Justice
-
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்து மதமும் அன்பையும், நீதியையும் தான் மக்களுக்கு போதிக்கின்றது, கல்வி அறிவு இல்லாத காலத்தில் மக்களுக்கு நீதியை கற்பித்தது மதங்கள் தான். அந்த வகையில் இந்து மதத்தின் நீதியை தான் “சனாதன தர்மம்” என்று மதவாதிகள் சொல்கின்றார்கள். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பு…
-
உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின்றோம் என்பதையும் அறிவியல் ஆதாரத்தோடு நிரூபித்து ஆய்வு கட்டுரைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். இருப்பினும் புதிய நீதி உருவாகவில்லை. இந்த அறிவியல் உண்மையை ஆதாரமாக வைத்து உச்சநீதிமன்றம் புதிய நீதியை உருவாக்க வேண்டும்.மாறாக ஒருவன் செயலுக்கு அவன்தான் காரணம் என்ற பழைய நம்பிக்கையிலேயே நீதித்துறை செயல்பட்டால்…
-
கர்மா
கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று பொருள். எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அறிவியல். கர்மா என்பது முன்ஜென்மத்தில் செய்த செயலின் பலன் அல்ல. கர்மா என்பது முன்னோர்கள் செய்த செயலின் பலன் என்று பொருள். முன் ஜென்மம், மறுபிறவி என்று எதுவும் இல்லை. மனிதனை…
-
என்கவுண்டர் (Encounter)
கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் இரண்டு என்கவுண்டர் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. காவல்துறை தற்காப்பிற்காக இந்த கொலையை செய்யவில்லை என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத அரசும்,காவல்துறையும் தன் மீது உள்ள அவப்பெயரை மறைக்க, மக்களை ஏமாற்ற என்கவுண்டர் என்ற பெயரில் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. அரசால் காவல்துறையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காவல் துறையில் லஞ்சம் பெருகிவிட்டது. காவல்துறையின் கொலைகள் அரசின் கையாலாகாத தனத்தின் வெளிப்பாடு. சட்டத்தை பாதுகாக்க கூடிய…
-
ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா?
பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா என்பதுதான். கடவுள் இருக்கு என்பது நம்பிக்கை என்பது போல், கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கைதான். ஒருவரின் நம்பிக்கையை பொய் என்று சொல்ல இருவரிடமும் அதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. என்னுடைய கேள்வி கடவுளைப் பற்றிய அறிவு…
-
ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம்
ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி குறைத்தால் அது அரசியல் நகர்வாக தான் இருக்கும். அதுவே என்னுடைய இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து தண்டனையை குறைத்தால் அது அறிவியல் பூர்வமான, அறிவு பூர்வமான, உலகுக்கே முன்னுதாரணமாக இருக்கும்.] நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம்…
-
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது. பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னது அவருடைய கருத்து, ஆதாரம் இல்லாத ஒருவருடைய கருத்தை வேறு ஒருவர் கருத்தால் நிராகரிக்கலாம், கடவுள் இல்லை என்பதற்கும், இருக்கு என்பதற்கும் ஆதாரம் இதுவரை யாரும் கொடுக்கவில்லை, எனவே இரண்டு கருத்தும் நம்பிக்கையை சார்ந்தே உள்ளது. திமுக வின்…
-
கடவுள் நம்பிக்கை விவாதத்திற்கு உட்பட்டதா?
இந்திய இறையாண்மைக்கு எதிராக, சட்டத்திற்கும் எதிராக மக்களை மதத்தால், சாதியால், பிரிவினை செய்ததற்கு பல ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும், கட்சித்தடைக்கு தகுதியான அரசியல் கட்சி நாட்டை ஆள்வதால் ஆன்மீக மூடநம்பிக்கைக்கு எதிராக பகுத்தறிவு விழிப்புணர்வு செய்தால் குற்றமாக தெரிகின்றது இன்றைய காவல்துறைக்கு. “யாமிருக்க பயமேன் “ இது வெறும் வார்த்தையல்ல மந்திரம், துன்பத்தில் இருந்து இறைவன் நம்மை காப்பார் என்று ஒருவர் நம்பினால் அதை யாரும் பாழ்பண்ணக்கூடாது. என்னை கடவுள் காப்பார் என்று நான் நம்பினால் அது…
-
தூக்குத் தண்டனை சரியா?
நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியே அந்த சமுதாயத்தின் நீதியை மாற்றும். சாலை விபத்தால் உலகில் பல கோடி அப்பாவி மக்கள் இறக்கின்றார்கள் இதற்கு 90 சதவிகிதம் ஓட்டுனரின் தவறே காரணம், ஆனால் சட்டம் இந்த நிகழ்வை விபத்து என்றே பார்க்கின்றது. அதுபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே பல நோயாளிகள் இறப்பதற்கு காரணமாக உள்ளது…
-
சமத்துவ புரட்சி
தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்ற அரசியலைக் கடந்து அனைத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்ற உரிமையை போராடிப் பெறமுடியும். பெஞ்சமின் மின்சாரத்தை கண்டுபிடித்ததால் மின்சாரம் அவருக்கு சொந்தமல்ல, யார் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றார்களோ அவர்களுக்கு தான் அது பலன் தரும், அதுபோல் விதி அறிவியல் உண்மை, எது நடக்குமோ அது…
