சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு
-
கடந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் மாற்ற முடியுமா?
திரைப்படங்கள், கார்ட்டூன் படங்களில் டைம் டிராவல் செய்து கடந்த காலத்துக்குச் சென்று, கடந்தகால நிகழ்வுகளை மாற்றுவது போல் நாம் திரைப்படம் பார்த்திருப்போம், அதுபோல் திரைப்பட நடிகர் பார்த்திபன் கடந்தகால நிகழ்வுகளின் தொடர்பு இல்லாமல் எந்த மதத்தையும், சாதியையும் சாராமல், பெற்றோர்களே இல்லாமல், பெற்றோர்கள் இல்லாததால் தாய்மொழியே இல்லாத ஒரு புது மனிதனாக இந்த தமிழ்நாட்டில் 27/4/26 அன்று முதல் பார்த்திபன் என்ற நபர் இந்த விலாசத்தில் வாழ்கின்றார் என்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சான்று அளித்துள்ளார் இதை பார்க்கும் போது…
-
தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!
மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்கு ஏற்ப இந்த தலைப்பை நான் ஆய்வு செய்வதற்கு முன்னால் காவல்துறை அதிகாரி ரவி IPS அவர்களின் காணொளியை நான் பார்த்ததே காரணம். நான் பார்த்த காணொளியில் வடகொரிய மக்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள் என்று ரவி IPS…
-
சாதி
திறமையான திருடனை இந்த சமுதாயம் திருடனாக ஏற்றுக் கொள்ளாது. திறமை இல்லாமல் திருடி மாட்டிகொண்டவனை தான் திருடனாக ஏற்றுக்கொள்ளும். அதுபோல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், மக்களிடம் சாதி உணர்வை தூண்டியும், சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லியும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் தலைவர்களைத் தான் ஆளுமை மிக்க தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்,நேர்மையான, ஒழுக்கமான, அனைவரையும் சமமாக பார்க்கும் திறமையான அரசியல் தலைவர்களை மக்கள் அரசியல் தலைவராகவே ஏற்க மாட்டார்கள்.இது மக்களின் தவறல்ல, இது இயற்கையின் நீதி.…
-
அரசியல் சூழ்ச்சி
சமூக நீதிக்கு எதிராக சாதி ஒழிய வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் மக்களை ஏமாற்றி, சிறுபான்மை சாதியினர் மக்களை கடந்த 75 ஆண்டுகளாக ஆண்டு விட்டார்கள், செல்வங்களையும் பல ஆயிரம் கோடிக்கு சேர்த்து விட்டார்கள். மக்களிடம் சாதி உணர்வை தூண்டி பெரும்பான்மை சாதியின் தலைவர்களான ராமதாஸ், திருமாவளவன் போன்ற தலைவர்கள் பல கோடிகளை சம்பாதித்து மிகப்பெரிய ஆளுமையாக இந்த சமுதாயத்தில் வாழ்கின்றார்கள். ஆனால் மக்கள் சாதியைப் பற்றிய புரிதல் இல்லாமல் சாதி ஒழியனும் என்றாலும் கை தட்டுகின்றான்,…
-
சாதி ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை!
மனிதர்களுக்கு இடையில் சாதி சமத்துவம் வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், அரசியல் லாபத்திற்காக சிறுபான்மை மக்கள் அரசியல் செல்வாக்கை பெற வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு “சாதி ஒழிய வேண்டும் “என்று பொய் பிரச்சாரங்கள் செய்து மக்களை நம்ப வைத்து விட்டார்கள். சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதுதான் முற்போக்கு சிந்தனை என்று எண்ணி, படித்த அறிவில்லாதவர்கள் மக்களிடம் சாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் திணித்தார்கள். சாதி ஒழிய வேண்டும் என்பது…
-
சீ..சீ..இந்த பழம் புளிக்கும்
வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிருக்கும் அறிவு நமக்கு இன்பத்தை கொடுத்தால் அது நல்லறிவு,துன்பத்தைக் கொடுத்தால் அதற்கு அறிவு சூனியம் என்று பொருள். பலர் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அறிவு சூனியத்தால் துன்பத்தில் வாழ்கின்றார்கள் எது நல்லறிவு,எது அறிவு சூனியம் என்பதை அறிந்து நல்லறிவை மட்டும்…
-
என் பார்வையில் அரசியல் (அரசியல் விழிப்புணர்வு கட்டுரை)
அரசியல்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. கல்வி அறிவு இல்லாமல் கூட இந்த உலகில் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக, சிறப்பாக வாழ முடியும், ஆனால் அரசியல் அறிவு இல்லாமல் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதற்கு சரித்திர நிகழ்வுகளே சான்று. முன்னோர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டால்தான் அவர்கள் பட்ட துன்பத்திலிருந்து சிறிதளவு அறிவை நாம் பெற முடியும். அரசியலால் அவர்கள் அனுபவித்த துன்பத்தை நாம் அறிவாக பெறவில்லை என்றால் நாமும், நம் சந்ததிகளும் வருங்காலத்தில் அரசியல்…
