தேர்தல்_ஜனநாயகம்
-
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்து மதமும் அன்பையும், நீதியையும் தான் மக்களுக்கு போதிக்கின்றது, கல்வி அறிவு இல்லாத காலத்தில் மக்களுக்கு நீதியை கற்பித்தது மதங்கள் தான். அந்த வகையில் இந்து மதத்தின் நீதியை தான் “சனாதன தர்மம்” என்று மதவாதிகள் சொல்கின்றார்கள். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பு…
-
தேர்தல் 2026
சீமான் முள் புதர்களை அகற்றி சாலை அமைத்துக் கொடுத்தார், விஜய் அதில் எளிதில் பயணம் செய்து கோட்டைக்கு சென்று விட்டார். சீமான் திராவிடம் மற்றும் தேசிய கட்சிகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்றால் விஜய் வெற்றி பெற்றிருக்க முடியாது. மக்கள் சீமானின் கொள்கையை ஏற்றுக் கொண்டார்களே தவிர சீமானை நம்பவில்லை, சீமான் தேர்தலில் தோற்றுவிட்டாலும் அவருடைய திராவிட ஒழிப்பு கொள்கை வெற்றி பெற்றுவிட்டது. கொள்கை வெற்றி பெற்றால் கொள்கைவாதியும் வெற்றி பெற்றதாக தான் பொருள். விஜய்…
-
தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு சரியா?
நாம் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நம் ஜனநாயக உரிமையை பறிப்பது இட ஒதுக்கீடு, தேர்தலில் இட ஒதுக்கீடு ஜனநாயகத்துக்கு எதிரானது, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் சம உரிமை இருக்கும்போது 33 சதவீத இட ஒதுக்கீடு எதற்கு? ஆண்களுக்கு நிகராக பெண் வாக்காளர்களும் இருப்பதால் பெண்களின் உரிமையை ஆண் எப்படி பறிக்க முடியும்? பெண்கள் பெண்களை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில் ஏன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு…
-
அரசியல் 🇮🇳🇮🇳
அரசியல் பேசாமல் அரசியலைப் பற்றி பேசுவோம் வாருங்கள், அரசியல் என்றால் என்ன?அரசியலை யார் கிட்ட பேசணும்? எங்க பேசணும் ?என்பதை பற்றிய என்னுடைய கருத்தே இந்த கட்டுரை. அரசியல் என்றால் என்ன? தனக்கு எந்த கொள்கையால் நன்மையோ அதை ஆதரித்து பேசுவது தான் அரசியல், இதுதான் ஜனநாயகம் நமக்கு கொடுக்கும் உரிமை. மதம், சாதி, மொழி, பொருளாதாரம், இனமென்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கான ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தான் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்கள். சிறுபான்மை இஸ்லாமியரை…
-
தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!
மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்கு ஏற்ப இந்த தலைப்பை நான் ஆய்வு செய்வதற்கு முன்னால் காவல்துறை அதிகாரி ரவி IPS அவர்களின் காணொளியை நான் பார்த்ததே காரணம். நான் பார்த்த காணொளியில் வடகொரிய மக்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள் என்று ரவி IPS…
-
சீமானின் சேவை நாட்டுக்கு தேவை !!!
சாதி, மதம், மொழி ஆகிய வேற்றுமையில் இருந்து விடுபட்டு மாநில உரிமை என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கான அரசியல் விழிப்புணர்வு கட்டுரைதான் இது. வாழ்க்கைக்கு பொருளாதாரமே ஆதாரம், ஒன்றிய அரசுக்கு நாம் கட்டும் வரி மீண்டும் மாநில நலனுக்காக வருகின்றதா என்றால் இல்லை, வரி என்ற பெயரில் நம் பொருளாதாரத்தை சுரண்டி தான் வடக்கில் வாழ்கின்றார்கள்.கண்ணுக்குத் தெரியாமல் நம் மக்களின் உழைப்பு வடக்கர்களால் சுரண்டப்படுகின்றது, நம் வரி பணத்தை செலவு செய்துதான் இந்தியை,சமஸ்கிருதத்தை…
-
விட்டில் பூச்சி
கரூர் சம்பவம் ஒருபுறம் வேதனையாக இருந்தாலும் மறுபுறம் மிகப் பெரும் தலை குனிவாக உள்ளது, வடநாட்டில் ஆன்மிகம் என்ற பெயரில் கூட்ட நெரிசலில் பலர் இறந்த சம்பவங்களை கேலி செய்த நாம் இன்று நம் மாநிலத்தில் அதைவிட கேவலமாக ஒரு நடிகனை பார்க்கச் சென்று விட்டில் பூச்சை போல் 39க்கும் மேல் உயிரை இழந்து இருக்கின்றார்கள் என்றால் நாம் எந்த அளவுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இருக்கின்றோம் என்பதற்கு இது ஒன்றே போதும். இரண்டு நாட்களுக்கு முன்…
-
தேர்தல் 2024
மத்தியில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தால் மட்டும் தான் நாடு முழுவதும் அதிகார பகிர்வு சீராக இருக்கும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும், அனைத்து மாநிலத்திற்கும் நிதி பகிர்வு சீராக இருக்கும், அனைத்து மாநில மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான அங்கீகாரம் கிடைக்கும், எனவே மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி அல்லது பிஜேபி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி, கூட்டாட்சி மட்டுமே தென் மாநிலங்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும். மத்தியில்…
-
வாக்குக்கு பணம் வாங்குவது குற்றமா?
வாக்கு என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமை, இந்த வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது நமது கடமை. நம்முடைய கடமையை சரியாக செய்தால் மட்டும் தான் நாமும், நம் நாடும் முன்னேறமுடியும். ஜனநாயகம் நமக்கு பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாக்குரிமையை அனைவர் கையிலும் கொடுத்துள்ளது, அதை நாம் பயனுள்ள வகையில் செலவு செய்தால் மட்டும் தான் சிறப்பாக வாழ முடியும். அரசியல் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவர்களுடைய விலைமதிப்பில்லா வாக்குரிமையை சரியாக பயன்படுத்துகிறார்கள்,அரசியல் முக்கியத்துவம்…
-
என் பார்வையில் அரசியல் (அரசியல் விழிப்புணர்வு கட்டுரை)
அரசியல்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. கல்வி அறிவு இல்லாமல் கூட இந்த உலகில் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக, சிறப்பாக வாழ முடியும், ஆனால் அரசியல் அறிவு இல்லாமல் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதற்கு சரித்திர நிகழ்வுகளே சான்று. முன்னோர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டால்தான் அவர்கள் பட்ட துன்பத்திலிருந்து சிறிதளவு அறிவை நாம் பெற முடியும். அரசியலால் அவர்கள் அனுபவித்த துன்பத்தை நாம் அறிவாக பெறவில்லை என்றால் நாமும், நம் சந்ததிகளும் வருங்காலத்தில் அரசியல்…
