ஸ்டாலின்
-
தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!
மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்கு ஏற்ப இந்த தலைப்பை நான் ஆய்வு செய்வதற்கு முன்னால் காவல்துறை அதிகாரி ரவி IPS அவர்களின் காணொளியை நான் பார்த்ததே காரணம். நான் பார்த்த காணொளியில் வடகொரிய மக்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள் என்று ரவி IPS…
-
எதிர்த்து அடி
அடிப்பதை தடுத்து கொண்டு இருந்தால் தொடர்ந்து அடித்துக் கொண்டு தான் இருப்பார்கள், நாம் திருப்பித் தாக்கினால் தான் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஹிந்தியை எதிர்ப்பது என்பது அடியை தடுப்பது போல் தான், இது போன்ற மக்களை ஏமாற்றும் அரசியலை திரு ஸ்டாலின் அவர்கள் செய்யாமல் அனைத்து மாநில மொழிகளுக்கும் ஹிந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழி உரிமை வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டம் நடத்தினால் மட்டுமே நம் மொழியை நாம் பாதுகாக்க முடியும். மொழியைப்…
-
மொழி விடுதலைக்கு புதிய உத்தி
செப்டம்பர் 14 யை ஹிந்தி தினமாக கொண்டாடும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்யை தெரிவித்து அனைத்து மாநில மொழிகளையும் ஹிந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழியாக அறிவித்து, அனைத்து தேசிய அலுவல் மொழி தினமாக செப்டம்பர் 14 யை கொண்டாட வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கைக்கு காரணம் மே 2013 அன்று நெய்வேலியில் ஒருவருடைய சிந்தனையில் உருவான சிறுபொரி தான் என்றால் நம்பமுடியுமா !…
-
ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம்
ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி குறைத்தால் அது அரசியல் நகர்வாக தான் இருக்கும். அதுவே என்னுடைய இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து தண்டனையை குறைத்தால் அது அறிவியல் பூர்வமான, அறிவு பூர்வமான, உலகுக்கே முன்னுதாரணமாக இருக்கும்.] நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம்…
-
எது இலவசம்?
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 4000 ரூபாய் குடும்ப உதவி திட்டம் உலகம் போற்றும் சிறந்த திட்டம், இதை இலவசம் என்று நினைப்பது தவறான புரிதல். வரி கட்டுவது எப்படி தனி மனிதனின் கடமையோ அதுபோல் அரசு மக்களுக்கு உதவி செய்வதும் அரசின் கடமை. இலவசத்திற்கும், பொருளாதார சமன்பாட்டிற்கும் வேற்றுமை உண்டு, இந்த வேற்றுமையை புரியாதவர்கள் தான் அரசு மக்களுக்கு செய்யும் நலத் திட்டங்கள் அனைத்தையும் இலவசம் என்று எண்ணுகின்றார்கள். அரசு ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்தால் அது…
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் ஆளுமைமிக்க முதல்வராக ஸ்டாலின் வெற்றி வாகை சூடி இருப்பதற்கு வாழ்த்துக்கள். உழைப்பும், நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே சான்று. ஜெயலலிதா அவர்கள் இறந்த உடனேயே குறுக்கு வழியில் ஸ்டாலின் முயற்சி செய்திருந்தால் நான்கு ஆண்டுகள் முதல்வர் பதவியை அனுபவித்திருக்கலாம், ஆனால் அவர் அதற்கு ஆசைப்படாமல் நேர்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக தான் பதவியேற்பேன் என்று சொன்னது அவருடைய நேர்மைக்குச்…
-
மும்மொழி கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ?
இது அரசியல் பதிவு அல்ல, தமிழர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மக்களும் தன் மொழி உரிமையை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும், ஒரு சில மாநில கட்சிகள் பிஜேபி கட்சியுடன் இணைந்து முன்மொழி கொள்கையை ஆதரிப்பது அரசியல் சுயநலத்துக்காக தான்.அவர்களுக்கு தமிழர்கள் மீதும், மொழியின் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் அரசியல் கைக்கூலிகள். பதவி அதிகாரத்தைப் பெற மக்களின் மொழி உணர்வை கருணாநிதி பயன்படுத்தியதை போல் ஸ்டாலின் செய்யாமல், உண்மையிலேயே தமிழுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் மொழி…
