக்கின்றது. சிறு வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் (18 வயது முதல் 25 வயதிற்குள்)இருமணம் கலந்து அன்போடும்,…
-
காதல் புனிதமானதா?
காதல் புனிதமானதா ? இதயம் கண்களால் பேசினால் காதல் !உணர்வு வார்த்தைகளால் பேசினால் காமம் !ஒரு முறை மட்டுமே வந்தால் காதல்!பலமுறை வந்தால் அது காமம்!இரண்டு இதயங்கள் பேசிக் கொள்வது என்பது புனிதமானது, தெய்வீகமானது, இரண்டு இதயங்களின் தகவல் பரிமாற்றம் என்பது இரண்டு ஆத்மாக்கள் கலப்பதாகும், இந்த நிகழ்வுகள் காற்றாலும், நிலவாலும், இயற்கையாலும் மட்டுமே நடைபெறுகின்றது, அதனால்தான் சங்க இலக்கியங்களில் காதலுக்கு காற்றையும், நிலவையும், தூது விட்டார்கள்.இந்த நிலை ஆழ்ந்த தியானத்திற்கு சமமானது. இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள பரிசுத்தமான…
-
உணர்வின் கடிவாளம் அறிவு
ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்ற வாழ்க்கையில்தான் உள்ளது. ஒருவனுடைய அறிவின் வெளிப்பாடு அவன் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் தான் வெளிப்படுகின்றது. இளைஞர்களை பார்த்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்வது மிக எளியது, ஆனால் இதுவரை யாரும் அறிவால் உணர்வுகளை எப்படி ஆளுமை செய்து ஒழுக்கமாக வாழ்வது…
-
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன?
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,கற்பின் சிறப்பை, குடும்ப உறவு முறையை சமுதாயத்தில் சீர்குலைப்பது தான் முற்போக்கு சிந்தனை யாளர்களின் முதல் பணி. ஒழுக்கமான சமுதாயத்தில் ஒழுக்கம் இல்லாதவர்களுக்கு முக்கியத்துவம் பெற்று கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை. தெளிவாக சொல்லவேண்டும் என்றால் நம்வீட்டு தக்காளி கூடையில் ஒருதக்காளி அழுகிவிட்டாள் அப்புறப்படுத்திவிட்டு மீதம்முள்ள…
