விதி

  • பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது

    அறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பெரியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.கடவுளை வணங்குபவன் முட்டாள்,காட்டுமிராண்டி என்று உணர்வை தூண்டும் வகையில் பெரியார் கோபப்பட்டதால் தான் கடவுள் இல்லை என்பதை மக்கள் நம்பினார்கள்,கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரத்தையும் பெரியார் மக்களிடம் கொடுத்து புரிய வைக்கவில்லை, கடவுள் இல்லை என்ற நம்பிக்கையே பகுத்தறிவு என்று சொல்லி நம்ப வைத்தார்.கடவுளின் நம்பிக்கையால் நான் பல நன்மைகளைப் பெற்று இருக்கின்றேன் என்று சொல்பவர்களுக்கு பெரியாரிடம் இருந்து…

  • மதியால் விதியை வெல்ல முடியாது!

    விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை. என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும் மதியால் விதியை வெல்லலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். அறியாமைக்கும், முட்டாள்தனத்திற்கும் வேற்றுமை உண்டு கண்ணால் பார்க்க முடியாததை பார்க்காமல் இருப்பது அறியாமை,கண்ணருகில் காண்பித்தும் பார்க்க முடியவில்லை என்றால் அது முட்டாள்தனம். என்னுடைய ஆய்வை வெளி உலகத்திற்கு செல்ல விடாமல்…

  • கதை கேளு! கதை கேளு!

    போட்டி,பொறாமை,காமம்,பணம்,பதவி போன்ற உணர்வின் பிடியில் மக்கள் சிக்கி கிடப்பதால் மக்களிடம் சிந்தனை வறட்சி உள்ளது.அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றது. “நம்முடைய சிந்தனை நம் கட்டுப்பாட்டில் இல்லை இறந்த காலத்தின் தொடர்போடுதான் இருக்கின்றது, இதிலிருந்து விடுபட்டு சுயமாக, சுதந்திரமாக யார் ஒருவராலும் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது “என்ற இந்த நான்கு வரிகள் புரிந்தால் தான் நான் எழுதிய “குமார்விதிகள்” என்ற புத்தகத்தின் நாற்பது பக்கங்களும் புரியும். தங்க நாணயம் தரையில் கிடப்பதை பார்த்த நான்…

  • என் பார்வையில் அரசியல் (அரசியல் விழிப்புணர்வு கட்டுரை)

    அரசியல்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. கல்வி அறிவு இல்லாமல் கூட இந்த உலகில் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக, சிறப்பாக வாழ முடியும், ஆனால் அரசியல் அறிவு இல்லாமல் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதற்கு சரித்திர நிகழ்வுகளே சான்று. முன்னோர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டால்தான் அவர்கள் பட்ட துன்பத்திலிருந்து சிறிதளவு அறிவை நாம் பெற முடியும். அரசியலால் அவர்கள் அனுபவித்த துன்பத்தை நாம் அறிவாக பெறவில்லை என்றால் நாமும், நம் சந்ததிகளும் வருங்காலத்தில் அரசியல்…

  • பெரியார் நாத்திகர் அல்ல !

    இன்றைய மத வெறுப்பு அரசியல் தொடர்ந்தால் நாடே போர்க்களமாக மாறி விடும் என்பது உறுதி. எச்சரிக்கை ! நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிவினையால் போர்க்களத்தில் தன் உயிரை விட்டவர்களின் அனாதை பிள்ளைகளின் வாரிசாக தான் இருப்போம், நம் முன்னோர்கள் குழந்தை பருவத்தில் தெரு நாயை விட அதிக கொடுமைகளை அனுபவித்து இருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். நாம் கடந்த 75 ஆண்டுகளாக தான் ஓரளவிற்கு அமைதியான வாழ்வை வாழ்கின்றோம். அதை நாம் இழந்துவிடக்கூடாது. மனிதனும்…

  • கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா !

    அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்களிடம் இருந்து நான் பெற்று “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். மரத்திலிருந்து விழும் பல லட்சம் விதைகளில் ஏதோ ஒரு விதை மட்டும் மரமாக வளர்ந்து பல உயிர்களுக்கு பயன்படுவது போல் என்னுடைய எழுத்தை பல…

  • ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா?

    பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா என்பதுதான். கடவுள் இருக்கு என்பது நம்பிக்கை என்பது போல், கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கைதான். ஒருவரின் நம்பிக்கையை பொய் என்று சொல்ல இருவரிடமும் அதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. என்னுடைய கேள்வி கடவுளைப் பற்றிய அறிவு…

  • பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 2)

    அறிவியல் ஆய்வின்படி தொடர்வினை தத்துவத்திர்க்கும், அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை உண்டு என்ற தத்துவத்திற்கு உட்பட்டு தான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அறிவியல் ஆய்வின்படி நேற்றைய நிகழ்வுகளே இன்றைய நிகழ்வுகளுக்கு காரணம், இன்றைய நிகழ்வுகளே நாளைய நிகழ்வுகளுக்கு காரணம் என்று உறுதியாவதால், எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்ற கருத்தை உள்ளடக்கிய விதி உண்மை என்பது என்னுடைய ஆய்வின் முடிவு. தந்தை பெரியாரும் முற்போக்கு பகுத்தறிவாளர்களும் விதியை பொய்யென்றும், ஆன்மிகவாதிகள் விதியை உண்மை என்றும், படித்த ஆன்மிகவாதிகளும்,…

  • கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான்

    கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறிவை கொடுத்து ஒருவர் நம்பிக்கையை உடைத்து விடலாம் அப்படி ஒருவர் நம்பிக்கையை உடைத்துவிட்டால் அவர் பெற்ற அறிவே அவருக்கு சூனியமாகிவிடும், எனவே யாருடைய நம்பிக்கையையும் யாரும் உடைக்க வேண்டாம் கனவிலும், கற்பனையிலும்மே மனிதன் வாழ்க்கை சுகமாக கழியட்டும் ! தன்னம்பிக்கையை போல் கடவுள் நம்பிக்கையும் தனிமனித…

  • கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்…

    கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள் இல்லை என்பதை புரிய வைக்க அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நான் எழுதிய விதி உண்மை என்ற ஆய்வுக்கட்டுரை மட்டுமே உள்ளது. இதை ஆத்திகமும், நாத்திகமும் புரியாதது போல் தவிர்க்கின்றது. விதி உண்மை என்ற அறிவியல் உண்மையை ஏற்காமல் (புரிந்துகொள்ளலாம்)…