அனுபவமே_அறிவு
-
மரத்திற்கு அதன் இலைகளே உரம்
மரத்திற்க்கு உதிரும் அதன் இலைகளே உரமாவது போல்,நான் எழுதும் எழுத்துக்கள் எனக்கு அறிவாக இருந்து என்னை இயக்குகின்றது.
-
தங்க கரண்டி
தங்க கரண்டியால் எதை எடுத்துக் குடித்தாலும் நன்மை பயக்குமா? நாம் எதனால் சாப்பிடுகின்றோம் என்பதை விட எதை சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம், நாம் பெரும் தகவல் படிப்பதாலும் கிடைக்கின்றது, கேட்பதாலும் கிடைக்கின்றது, பார்ப்பதாலும் கிடைக்கின்றது இதில் படிப்பதால் தகவலை பெறுகின்றவர்கள் தான் அறிவாளிகள் என்று அறிவைப் பற்றிய அறிவு இல்லாதவர்களை மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள்.கற்பனை கதைகளை இலக்கியமாக,நாவலாக படித்தாலும் நாடகமாக, திரைப்படமாக பார்த்தாலும், காதையாக கேட்டாலும், இவைகள் மூளையில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகள். தங்க கரண்டியால்…
-
பிறப்பால் (சாதியால்) மனிதர்களின் அறிவு வேறுபடுமா?
குடும்ப புத்தி, சாதி புத்தி, மத புத்தி, பிறந்த ஊரின் புத்தி, என்று பிறப்பால் ஒருவர் அறிவைப் பெறுகின்றார்களா அல்லது அனுபவத்தால், படிப்பால் ஒருவர் அறிவிவை பெறுகின்றார்களா என்று அறிவைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்து இந்த கட்டுரையில் எழுதி இருக்கின்றேன். இந்த கட்டுரையை படிப்பதற்கு முன் இதற்கு முன் அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளைப் படித்துவிட்டு இந்த கட்டுரையை படித்தால் புதிதாக என்னுடைய கட்டுரையை படிப்பவர்களுக்கு எளிதாக புரியும். (https://www.vijayakumaran.in/blog/understanding-knowledge-41) அறிவை…
-
உலக புத்தக தினம்
புத்தகம் கதையை சொல்லும், கவிதையைசொல்லும், தகவலைச் சொல்லும், மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும், ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது. அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாது. அறிவு என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமல் இந்த உலகம் புத்தக தினம் கொண்டாடுவதால் எந்த பயனும் இல்லை. புத்தகம் யாருக்கு அறிவைக் கொடுக்கும், யாருக்கு தகவலை மட்டும் கொடுக்கும் என்ற புரிதலுக்கு நான் எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “ என்ற…
-
அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும்
ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்திற்கு இல்லாததால்தான். அனுபவம் இல்லாமல் படிப்பால் தான் பெற்ற தகவலை அறிவாக நினைக்கும் இந்த சமுதாயத்தை அறியாமையில் இருந்து மீட்டெடுக்க, நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதி இருந்தாலும் அந்தத் தகவலை அறிவாக மாற்றி கொள்ளும் அனுபவம் (அறிவு )படித்தவர்களுக்கு…
-
படித்தவன்
தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.
-
மரணிக்கும் அறிவு
ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்று திருவள்ளுவர், புத்தர் போன்ற பல ஆயிரம் மகான்கள் மற்றும் பல ஆயிரம் கோடி மக்கள் வாழ்ந்த இந்த உலகில் வாழத் தெரியாமல் வாழும் இன்றைய சமுதாயமே. முன்னோருக்கும் முன்னோரின் அறிவை நம் முன்னோர்களும், நாமும் பெற்று இருந்தால் உண்மையான ஆன்மீகத்தையும்,…
-
கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள் இறந்த பிறகும் உலகத்திற்கு கற்பித்துக் கொண்டேஇருக்கின்றார்கள்,காந்தி, காமராசர், கண்ணகியை போல்.
-
விதியை நம்புதலும், புரிதலும்
நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மிடம் இருக்கும். பெரும்பாலானவர்கள் நம்புவதையே புரிந்ததாக எண்ணுகின்றார்கள், தகவல் சேகரிப்பதையே அறிவாக எண்ணுகின்றார்கள், அதனால் தான் படித்தவன் அறிவாளியாக இந்த உலகில் பார்க்கப் படுகின்றான். 2+2=4,4×4=16 என்பதை புரிந்துகொண்டால் கணிதம் வாழ்க்கைக்கு பயன்படும். புரிந்து கொள்ளாமல் ஆசிரியர் சரியாகத்தான்…
