புத்தக_வாசிப்பு

  • சர்வதேச புத்தக தினம்

    “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதி 10 ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இந்த புத்தகம் இதுவரை இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, காரணம் இந்த புத்தகத்தில் உள்ள தகவலை அறிவாக பெறுவதற்கு வாசகர்களிடம் அறிவு (அனுபவம்)இல்லை. அறிவு என்பது அனுபவத்தால் பெறுவது மட்டுமே. கண்ணால் பார்த்து படித்து ஒரு தகவலை பெறுவதற்கும், காதால் கேட்டு ஒரு தகவலை பெறுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இரண்டும் ஒன்றுதான். பழங்காலத்தில் குரலை பதிவு செய்யக்கூடிய…

  • கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா !

    அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்களிடம் இருந்து நான் பெற்று “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். மரத்திலிருந்து விழும் பல லட்சம் விதைகளில் ஏதோ ஒரு விதை மட்டும் மரமாக வளர்ந்து பல உயிர்களுக்கு பயன்படுவது போல் என்னுடைய எழுத்தை பல…

  • உலக புத்தக தினம்

    புத்தகம் கதையை சொல்லும், கவிதையைசொல்லும், தகவலைச் சொல்லும், மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும், ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது. அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாது. அறிவு என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமல் இந்த உலகம் புத்தக தினம் கொண்டாடுவதால் எந்த பயனும் இல்லை. புத்தகம் யாருக்கு அறிவைக் கொடுக்கும், யாருக்கு தகவலை மட்டும் கொடுக்கும் என்ற புரிதலுக்கு நான் எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “ என்ற…

  • படித்தவன்

    தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.

  • மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்

    மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்பதையே அவருடைய பாடல் நமக்கு தெரியப்படுத்துகின்றது.திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகருக்கே அறிவைப் பற்றிய புரிதல் இல்லாத போது, நாம் யாரை அறிவாளியாக பார்ப்பது ?. அதற்கான பதில் நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற புத்தகத்தில் உள்ளது. நமக்குத் தெரிந்தது…

  • எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்?

    எது சிறந்த எழுத்து ?யார் சிறந்த வாசகர் ?எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது என்பதை பார்க்காமல் எழுத்தின் ஜீவனைப் புரிந்து கொள்கிறானோ அவன் தான் சிறந்த வாசகன். யார் எழுதியது என்பதை தெரிந்து கொண்டு, எழுதியவரை நம்பி கருத்தை புரிந்தது போல் நம்புபவன் சராசரி வாசகன். புத்தர், விவேகானந்தர், காந்தி,…

  • புத்தகம் படிப்பதால் அறிவு வளராது

    எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது, அறிவால் அனைவரும் சமம், அனுபவத்தால் மட்டுமே அறிவை பெற முடியும், அனுபவம் இல்லாக் கல்வி அறிவை கொடுக்காது.என்ற அறிவை பற்றிய அறிவியல் உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்திய முதல் ஆய்வு கட்டுரை இதுதான்.இந்த புத்தகம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் ஆசிரியர்களிடமும்,…

  • அலங்கார எழுத்துக்களை போல் ஆய்வு எழுத்துக்களையும் படிப்பதால் பயன் இல்லை

    கவிதைக்கு வரி அழகு, கண்ணுக்கு ஒளி அழகு, கடலுக்கு அலை அழகு, கல்விக்கு அறிவு அழகு, மண்ணுக்கு மரம் அழகு, நட்புக்கு நம்பிக்கை அழகு, உறவுக்கு உணர்வு அழகு, உடலுக்கு உயிர் அழகு, வானுக்கு விண்மீன் அழகு, வீட்டுக்கு ஒளி அழகு, நாவலுக்கு கதை அழகு, மதத்துக்கு கோட்பாடு அழகு, கட்சிக்கு கொள்கை அழகு, தமிழுக்கு குரல் அழகு, ஆணுக்கு பண்பு அழகு, பெண்ணுக்கு அன்பு அழகு, ஆய்வுக்கு பொருள் அழகு. இது போன்ற அலங்கார எழுத்துக்கள்,…

  • மண்பானை

    ஒருவன் மண்பானையிடம் கேட்டான். “இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும்எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?” மண் பானை சொன்னது, ” என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்? என்னைப் போலத்தான் இருப்பான்.” மண்பானை எப்படி தண்ணீரை குளிர்ச்சியாக மாற்றுகின்றது என்று தெளிவுபடுத்தாமல் இது போன்ற பயனற்ற எழுத்துகளைப்போல் பல எழுத்தாளர்கள் கதைளை எழுதி நம் மக்களை முட்டாள்களாகிவிட்டாகள் இவர்களை எப்படி மீட்டு எடுப்பது?