ஞானத்தின்

நுழைவாயில்

Latest Writing

  • விதியை நம்பாதே! புரிந்து கொள்!

    விதியின்படி தனக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும் என்று சோம்பேறி காத்திருந்தான், விதியும் அவனின் செயலுக்காக காத்திருந்தது.


  • சனாதன தர்மம்

    சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும்…


  • ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை!

    மக்களின் மனநிலை மாறாமல் ஆட்சி மாற்றத்தால் மட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது, பயிர் கடனாக இருந்தாலும் சரி,கல்வி கடனாக இருந்தாலும் சரி,…


  • விஜயின் தேர்தல் வெற்றிக்கு எது காரணம்!

    இது அரசியல் கட்டுரை அல்ல, வாக்கு அளித்தவர்கள், அளிக்காதவர்கள் அனைவருக்கும் ஆன விழிப்புணர் கட்டுரை படித்து பயன்பெறுங்கள்.நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற…


Books

Free to Download

01

June 2024

குமார் விதிகள்

02

March 2013

ஏழாவது அறிவு

03

June 2011

உன் செயலுக்கு நீ காரணம் அல்ல

04

January 2024

என் பார்வையில் அரசியல்

05

May 2013

மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்

06

July 2014

புத்தகம் படிப்பதால் அறிவு வளராது

07

April 2013

தூக்குத் தண்டனையும், கடவுளும்

ஆய்வின் கோட்பாடுகள்

நம் சிந்தனைக்கும் செயலுக்கும் நாம் காரணம் அல்ல, தொடர்வினை தான் காரணம்.


தொடர்வினையே நம்மையும், உலகையும், பிரபஞ்சத்தையும் இயக்குவதால் விதி உண்மை.


விதி உண்மை என்பதால் விதியை மாற்றக்கூடிய சக்தி எதுக்கும், யாருக்கும் இல்லை என்பதால் கடவுள் இல்லை.


தொடர்வினை எனும் விதி நம் செயலை பார்த்துக்கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக, விதி எனும் கடவுள் நம் செயலுக்கான பலனை நிச்சயம் நமக்கு கொடுப்பார் இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. வெற்றி நம்முடைய விதியாக இருக்க வேண்டும் என்றால் வெற்றியின் முன் வினை முயற்சியாக இருக்க வேண்டும், முயற்சி இன்மையின் தொடர்வினை ஒருபோதும் வெற்றியாக இருக்காது.


நம் அனுபவத்தால் பெறுவது மட்டுமே அறிவு, அனுபவம் இல்லாமல் படிப்பு மூலம் பெறும் தகவல் அறிவாகாது.


நாம் பெரும் அறிவு நம் அனுமதி இல்லாமல் நம்மை ஆளுமை செய்யும்,நாம் எந்த அறிவைப் பெற வேண்டும் எந்த அறிவை பெறக் கூடாது என்று அறிவால் அறிவை வடிகட்டுவது தான் ஏழாவது அறிவு.


பகுத்தறிவு ஆறாவது அறிவு அல்ல, நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பதன் மூலம் பெரும் அறிவே ஆறாவது அறிவு.


ஒரு மனிதன் பிறப்பால்  தான்பெற்ற உணர்வின் விருப்பப்படியே அறிவைப் பெறுகின்றான், அவனுடைய சிந்தனையும் உணர்வின் விருப்பப்படி தான் இருக்கின்றது. தன்னுடைய உணர்வுக்கு தீனி போடும் எழுத்தை தான் வாசகர்கள் படிக்கின்றார்கள்.எனவே ஒருவருடைய அறிவுக்கு அவருடைய மரபணுவே முக்கிய காரணமாக உள்ளது.

இரா.விஜயகுமாரன்