இலவசத்_திட்டம்

  • தொழிலாளிக்கு முதலாளி எதிரியா?முன்மாதிரியா?

    நமக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவரைப் போலவே இருவரும் நினைப்பதால் தான் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நான் ஆறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து நெய்வேலியில் நம்பர் ஒன் மின் ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்ததால் எனக்கு தொழிலாளியின் கஷ்டங்களும் தெரியும், முதலாளியின் கஷ்டங்களும் தெரியும். எனவே இந்த கட்டுரையை நான் எழுதுவது மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதி இருக்கும்…

  • தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறை சரியா?

    தமிழக மின்துறை அமைச்சரின் பார்வைக்கு இந்த கட்டுரை சென்று அனைவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன், எனவே அனைவரும் பகிருங்கள். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறையில் முதல் 100 யூனிட் வரை அனைவருக்கும் இலவசம். 200 யூனிட்டுக்குல் பயன்படுத்தினால் 100 யூனிட் முதல் 200…

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மண்டையில் இது ஏறுமா?

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் என் எல் சி யை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தியது என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அதிக இழப்பீடு வாங்கி கொடுக்க அல்ல. வரும் காலத்தில் கடலூர் மாவட்டம் மக்கள் தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல் செத்து மடிந்து விடக்கூடாது என்பதற்காக தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 60 ஆண்டு காலமாக நெய்வேலியை சுற்றி உள்ள பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல்…

  • எது இலவசம்?

    முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 4000 ரூபாய் குடும்ப உதவி திட்டம் உலகம் போற்றும் சிறந்த திட்டம், இதை இலவசம் என்று நினைப்பது தவறான புரிதல். வரி கட்டுவது எப்படி தனி மனிதனின் கடமையோ அதுபோல் அரசு மக்களுக்கு உதவி செய்வதும் அரசின் கடமை. இலவசத்திற்கும், பொருளாதார சமன்பாட்டிற்கும் வேற்றுமை உண்டு, இந்த வேற்றுமையை புரியாதவர்கள் தான் அரசு மக்களுக்கு செய்யும் நலத் திட்டங்கள் அனைத்தையும் இலவசம் என்று எண்ணுகின்றார்கள். அரசு ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்தால் அது…

  • மக்கள் முன்னேறவே முடியாது

    நோயாளியின் நோய்க்கு தேவையான மருந்தும் பரிசோதனையும் எழுதாமல் தனக்கு எதில் லாபம் அதிகமோ அதை எழுதும் மருத்துவர் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த செய்தி நல்லதோ அதை சொல்லாமல் ஊடகத்திற்கு எந்த செய்தி லாபத்தை கொடுக்கின்றதோ அதை சொல்லும் ஊடகங்கள் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த திட்டம் நல்லதோ அதை கொண்டுவராமல், அரசியல் தலைவருக்கு பயன் தரக்கூடிய திட்டத்தையும்,இலவச திட்டத்தையும் கொண்டுவரும் அரசியல் தலைவர் இருக்கும் வரை! யார் சிறந்த தலைவர் என்று பார்க்காமல் யார் பணம்…