விதி
-
விதியை நம்பாதே! புரிந்து கொள்!
விதியின்படி தனக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும் என்று சோம்பேறி காத்திருந்தான், விதியும் அவனின் செயலுக்காக காத்திருந்தது.
-
பயம்
யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித்தவர், படிக்காதவர் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி என்னிடம் இல்லாத அறிவை மற்றவர்களிடமிருந்து நான் தினம் தினம் பெறுகின்றேன். அறிவும் நீரும் தாழ்வான பகுதியை நோக்கி தான் செல்லும், நம்மை அறிவாளி என்று நினைத்துக் கொண்டால் அறிவை பெற முடியாது, நம்மிடம் இல்லாத அறிவை…
-
கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்!
கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கடவுளையும் நம்பாமல் நான் நாத்திகனாக தான் இருந்தேன். இறந்த காலத்தின் தொடர்போடுதான் நம்முடைய சிந்தனை முதல் உலக நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கின்றது. அணுவின் அசைவு முதல் பிரபஞ்சத்தின் இயக்கம் வரை அனைத்தும் விதியின் பயனே. என்னுடைய அசைவு ஒவ்வொன்றையும்…
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…
அனைவரும் சமம் என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், மனிதர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தோடும் வாழ ஒவ்வொருவரின் உரிமையையும் துல்லியமாக வரையறுப்பது மனிதனின் நீதியாக இருப்பது போல்.விதி என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும் நம்முடைய முயற்சியும், உழைப்பும் தான் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.இதை புரிந்து கொள்ளாமல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளை மேற்கோள்காட்டி அனைவரும் சமம் என்று தனிமனித உரிமைகளுக்குள் அத்து மீறி ஒருவர் சென்றாலோ, அல்லது விதி என்பது இயற்கையின் நீதி…
-
சாதி
திறமையான திருடனை இந்த சமுதாயம் திருடனாக ஏற்றுக் கொள்ளாது. திறமை இல்லாமல் திருடி மாட்டிகொண்டவனை தான் திருடனாக ஏற்றுக்கொள்ளும். அதுபோல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், மக்களிடம் சாதி உணர்வை தூண்டியும், சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லியும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் தலைவர்களைத் தான் ஆளுமை மிக்க தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்,நேர்மையான, ஒழுக்கமான, அனைவரையும் சமமாக பார்க்கும் திறமையான அரசியல் தலைவர்களை மக்கள் அரசியல் தலைவராகவே ஏற்க மாட்டார்கள்.இது மக்களின் தவறல்ல, இது இயற்கையின் நீதி.…
-
ஆறாவது அறிவின் அளவுகோல்
அறிவு என்றால் என்ன ?ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும் இந்த அறிவைப் பெறவில்லை நான் எழுதிய புத்தகத்தை படித்து அதை அறிவாக பெற முடியாத அறிவில்லாதவரிடம் இருந்து நான் பெற்ற அனுபவத்தால் தான் இந்த அறிவை பெற்றேன். நம்முடைய ஐந்து புலன்களின் அனுபவத்தால் பெறுவதுதான் அறிவு. அந்த, அந்த புலன்களின் வேலையை அந்த, அந்த புலன்கள்…
-
கர்மா
கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று பொருள். எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அறிவியல். கர்மா என்பது முன்ஜென்மத்தில் செய்த செயலின் பலன் அல்ல. கர்மா என்பது முன்னோர்கள் செய்த செயலின் பலன் என்று பொருள். முன் ஜென்மம், மறுபிறவி என்று எதுவும் இல்லை. மனிதனை…
-
மக்கள் பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை
கடவுள் இல்லை என்பதை பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தெளிவு படுத்தாததால், மக்கள் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை. ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை மட்டுமல்ல, மக்களையும் சாதி ஏற்றத்தாழ்வில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், அதை நான் எழுதிய” குமார் விதிகள் “என்ற புத்தகத்தால் மட்டுமே முடியும். நான் எழுதிய புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை நாத்திகர்கள் எப்போது புரிந்து கொள்கின்றார்களோ அப்போதுதான்…
-
இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம்
நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல்லாத சமுதாயத்தில் இருந்து தான் கடவுள் நம்பிக்கை முற்போக்கு சிந்தனையாக உருவாகி உள்ளது.சீனாவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதிகம், எனவே கடவுள் இல்லை என்று சொல்வது முற்போக்கு சிந்தனை அல்ல. கற்கால மனிதனின் முற்போக்கான சிந்தனை தான் ஆத்திகம். தன்னுடைய வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால்தான் மனிதன்…
