தேர்தல்_பணம்
-
வாக்குக்கு பணம் வாங்குவது குற்றமா?
வாக்கு என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமை, இந்த வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது நமது கடமை. நம்முடைய கடமையை சரியாக செய்தால் மட்டும் தான் நாமும், நம் நாடும் முன்னேறமுடியும். ஜனநாயகம் நமக்கு பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாக்குரிமையை அனைவர் கையிலும் கொடுத்துள்ளது, அதை நாம் பயனுள்ள வகையில் செலவு செய்தால் மட்டும் தான் சிறப்பாக வாழ முடியும். அரசியல் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவர்களுடைய விலைமதிப்பில்லா வாக்குரிமையை சரியாக பயன்படுத்துகிறார்கள்,அரசியல் முக்கியத்துவம்…
-
வெற்றிடம்
புத்தர், காந்தி, பெரியார், போன்ற பல மாமனிதர்களின் வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்து பதவி சுகத்தை அனுபவித்த அரசியல் தலைவர் மறைந்த பிறகு, அந்த இடத்தை நிரப்ப துடிக்கும் பதவி வெறியர்களால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும். வெற்றிடத்தை நிரப்ப நினைப்பவர்கள் நிச்சயம் அவர்களை போல் தான் இவர்களும் இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களைப் போல் தான் இருப்பார்கள்.மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால்,…
-
பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள்
ஊடகங்களும், பெரிய மனிதர்களும், பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு செய்தால் தவறில்லை,ஆனால்மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் தவறு,உபதேசம் எப்போதும் ஏழை மக்களுக்குதான்.கடமையை விட்டுக்கொடுத்தால் துரோகம்.உரிமையை விட்டுக்கொடுத்தால் தியாகம்.கொள்கை இல்லா தலைவர்கள் இருப்பதால்தான்,பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள்
-
மக்கள் முன்னேறவே முடியாது
நோயாளியின் நோய்க்கு தேவையான மருந்தும் பரிசோதனையும் எழுதாமல் தனக்கு எதில் லாபம் அதிகமோ அதை எழுதும் மருத்துவர் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த செய்தி நல்லதோ அதை சொல்லாமல் ஊடகத்திற்கு எந்த செய்தி லாபத்தை கொடுக்கின்றதோ அதை சொல்லும் ஊடகங்கள் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த திட்டம் நல்லதோ அதை கொண்டுவராமல், அரசியல் தலைவருக்கு பயன் தரக்கூடிய திட்டத்தையும்,இலவச திட்டத்தையும் கொண்டுவரும் அரசியல் தலைவர் இருக்கும் வரை! யார் சிறந்த தலைவர் என்று பார்க்காமல் யார் பணம்…
-
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மையை பார்த்த பிறகாவது இனி மக்களை ஏமாற்றாமல் அரசியல் தலைவர்கள் நேர்மையாக ஆட்சி செய்யவேண்டும்.
