பொருளாதாரக்_கொள்கை

  • ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை!

    மக்களின் மனநிலை மாறாமல் ஆட்சி மாற்றத்தால் மட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது, பயிர் கடனாக இருந்தாலும் சரி,கல்வி கடனாக இருந்தாலும் சரி, கடன் என்றால் திருப்பி கொடுப்பதுதான் நீதி. மக்களின் வரிப்பணம் தனி மனிதன் வாங்கியிருக்கும் கடனை தள்ளுபடி செய்ய அரசு செலவு செய்கின்றது என்றால் அது வரிகட்டும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். 30 சதவிகித விவசாயிகள் மட்டுமே பயிர் கடன் வாங்கி இருப்பார்கள்,அனைத்து விவசாயிகளும் பயிர் கடன் வாங்குவது இல்லை. நானும் விவசாயி…

  • தொழிலாளிக்கு முதலாளி எதிரியா?முன்மாதிரியா?

    நமக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவரைப் போலவே இருவரும் நினைப்பதால் தான் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நான் ஆறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து நெய்வேலியில் நம்பர் ஒன் மின் ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்ததால் எனக்கு தொழிலாளியின் கஷ்டங்களும் தெரியும், முதலாளியின் கஷ்டங்களும் தெரியும். எனவே இந்த கட்டுரையை நான் எழுதுவது மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதி இருக்கும்…

  • தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறை சரியா?

    தமிழக மின்துறை அமைச்சரின் பார்வைக்கு இந்த கட்டுரை சென்று அனைவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன், எனவே அனைவரும் பகிருங்கள். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறையில் முதல் 100 யூனிட் வரை அனைவருக்கும் இலவசம். 200 யூனிட்டுக்குல் பயன்படுத்தினால் 100 யூனிட் முதல் 200…

  • NLC யே வெளியேறு !

    NLC ஏன் வெளியேற வேண்டும் ?1). விளைநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்தால் தொழிற்சாலையை மூடிய பிறகு அந்த இடத்தில் மீண்டும் விவசாயம் செய்யலாம் ஆனால் சுரங்கம் அமைத்தால் அந்த இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் விவசாயம் செய்ய முடியாது, வரும்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நம் யாருக்கும் உரிமை இல்லை! 2). NLC நிறுவனம் தூவங்குவதற்கு முன் பத்து அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 400 அடியாக அதிகரித்துவிட்டது இதனால் NLC ஐ சுற்றி உள்ள பகுதியில் விவசாயம்…

  • வேகத்தடை

    சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடை வாகனங்களுக்கான வேகத்தடை மட்டுமல்ல, அந்த வழியாக செல்லும் ஒவ்வொரு மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தையும் தடை செய்யும் வேகத்தடை. இது நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் தடை. வாகனங்களுக்காக நம் நாடு இறக்குமதி செய்யும் எரிபொருளில் 20 சதவிகிதம் வேகத்தடையாலேயே அழிக்கப்படுகின்றது, இதை நம்பமுடியவில்லை என்றாலும் இது அறிவியல் பூர்வமான உண்மை. ஒரு வாகனம் வேகத்தடைக்காக break ஐ பயன்படுத்தும்போது வாகனத்தின் வேகத்தையும், எடையையும் பொறுத்து Momentum loss ஆகின்றது இந்த Moment…

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மண்டையில் இது ஏறுமா?

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் என் எல் சி யை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தியது என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அதிக இழப்பீடு வாங்கி கொடுக்க அல்ல. வரும் காலத்தில் கடலூர் மாவட்டம் மக்கள் தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல் செத்து மடிந்து விடக்கூடாது என்பதற்காக தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 60 ஆண்டு காலமாக நெய்வேலியை சுற்றி உள்ள பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல்…

  • எது இலவசம்?

    முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 4000 ரூபாய் குடும்ப உதவி திட்டம் உலகம் போற்றும் சிறந்த திட்டம், இதை இலவசம் என்று நினைப்பது தவறான புரிதல். வரி கட்டுவது எப்படி தனி மனிதனின் கடமையோ அதுபோல் அரசு மக்களுக்கு உதவி செய்வதும் அரசின் கடமை. இலவசத்திற்கும், பொருளாதார சமன்பாட்டிற்கும் வேற்றுமை உண்டு, இந்த வேற்றுமையை புரியாதவர்கள் தான் அரசு மக்களுக்கு செய்யும் நலத் திட்டங்கள் அனைத்தையும் இலவசம் என்று எண்ணுகின்றார்கள். அரசு ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்தால் அது…

  • மும்மொழி கொள்கையை எதிர்ப்பது ஆரோக்கியமான செயலா ?

    உடல்வலிமை, அறிவு, பொருள், போன்ற அனைத்து செல்வத்தையும் பெற்றுஇருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியத்தை செயலின் மூலம் ஒருவன் வெளிப்படுத்த முடியும். ஒருவனுடைய செயலே அவனுடைய ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். ஆரோக்கியம் இல்லாதவர்களால் போராடவோ, புரட்சி செய்யவோ,முடியாது என்பது இயல்பு. நம்மில் பல நண்பர்கள் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றார்கள் என்றால் அதன் பொருள் அவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதின் வெளிப்பாடே. எனவே அவர்கள் அவர்களின் உடலையும், அறிவையும், சுய பரிசோதனை செய்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இந்தியா முழுவதற்கும் ஒரே…

  • அனைவருக்கும் சம ஊதியம்

    100 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு மனிதனுக்குள் தோன்றிய சிந்தனைதான் ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தார்த்தம், அவர் யார் என்று நமக்குத் தெரியாது ஆனால் அவர் செய்த புண்ணியத்தால்தான் நம் பெண்பிள்ளைகள் அனைத்து உரிமையும் பெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்கள். வலுவான ஆளுமைத் திறன் படைத்த ஆணுக்கு சமமானவர் பெண் என்பதை எந்த ஒரு ஆணும் ஆரம்பத்தில் ஏற்கவில்லை. பல ஆண்டுகள் கடந்த பிறகு தான் ஒரு சிலருக்கு புரிந்தது ஆணும் பெண்ணும் சமம் என்று சொன்னது…

  • உழவால் உழவன் வாழ வாழ்த்து.

    வாழ்வதர்க்காக சாப்பிட்டால் ஆரோக்கியம் சாப்பிடுவதர்காக வாழ்ந்தால் கேடு அதுபோல் உழவை காத்தால் உழவன் வாழ்வான், உழவனை காத்தால் உழவு அழிந்துவிடும். 100 நாள் வேளை திட்டம் மனித சக்தியை பயன் படுத்துவதர்க்காக உருவாக்கிய மேன்மையான திட்டம்,ஆனால் நடைமுறையில் அதர்க்கு எதிர்மறையாக மனித ஆற்றல் வீணாகுவது போல்,நம்முடைய அரசு நீர் ஆதாரத்தை உருவாக்கி உழவை பாதுகாக்காமல், அரசு உழவனுக்கு உதவினால் உழவன் சோம்பேறியாய் ஆகிவிடுவான் உழவும் அழிந்துவிடும்,உழவனும் அழிந்து விடுவான் மக்களும் வருமையில் அழிந்து விடுவர்.எனவே அரசு உழவைத்தான்…