சாதி_வன்கொடுமை

  • சாதி நல்லிணக்க கட்டுரை

    நம்முடைய உரிமையை போராடி பெற முடியும், ஆனால் ஒருவருடைய அன்பையும், நம்பிக்கையையும் போராட்டத்தால் பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மனித குல ஒற்றுமைக்கு நம்பிக்கையும், அன்புமே முதன்மையானது. என்னை நம்பி தான் ஆக வேண்டும் என்று கெஞ்சுவதாலோ அல்லது மிரட்டுவதாலோ யாரும் யாரையும் நம்ப மாட்டார்கள், நம்பிக்கை என்பது ஒருவர் மீது தானாக வரவேண்டும். நாம் ஒருவரை நம்ப வேண்டும் என்று நினைத்தாலும் அவருடைய இறந்த கால செயல்கள் நமக்கு நம்பிக்கை கொடுக்காவிட்டால்…

  • சாதி தீண்டாமையை ஒழித்த முதல் மாநிலம் தமிழகமே!

    சாதி, மத நல்லிணக்கத்தில் தமிழகமே முதன்மையான மாநிலம், தமிழகம் அமைதி பூங்கா, சாதி வன்கொடுமையால் தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது இல்லை என்பதே இதற்கு சான்று. இந்த பெருமை தமிழர்களையே சேரும் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரத்தில் வன்னியர்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியதை கேட்கும்போது ஒரு அச்சத்தை ஏற்படுத்திருக்கின்றது, காரணம் வருங்காலங்களில் நம்முடைய உடைமைகளை இவர்களிடம் இருந்து பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியே. சாதியால்…

  • பல்லக்கு தூக்குவது சரியா?

    சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பதால் மனிதனை மனிதன் பல்லக்கில் சுமப்பது தவறு. எனவே தமிழக அரசு தடை விதித்தது சட்டப்படி சரியே, ஆனால் பல்லக்கு தூக்குவது என்பது தேர் இழுப்பது போல் ஒரு பாரம்பரிய நிகழ்வு என்றால் அரசு அனுமதித்தால் தவறு இல்லை. சாதியால் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்துவது சட்டத்தின் பார்வையில் வன்கொடுமை என்பதால், பாரம்பரியப்படி உயர்ந்த சாதியினரை தான் தாழ்ந்த சாதியினர் பல்லக்கில் வைத்து சுமந்தார்கள், எனவே பல்லக்கில் இருப்பவர் எந்த சாதியோ அதே…

  • சமூக நீதி என்றால் என்ன?

    சமூக நீதி என்பது சாதி அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து துறையிலும் இட ஒதுக்கீடு கொடுப்பதுதான். முன்னேறிய சாதியினருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல், அரசியல் லாபத்திற்காக பின்தங்கிய சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்வது சமூகநீதி அல்ல. சாதியால் குடும்பங்கள் கூடி வாழ்வதும் தவறில்லை, சாதி தீண்டத்தகாத வார்த்தையும் இல்லை. சாதிக்கு ஒரு நீதி தான் தவறானது, எனவே சமூக நீதியை உருவாக்கிவிட்டால் சாதியை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதியை தீண்டத்தகாத…

  • தேர்தல் இடஒதுக்கீட்டால் மக்களிடம் சமத்துவம் மலருமா?

    தேர்தலில் இடஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை, கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது சமுதாய நீதி, தனிமனித உரிமை என்ற என்னுடைய ஆய்வுக்கட்டுரையை பல ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் அது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அதற்கு காரணம் தனக்கு எது நல்லதோ அது தான் சரியானது என்ற சிந்தனை நம்மில் பலரிடம் இருப்பதும், புதிய கருத்தை வெளிப்படுத்த அஞ்சுவதுவுமே,எல்லோரையும் போல் மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று சொல்லி விட்டால் பிரச்சனை இல்லை. கடவுள் தெரியவில்லை என்று சொல்லி விட்டால்…

  • பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார்?

    பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார் ?கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானதா?சட்டப்படி அது குற்றமா ? கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம், அது தனிமனித உரிமை. எனவே கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.ஆனால் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுளின் படத்தை செருப்பால் அடித்து சிறுமை படுத்தினால் அது மத நம்பிக்கைக்கு எதிரான குற்றம். இதை பெரியாரும், திராவிடர் கழகத் தொண்டர்களும் 50 ஆண்டுகளுக்கு முன் செய்தார்களா என்றால்,…

  • பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்தது சரியா?

    பெரியாரின் முற்போக்குச் சிந்தனையில் மாறுபட்ட கருத்துக்கள் எனக்கு இருந்தாலும், சமூகப் போராளியாக பெரியார் இருந்ததால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் உடன்படுகிறேன். ராமர் படத்தை செருப்பால் அடித்ததன் நோக்கம், இந்து கடவுளை சிறுமைப்படுத்த அல்ல, இந்து கடவுளின் பெயரால் உழைக்கும் இந்து மக்களை அடிமைப்படுத்தி இருந்த உயர் சாதி இந்துக்களுக்கு எதிரான போராட்டம். ராமர் படத்தை அன்று பெரியார் செருப்பால் அடிக்க வில்லை என்றால் நாம் இன்று கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் சமத்துவத்தை பெற்றிருக்க மாட்டோம்.…

  • சாதி ஒதுக்கீட்டுக்குல் பொருளாதார ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்

    தொழில் சார்ந்து சாதி உருவாகியது, பொருளாதாரத்தை சார்ந்து உயர்ந்த சாதி,தாழ்ந்த சாதி, என்ற எண்ணம் மக்களிடம் தோன்றியது.பொருள் படைத்தவன் ஏழையை அடிமைப்படுத்தினான் இதை தான் சாதிக் கொடுமை என்று எண்ணுகின்றோம் பொருள் இல்லாததால் தான் அவன் கொடுமைப் படுத்தப்பட்டான் என்பதை புரிந்து கொண்டால் சாதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து சாதியினரும் அனைத்து தொழிலையும் செய்யலாம் என்பதும், கல்வி, வேலைவாய்ப்பில், சாதி ஒதுக்கீடு என்பதும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் ஏழைகள் வறுமையின் கொடுமையில் இருந்து விடுபடுவார்கள் என்ற அரசின்…

  • வேறுபாடுகள்

    முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அழிந்துவிடும். ஆனால் மக்களிடம் உள்ள வேற்றுமை உணர்வு அழியாது.அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, மதக்குருக்கலாக இருந்தாலும் சரி. அனைவரும் சாதி வேறுபாடு ஒழிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே புதிய வேறுபாட்டை ஆதரிக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் மற்றவர் இடம் இருந்து வேறுபட்டு…