விதி
-
சமத்துவம்
புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியார் சமத்துவத்தை பேசியது அரசியல் வெளிப்பாடு, சமத்துவம் பேசும் அனைவருக்கும் பல காரணம் இருக்கின்றது. இங்கு சமத்துவம் பேசுகின்றவர்கள் உயர்ந்த உடன் மற்றவர்களை அடிமைப்படுத்தும் குனம் இயல்பாகவே உள்ளது. மனிதன் சமத்துவம் பேசுவது சுயநலத்துக்காகவே, மனிதன் மிருகம் போல தான் உயர்ந்துவிட்டால் தாழ்ந்தவனை அடிமைப்படுத்தாமல் இருக்க மாட்டான், எனவே சமத்துவத்தை சரியாக…
-
கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும்
விதி உண்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும். அப்போது சமத்துவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய நீதி உருவாகும். விதி உண்மை என்ற புதிய அறிவை மக்கள் பெறாதவரை உலகில் பிரிவினை அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
-
எது ஜனநாயகம்?
மக்களுக்கு அறிவுரை சொல்லும் ஆட்சியாளர்களும், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும், ஜனநாயகத்தை மதிக்கிறார்களா என்று முதலில் பார்ப்போம், அதன் பிறகு மக்களிடம் தனிமனித ஜனநாயக கடமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும். 1)மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, MPக்கள் ஜனநாயகத்துக்கு எதிராக இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியது ஜனநாயக படுகொலை, இந்த ஜனநாயக கொடுமையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லாத ஊடகங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று மக்களுக்கு அறிவுரை கூற தகுதியில்லாத ஊடகங்கள். 2)குற்றம் செய்த…
-
காரணமும்,காரியமும்
காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்கையையே புரிந்ததாக, அறிவாக எண்ணி ஏமாறுகிறோம். இதுதான் இன்றைய சமுதாய அறிவு. விதியைப் பற்றிய என்னுடைய ஆய்வை மக்களிடம் கொண்டு செல்லும் போதுதான் தெரிகின்றது என்னை சுற்றி உள்ளவர்களில் ஆயிரத்தில் 999பேர் நம்பிக்கை என்ற குப்பையால் சிந்திக்க முடியாமல், புரிதல் இல்லாமல், நம்பிக்கையையே புரிதலாக எண்ணி தன்னையே ஏமாற்றிக்…
-
விதியை நம்புதலும், புரிதலும்
நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மிடம் இருக்கும். பெரும்பாலானவர்கள் நம்புவதையே புரிந்ததாக எண்ணுகின்றார்கள், தகவல் சேகரிப்பதையே அறிவாக எண்ணுகின்றார்கள், அதனால் தான் படித்தவன் அறிவாளியாக இந்த உலகில் பார்க்கப் படுகின்றான். 2+2=4,4×4=16 என்பதை புரிந்துகொண்டால் கணிதம் வாழ்க்கைக்கு பயன்படும். புரிந்து கொள்ளாமல் ஆசிரியர் சரியாகத்தான்…
-
சமத்துவ புரட்சி
தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்ற அரசியலைக் கடந்து அனைத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்ற உரிமையை போராடிப் பெறமுடியும். பெஞ்சமின் மின்சாரத்தை கண்டுபிடித்ததால் மின்சாரம் அவருக்கு சொந்தமல்ல, யார் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றார்களோ அவர்களுக்கு தான் அது பலன் தரும், அதுபோல் விதி அறிவியல் உண்மை, எது நடக்குமோ அது…
-
விதியை நம்பாதீர்கள் !
விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு புரிய வைப்பதும் கடினம், நம்ப வைப்பதும் கடினம். நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்ற தொடர்வினை தத்துவம் தான் விதி. விதி உண்மை என்று புரிந்துகொள்வதற்கும், விதியை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. விதி உண்மை என்று நான்…
-
தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும்
உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றது. 70 ஆண்டுகளுக்கு முன் திராவிட கழகம் வளர்ச்சி அடையும்போது படித்தவர்களும். கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் இருந்ததால்தான் தி க வின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் தற்போது பகுத்தறிவு இல்லாதவர்களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் அதிகமாக இருப்பதால்தான் திராவிட கழகம் மக்களிடம் செல்வாக்கை…
-
கடவுள் நம்பிக்கை
நம்பிக்கை புரியாமையின் வெளிப்பாடு. கடவுளைப்பற்றி நமக்கு புரியவில்லை என்றால் அதைப்பற்றி முன்னோர்கள் சொன்னதை நம்பி தான் ஆக வேண்டும், இதுவே கடவுள் நம்பிக்கை. கடவுள் மறுப்பு என்பது அறியாமையின் அல்லது உணராமையின் வெளிப்பாடு.கடவுள் நம்பிக்கையால் ஒருவர் பெறக் கூடிய பலனை உணராமல் கடவுள் இல்லை என்பது அறியாமை. கடவுளைப்பற்றி ஆத்திகர்களும், நாத்திகர்களும், பேசிக் கொள்வதைப் பார்த்தால் எனக்கு மிகவும் நகைச்சுவையாக தெரிகின்றது. கடவுள் நம்பிக்கை என்பது கைத்தடியை போன்றது, அதை பிடுங்குவது பாவம். கைத்தடியை பயன்படுத்துபவர்கள் தானாகவே…
-
நாட்டுப்பற்று
அண்டை நாட்டுடன் போரிட்டால் நாட்டுப்பற்று ஏற்படும்! மாற்று மதத்தினரிடம் மத தீவிரவாதத்தை தூண்டினால் மத ஒற்றுமை ஏற்படும்! மாற்று சாதியினரிடம் சாதிவெறியை தூண்டினால் சாதி ஒற்றுமை ஏற்படும்! இது மனிதனின் இயல்பு. இந்த மூன்றையும் பயன்படுத்தி தான் பி ஜே பி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. இது சிறிது காலத்திற்கு இன்பமாக இருக்கும் இதன் தொடர்ச்சி, தொடர்வினை, ஒட்டுமொத்த வட இந்தியாவையே அழித்துவிடும் என்பது விதி.வினையை விதைத்தவன் வினை யையே அறுவடை செய்வான். தென்னிந்தியாவை சேர்ந்த…
