மாநில_உரிமை

  • தேர்தல் 2026

    சீமான் முள் புதர்களை அகற்றி சாலை அமைத்துக் கொடுத்தார், விஜய் அதில் எளிதில் பயணம் செய்து கோட்டைக்கு சென்று விட்டார். சீமான் திராவிடம் மற்றும் தேசிய கட்சிகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்றால் விஜய் வெற்றி பெற்றிருக்க முடியாது. மக்கள் சீமானின் கொள்கையை ஏற்றுக் கொண்டார்களே தவிர சீமானை நம்பவில்லை, சீமான் தேர்தலில் தோற்றுவிட்டாலும் அவருடைய திராவிட ஒழிப்பு கொள்கை வெற்றி பெற்றுவிட்டது. கொள்கை வெற்றி பெற்றால் கொள்கைவாதியும் வெற்றி பெற்றதாக தான் பொருள். விஜய்…

  • சீமானின் சேவை நாட்டுக்கு தேவை !!!

    சாதி, மதம், மொழி ஆகிய வேற்றுமையில் இருந்து விடுபட்டு மாநில உரிமை என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கான அரசியல் விழிப்புணர்வு கட்டுரைதான் இது. வாழ்க்கைக்கு பொருளாதாரமே ஆதாரம், ஒன்றிய அரசுக்கு நாம் கட்டும் வரி மீண்டும் மாநில நலனுக்காக வருகின்றதா என்றால் இல்லை, வரி என்ற பெயரில் நம் பொருளாதாரத்தை சுரண்டி தான் வடக்கில் வாழ்கின்றார்கள்.கண்ணுக்குத் தெரியாமல் நம் மக்களின் உழைப்பு வடக்கர்களால் சுரண்டப்படுகின்றது, நம் வரி பணத்தை செலவு செய்துதான் இந்தியை,சமஸ்கிருதத்தை…

  • அனைத்து குடிமக்களும் சமம்

    மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து குடிமக்களும் சமம், அதன்படி அனைத்து மாநிலத்தில் வாழும் மக்களும் சமம், அனைத்து மாநில மக்களும் சமம் என்றால் மாநில மொழிகள் அனைத்திற்கும் சமமான அங்கீகாரம் வேண்டும். எனவே 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் அனைத்து குடிமக்களும் சமம் என்பதை உறுதிசெய்ய இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிக்கும் அங்கீகாரம் வேண்டும் என்று நம் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு நான் பெற்ற…

  • தேர்தல் 2024

    மத்தியில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தால் மட்டும் தான் நாடு முழுவதும் அதிகார பகிர்வு சீராக இருக்கும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும், அனைத்து மாநிலத்திற்கும் நிதி பகிர்வு சீராக இருக்கும், அனைத்து மாநில மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான அங்கீகாரம் கிடைக்கும், எனவே மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி அல்லது பிஜேபி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி, கூட்டாட்சி மட்டுமே தென் மாநிலங்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும். மத்தியில்…

  • என் பார்வையில் அரசியல் (அரசியல் விழிப்புணர்வு கட்டுரை)

    அரசியல்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. கல்வி அறிவு இல்லாமல் கூட இந்த உலகில் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக, சிறப்பாக வாழ முடியும், ஆனால் அரசியல் அறிவு இல்லாமல் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதற்கு சரித்திர நிகழ்வுகளே சான்று. முன்னோர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டால்தான் அவர்கள் பட்ட துன்பத்திலிருந்து சிறிதளவு அறிவை நாம் பெற முடியும். அரசியலால் அவர்கள் அனுபவித்த துன்பத்தை நாம் அறிவாக பெறவில்லை என்றால் நாமும், நம் சந்ததிகளும் வருங்காலத்தில் அரசியல்…

  • மும்மொழி கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்?

    1) மும்மொழி கல்விக் கொள்கை மாநில மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும். இருமொழிக்கொள்கை மாநில உரிமை, இதை மீறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் கல்வி கொள்கை இருக்க வேண்டும், மீறினால் உச்ச நீதிமன்றம், அல்லது ஐ நா தலையிடுவதற்கும், மத்திய அரசை எச்சரிப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே மும்மொழி கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 2). உலக ஆய்வின் முடிவு தாய்மொழியால் படிக்கும் மாணவர்களால் மட்டுமே அறிவிலும், சிந்தனைத் திறனிலும் சிறந்து…

  • ஒன்றிய அரசு

    நொண்டியை நொண்டி என்று சொல்வதுபோல் ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதில் என்ன தவறு. நொண்டியை போல் ஒன்றிய அரசு மாநிலங்களின் தோள்களில் சவாரி செய்துகொண்டு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று சுமக்கும் மாநிலத்தையே அடிமைப்படுத்த முயற்சிக்கும் போதுதான் ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்று நினைவுபடுத்த வேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு ஏற்படுகின்றது. சுமப்பவனை அடிமை என்று நொண்டி நினைக்கும் போதுதான் நொண்டிக்கு நொண்டி என்பதை சுமப்பவன் நினைவுபடுத்த…

  • நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும்

    ஒரு சமுதாயத்தின் அறிவு தான் அந்த சமுதாயத்தின் நீதியாக இருக்க முடியும். நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும். பெரும்பான்மை மக்களிடம் அறிவு மாற்றமில்லாமல் நீதி மாற்றம் ஏற்படாது. ஒரு நடிகையின் தற்கொலைக்கான காரணத்தை தெரிந்துகொள்ள மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கும் ஆர்வம் மாநில பொருளாதாரம், கல்வி, மொழி ஆகியவற்றின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என்பதில் இல்லை. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கடமை ஊடகங்களுக்கு தான் அதிகம் உள்ளது ஆனால் இங்கு ஊடகங்களால் அனைத்தும்…

  • தேர்தல் முறை மாறவேண்டும்

    தேர்தல் முறை மாறவேண்டும்!! இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 20% வாக்கை பெற்று மொத்த வாக்கில் அதிகம் பெற்ற கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று சட்டம் இயற்றப்பட்டால் தான், ஒவ்வொரு மாநில கட்சிகளின் ஆதரவும் மத்திய அரசுக்கு தேவைப்படும், அப்போது வட இந்தியர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என்ற நிலை மாறி தென் மாநிலத்தவரும் இந்தியர் தான் என்ற நிலை உருவாகும். ஓவ்வொரு மாநில மொழிக்கும் தேசிய மொழி அங்கீகாரம் கிடைக்கும்.அனைத்து…

  • இந்தி மொழியை கற்கலாமா ?

    மத்திய அரசின் நிர்ப்பந்தம் இல்லாமல் விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழியை கற்கலாமா ? அறிவை பற்றி நான் செய்த ஆய்வில் கிடைத்த விடை —நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோம், எதை உணர்கின்றோமோ, அது நம்மை, நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளஆரம்பித்துவிடும் என்பதே,இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. நாம் பெறுகின்ற அறிவு அனைத்தும் நமக்கு நன்மையை செய்யாது. நாம் பெற்ற பல அழிவுகள் நமக்கு சூனியம்மாகவே அமைந்துவிடுகின்றன.அதனடிப்படையில் இந்தியை தாய்மொழியாக இல்லாதவர்கள் இந்தியை விரும்பி கற்றுக்கொண்டால் அது…