அரசியலமைப்புச்_சட்டம்
-
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்து மதமும் அன்பையும், நீதியையும் தான் மக்களுக்கு போதிக்கின்றது, கல்வி அறிவு இல்லாத காலத்தில் மக்களுக்கு நீதியை கற்பித்தது மதங்கள் தான். அந்த வகையில் இந்து மதத்தின் நீதியை தான் “சனாதன தர்மம்” என்று மதவாதிகள் சொல்கின்றார்கள். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பு…
-
சாதி ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை!
மனிதர்களுக்கு இடையில் சாதி சமத்துவம் வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், அரசியல் லாபத்திற்காக சிறுபான்மை மக்கள் அரசியல் செல்வாக்கை பெற வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு “சாதி ஒழிய வேண்டும் “என்று பொய் பிரச்சாரங்கள் செய்து மக்களை நம்ப வைத்து விட்டார்கள். சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதுதான் முற்போக்கு சிந்தனை என்று எண்ணி, படித்த அறிவில்லாதவர்கள் மக்களிடம் சாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் திணித்தார்கள். சாதி ஒழிய வேண்டும் என்பது…
-
சனாதன தர்மம்
அறிவைப் பற்றிய அறிவு ஆயிரத்தில் ஒருவருக்கு கூட இல்லை என்பதால் தான் சனாதன தர்மத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள்.அறிவைப் பற்றிய புரிதல் மக்களுக்கு வந்து விட்டால் (அழியாத நீதி )சனாதன தர்மம் என்ற ஒன்று இந்த உலகில் எதுவும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். சனாதன தர்மம் (அழியாத நீதி )என்று இந்த உலகில் எதுவுமே இல்லை. ஒரு மனிதனின் அறிவு வளர வளர நீதி மாறிக்கொண்டே தான் இருக்கும், இதை யாராலும் தடுத்து நிறுத்த…
-
தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறை சரியா?
தமிழக மின்துறை அமைச்சரின் பார்வைக்கு இந்த கட்டுரை சென்று அனைவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன், எனவே அனைவரும் பகிருங்கள். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறையில் முதல் 100 யூனிட் வரை அனைவருக்கும் இலவசம். 200 யூனிட்டுக்குல் பயன்படுத்தினால் 100 யூனிட் முதல் 200…
-
சுதந்திர இந்தியாவில் இந்திய குடிமக்கள் அனைவரும் சமமா !
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற பாதுகாப்பைக் கொடுக்கின்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு குடியரசுத் தலைவருக்கும் அவருக்கு இணையாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிஅரசருக்குமே உள்ளது. ஒன்றிய மந்திரிசபை அனுப்பும் கோப்புகளில் கையெழுத்து போடும் அதிகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு இல்லை, தானாக முன்வந்து சில உத்தரவுகளையும் ஒன்றிய அரசுக்கு பிறப்பிக்கவும் உரிமை உள்ளது, அது போல் வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிப்பது மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை…
-
அனைத்து குடிமக்களும் சமம்
மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து குடிமக்களும் சமம், அதன்படி அனைத்து மாநிலத்தில் வாழும் மக்களும் சமம், அனைத்து மாநில மக்களும் சமம் என்றால் மாநில மொழிகள் அனைத்திற்கும் சமமான அங்கீகாரம் வேண்டும். எனவே 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் அனைத்து குடிமக்களும் சமம் என்பதை உறுதிசெய்ய இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிக்கும் அங்கீகாரம் வேண்டும் என்று நம் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு நான் பெற்ற…
-
யாரிடமும் சொல்லிடாதீங்க
திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலு அவர்கள் நடித்த ஒரு திரைப்பட காட்சியில், ஏரியிலிருந்து ஒருவர் வெளியே வந்து வடிவேலு இடம் யாரிடமும் சொல்லிடாதீங்க என்று சொல்லிவிட்டு ஏரியில் மறைந்து கொள்வார், எதடா சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போற என்று வடிவேலு கேட்பார் அதற்கு மீண்டும் சொல்லிடாதீங்க என்று சொல்லி ஏரியில் மறைந்து கொள்வான், போலீஸ் வடிவேலிடம் என்னடா சொல்லிவிட்டு போனான் என்று கேட்பார்கள், அதற்கு வடிவேலு சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போனான் சார் என்று சொல்வது அனைவரும் ரசிக்கக்கூடிய நகைச்சுவையாக…
-
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் சாகடிக்கப்பட்ட விஷப்பாம்பு. செத்த பாம்பை அடிப்பது போன்றது தான் சனாதன எதிர்ப்பு. செத்த பாம்புக்கு உயிர் கொடுக்க முயற்சிப்பது தான் சனாதனத்திற்கு ஆதரவாக பேசுவோரின் நோக்கம். சனாதனம் என்ற வார்த்தையின் பொருள் ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதுதான். தர்மம் என்ற வார்த்தையின் பொருள் நீதி. சனாதன தர்மம் என்பது ஆரம்பமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் நிலைத்து நிற்கும் நீதி என்று பொருள். வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும் பொழுது…
-
சபதம்
சுதந்திர தின உறுதிமொழி இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 ளின் படி அனைத்து மாநில மக்களும் சமம் என்ற பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எப்போது இந்தியை போல் அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான அங்கீகாரம் கிடைக்கின்றதோ அப்போதுதான் நான் சுதந்திர தினத்தை கொண்டாடுவேன் என்று சபதம் ஏற்கின்றேன்.
