தூக்குத்_தண்டனை
-
உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின்றோம் என்பதையும் அறிவியல் ஆதாரத்தோடு நிரூபித்து ஆய்வு கட்டுரைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். இருப்பினும் புதிய நீதி உருவாகவில்லை. இந்த அறிவியல் உண்மையை ஆதாரமாக வைத்து உச்சநீதிமன்றம் புதிய நீதியை உருவாக்க வேண்டும்.மாறாக ஒருவன் செயலுக்கு அவன்தான் காரணம் என்ற பழைய நம்பிக்கையிலேயே நீதித்துறை செயல்பட்டால்…
-
ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம்
ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி குறைத்தால் அது அரசியல் நகர்வாக தான் இருக்கும். அதுவே என்னுடைய இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து தண்டனையை குறைத்தால் அது அறிவியல் பூர்வமான, அறிவு பூர்வமான, உலகுக்கே முன்னுதாரணமாக இருக்கும்.] நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம்…
-
தூக்குத் தண்டனை சரியா?
நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியே அந்த சமுதாயத்தின் நீதியை மாற்றும். சாலை விபத்தால் உலகில் பல கோடி அப்பாவி மக்கள் இறக்கின்றார்கள் இதற்கு 90 சதவிகிதம் ஓட்டுனரின் தவறே காரணம், ஆனால் சட்டம் இந்த நிகழ்வை விபத்து என்றே பார்க்கின்றது. அதுபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே பல நோயாளிகள் இறப்பதற்கு காரணமாக உள்ளது…
-
நம் மனசாட்சி மாறவேண்டும்
ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு.அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை.நீதி மாறவேண்டும் என்றால் சமுதாயத்தின் அறிவு மாறவேண்டும்.குற்றவாளி தண்டனைக்கு உரியவன் அல்ல இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அறிவியல் உண்மையை எப்போது இந்த உலகம் உணர்கின்றதோ அப்போதுதான் தூக்குத்தண்டனை தடை செய்யப்படும். இதை நான் எழுதுவதால் இந்த உலகில் நான் மட்டுமே அறிவாளி, மற்றவர்கள் அனைவரும் அறிவு இல்லாதவர்கள் என்று பொருளல்ல. அறிவால் யாரும்,…
-
என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்
என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அறிவு இல்லாத சிருவயதில் கடவுளை நம்பினேன், வளர்ந்து அறிவைப் பெற்ற பிறகு கடவுள் இல்லை என்றாலும் கடவுள் செய்கின்ற செயலை அறிவியல் செய்கின்றது என்பதையும், அனைத்து வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதையும் புரிந்து கொண்டேன். இந்த சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும், குறைந்ததற்கு காரணம்.…
-
பயன்படாத ஒற்றை செருப்பு
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெரிந்து கொள்கின்ற தகவலால் பயனில்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகளை புரிந்துகொள்ளவே இதைப் படிக்கின்ற வாசகர்களுக்கு அறிவை சார்ந்த அறிவு இருக்க வேண்டும் இல்லை என்றால் என் எழுத்து பயனற்றது தான். எழுத்தாளர்களும் அவர்களுடைய எழுத்துக்களும் மக்களிடம் பிரபலம் ஆவதற்கு காரணம், மக்களிடம்…
-
விதியை நம்பாதீர்கள் !
விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு புரிய வைப்பதும் கடினம், நம்ப வைப்பதும் கடினம். நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்ற தொடர்வினை தத்துவம் தான் விதி. விதி உண்மை என்று புரிந்துகொள்வதற்கும், விதியை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. விதி உண்மை என்று நான்…
-
வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு
” வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு ” வெளி உலக தொடர்போ, இறந்த கால தொடர்போ இல்லாமல் தூக்கு தண்டனையை கொடுக்கும் நீதி அரசர்களுடைய சிந்தனையும், செயலும் இருக்கும் என்று யாராவது நிருபித்து விட்டால் அவருக்கு 1,00,00,000 ரூபாய் பரிசாக குமார் பதிப்பகம் கொடுக்கும்.
-
பெண் பாவம்
பெண் பாவம் பொல்லாதது, கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமையால் மதுரை மாநகரமே தீயில் அழிந்தது என்பது வரலாற்று உண்மை. எனவே இப்போது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதால் இந்த நாடு தீப்பற்றி எரிந்து அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை நக்கீரன் கோபால் அவர்களின் நேர்காணலை 9 நிமிடம் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. அண்ணா என்று அந்தப்…
-
உணர்வின் பிறப்பு
நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெறுகிறோம், அதைத் தொடர்ந்து நான் என்ற உணர்வை பெறுகிறோம் இந்த நான் என்ற உணர்வை பெற்ற பிறகுதான் போட்டி, போறாமை, பாசம், நட்பு, அன்பு, வெறுப்பு, போன்ற பல உணர்வுகளை பெறுகின்றோம். கடைசியாக காம உணர்வை பெறுகிறோம். வயது முதிர்ச்சியில்…
