திமுக

  • அரசியல் 🇮🇳🇮🇳

    அரசியல் பேசாமல் அரசியலைப் பற்றி பேசுவோம் வாருங்கள், அரசியல் என்றால் என்ன?அரசியலை யார் கிட்ட பேசணும்? எங்க பேசணும் ?என்பதை பற்றிய என்னுடைய கருத்தே இந்த கட்டுரை. அரசியல் என்றால் என்ன? தனக்கு எந்த கொள்கையால் நன்மையோ அதை ஆதரித்து பேசுவது தான் அரசியல், இதுதான் ஜனநாயகம் நமக்கு கொடுக்கும் உரிமை. மதம், சாதி, மொழி, பொருளாதாரம், இனமென்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கான ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தான் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்கள். சிறுபான்மை இஸ்லாமியரை…

  • சீமானின் சேவை நாட்டுக்கு தேவை !!!

    சாதி, மதம், மொழி ஆகிய வேற்றுமையில் இருந்து விடுபட்டு மாநில உரிமை என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கான அரசியல் விழிப்புணர்வு கட்டுரைதான் இது. வாழ்க்கைக்கு பொருளாதாரமே ஆதாரம், ஒன்றிய அரசுக்கு நாம் கட்டும் வரி மீண்டும் மாநில நலனுக்காக வருகின்றதா என்றால் இல்லை, வரி என்ற பெயரில் நம் பொருளாதாரத்தை சுரண்டி தான் வடக்கில் வாழ்கின்றார்கள்.கண்ணுக்குத் தெரியாமல் நம் மக்களின் உழைப்பு வடக்கர்களால் சுரண்டப்படுகின்றது, நம் வரி பணத்தை செலவு செய்துதான் இந்தியை,சமஸ்கிருதத்தை…

  • சுயமரியாதை

    இந்துமத நடைமுறையில் சமத்துவம் மறுக்கப்படுகின்றது என்று குரல் கொடுக்கும் சுயமரியாதை இயக்கமான திக, திமுக தலைவர்கள், இந்த நாட்டின் உயர் பதவியில் உள்ள ஜனாதிபதி, விருது வழங்கும் விழாவில் சமத்துவம் இல்லாமல் விருது வாங்குபவர் ஜனாதிபதியை விட ஒரு படி கீழே இருந்துதான் விருதை வாங்க வேண்டும் என்ற நடைமுறை சுயமரியாதை இயக்கமான திக, திமுக வுக்கு தெரியாதா! ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தகுதி எம்எல்ஏ, எம்பி க்கு இருப்பதால், ஜனாதிபதியின் தவற்றை சுட்டிக்காட்டவும் எம்எல்ஏ, எம்பி க்கு…

  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!!

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது. பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னது அவருடைய கருத்து, ஆதாரம் இல்லாத ஒருவருடைய கருத்தை வேறு ஒருவர் கருத்தால் நிராகரிக்கலாம், கடவுள் இல்லை என்பதற்கும், இருக்கு என்பதற்கும் ஆதாரம் இதுவரை யாரும் கொடுக்கவில்லை, எனவே இரண்டு கருத்தும் நம்பிக்கையை சார்ந்தே உள்ளது. திமுக வின்…

  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் ஆளுமைமிக்க முதல்வராக ஸ்டாலின் வெற்றி வாகை சூடி இருப்பதற்கு வாழ்த்துக்கள். உழைப்பும், நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே சான்று. ஜெயலலிதா அவர்கள் இறந்த உடனேயே குறுக்கு வழியில் ஸ்டாலின் முயற்சி செய்திருந்தால் நான்கு ஆண்டுகள் முதல்வர் பதவியை அனுபவித்திருக்கலாம், ஆனால் அவர் அதற்கு ஆசைப்படாமல் நேர்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக தான் பதவியேற்பேன் என்று சொன்னது அவருடைய நேர்மைக்குச்…

  • வாழ்க தமிழ் ! சரியான முழக்கமா ?

    தமிழ் வாழ்க என்று சொல்லும் அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இதுவரை அதற்கான முயற்சியை செய்து இருக்கின்றார்களா என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். நம்முடைய இலக்கு தமிழ் மொழியும், இந்தி மொழியைப்போல் தேசிய அலுவல் மொழிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான். இந்த அங்கீகாரம் நம் மொழிக்கு கிடைத்தால் மட்டுமே நம் மொழி நமக்கு பயனுள்ள மொழியாக இருக்கும். தற்போதுள்ள மொழிக் கொள்கையின் படி, இந்தியைத் தவிர அனைத்து மாநில மொழிகளும் பயனில்லாத மொழிகள்…

  • மாநில சுயாட்சிக் கொள்கையே வென்றது

    பெருந்தலைவர் காமராசர் தேர்தலில் தோற்றதற்கு மக்களின் அறியாமை காரணமல்ல. காமராசர் சார்ந்திருந்த காங்கிரஸ்தான் அதற்கு காரணம்.காங்கிரசுக்கும், திமுக வுக்கும் நடந்த கொள்கை போரில் திமுகவின் மாநில சுயாட்சிக் கொள்கையே வென்றது.காமராசரைவிட அண்ணா நேர்மையானவர், ஒழுக்கமானவர், என்பதற்காக நம் முன்னோர்கள் அண்ணாவை தேர்ந்தெடுக்க வில்லை என்பதை இளைஞர்கள் நினைவில் வைத்துககொள்ள வேண்டும்.மாநில கட்சியான திமுக 1967 இல் தமிழ்நாட்டில் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் நாம் வட மாநிலத்தவருக்கு அடிமைகளாகதான் இருந்திருப்போம். யாரும் இங்கு நேர்மையானவன் அல்லஅனைவரும் பதவிக்கு தான்…

  • மும்மொழி கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ?

    இது அரசியல் பதிவு அல்ல, தமிழர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மக்களும் தன் மொழி உரிமையை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும், ஒரு சில மாநில கட்சிகள் பிஜேபி கட்சியுடன் இணைந்து முன்மொழி கொள்கையை ஆதரிப்பது அரசியல் சுயநலத்துக்காக தான்.அவர்களுக்கு தமிழர்கள் மீதும், மொழியின் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் அரசியல் கைக்கூலிகள். பதவி அதிகாரத்தைப் பெற மக்களின் மொழி உணர்வை கருணாநிதி பயன்படுத்தியதை போல் ஸ்டாலின் செய்யாமல், உண்மையிலேயே தமிழுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் மொழி…