ஏழாவது_அறிவு

  • விஜயின் தேர்தல் வெற்றிக்கு எது காரணம்!

    இது அரசியல் கட்டுரை அல்ல, வாக்கு அளித்தவர்கள், அளிக்காதவர்கள் அனைவருக்கும் ஆன விழிப்புணர் கட்டுரை படித்து பயன்பெறுங்கள்.நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற புத்தகத்தில் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதி இருக்கின்றேன் அதை படித்துவிட்டு இதை படித்தால் தெளிவாக புரியும்.லிங்கை தொட்டு “குமார் விதிகள்”புத்தகத்தை படிக்கவும். https://www.vijayakumaran.in/kumar-vidhigal விஜய்யின் வெற்றிக்கு அவருடைய ரசிகர்களின் அரசியல் அறியாமை தான் காரணம் என்று அனைவரும் சொல்கின்றார்கள், அதை தாண்டி யாராலும் சிந்திக்க முடியவில்லை காரணம் அறிவை பற்றிய புரிதல்…

  • சீ..சீ..இந்த பழம் புளிக்கும்

    வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிருக்கும் அறிவு நமக்கு இன்பத்தை கொடுத்தால் அது நல்லறிவு,துன்பத்தைக் கொடுத்தால் அதற்கு அறிவு சூனியம் என்று பொருள். பலர் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அறிவு சூனியத்தால் துன்பத்தில் வாழ்கின்றார்கள் எது நல்லறிவு,எது அறிவு சூனியம் என்பதை அறிந்து நல்லறிவை மட்டும்…

  • உண்மையான காதல்

    காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இதுதான் நாகரிகம். காதல் திருமணம் அதிகரிப்பது நாகரிகத்தின் வளர்ச்சி என்பது தவறான பார்வை, தவறான கருத்து, இது அநாகரிகத்தின் ஆரம்பம். உண்மைக் காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பு. சாதி, மதம், பதவி, செல்வம், கல்வி, அழகு, இது எதையும் பார்க்காமல்…

  • அறியாமையே இன்பத்தை கொடுக்கும் !

    அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் யாரும் “அறியாமையே இன்பத்தை கொடுக்கும் “என்ற வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் எழுதிய” புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்த பிறகு இந்த வாக்கியத்தை படித்தால் மட்டுமே புரியும். அறிவைப் பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே கெட்ட அறிவை தவிர்த்து நல்ல அறிவை மட்டும் பெற முடியும். அறிவில் நல்லறிவு, கெட்டறிவு என்று இரண்டு அறிவு இருக்கா என்று பலருக்கும் வியப்பாக இருக்கும். அறிவைப் பற்றிய புரிதல்…

  • பயன்படாத ஒற்றை செருப்பு

    பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெரிந்து கொள்கின்ற தகவலால் பயனில்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகளை புரிந்துகொள்ளவே இதைப் படிக்கின்ற வாசகர்களுக்கு அறிவை சார்ந்த அறிவு இருக்க வேண்டும் இல்லை என்றால் என் எழுத்து பயனற்றது தான். எழுத்தாளர்களும் அவர்களுடைய எழுத்துக்களும் மக்களிடம் பிரபலம் ஆவதற்கு காரணம், மக்களிடம்…

  • மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்

    மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்பதையே அவருடைய பாடல் நமக்கு தெரியப்படுத்துகின்றது.திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகருக்கே அறிவைப் பற்றிய புரிதல் இல்லாத போது, நாம் யாரை அறிவாளியாக பார்ப்பது ?. அதற்கான பதில் நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற புத்தகத்தில் உள்ளது. நமக்குத் தெரிந்தது…

  • உணர்வின் கடிவாளம் அறிவு

    ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்ற வாழ்க்கையில்தான் உள்ளது. ஒருவனுடைய அறிவின் வெளிப்பாடு அவன் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் தான் வெளிப்படுகின்றது. இளைஞர்களை பார்த்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்வது மிக எளியது, ஆனால் இதுவரை யாரும் அறிவால் உணர்வுகளை எப்படி ஆளுமை செய்து ஒழுக்கமாக வாழ்வது…

  • பயனற்ற உபதேசங்கள்

    “கனவு காணுங்கள்” என்று டாக்டர் அப்துல்கலாமும், ” அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்” என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், அனைத்துக்கும் ஆசைப்படுவதும், பிறப்பால் நாம் பெற்ற உணர்வு, இந்த உணர்வுகள் அறிவால் பெறப்படுபவை அல்ல, அது பிறப்பின் இயல்பு. எனவே உணர்வை ஏற்படுத்துவது என்பது கல்லை பறக்காமல் அமுக்கி பிடிப்பது போன்றது. கல்லை எப்படி தூக்குவது என்பதை தெரிந்து கொள்வதற்குதான் நமக்கு அறிவு தேவைப்படுகின்றது.…

  • ஏழாவது அறிவு

    எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை… ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம்,அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே…

  • தேர்தல் கருத்துகனிப்பு ஊடகங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம்

    நான் எழுதிய ஏழாவது அறிவு என்ற ஆய்வு புத்தகத்தின்படி ஒரு மனிதன் எதை பார்கின்றானொ, எதை கேட்கின்றானோ அது அவனை அவன் அனுமதி இல்லாமலேயே ஆள ஆரம்பித்து விடும் என்பது விதி.அதன்படி ஊடகங்களின் தேர்தல் கருத்துகணிப்பு ஒருவரை ஆள ஆரம்பித்து விடுகின்றது,அதனால் அவன் ஓட்டு போடவிரும்பியவருக்கு போடாமல், வேறு ஒருவருக்கு ஓட்டு போடும் நிலையை ஊடகம் உறுவாக்குகின்றது என்பது உண்மை. இந்த தேர்தளை பொருத்தவரை யார் முதல்வராக வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள்…