ஊடகமும்_கலையும்
-
கண்கள் இருந்தும் குருடர்களாக வாழ்பவர்கள் யார் ?
இந்த சமுதாயத்தை பார்த்து அச்சத்தில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியதை இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்டேன். தமிழ்நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவர் தினமும் மது அருந்துவேன், புகைபிடிப்பேன் என்று பொதுவெளியில் சொல்கின்றார் அதை பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து ரசிக்கின்றார்கள்.எதை இந்த மக்கள் விரும்புகின்றார்கள்!எதை நோக்கி இந்த சமுதாயம் செல்கின்றது! உணர்வை ஆளுமை செய்ய முடியாமல் பெரும்பாலானவர்கள் மதுவில் தன்னுடைய வாழ்க்கையை தொலைக்கின்றார்கள், மீதம் உள்ளவர்கள்…
-
வைரமுத்து பேசியது சரியா?
இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன். வைரமுத்து சொன்னது போல் இசையும், மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா? அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று. என்னுடைய…
-
இசையும், பாடலும்
திரைப்பட பாடலை பொருத்தவரையில், மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும்.மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது.வைரமுத்து அவர்களை ஒழுக்கம்…
-
இளையராஜா, ஆஸ்கார்
இளையராஜா அவர்கள் ஆஸ்கார் விருது வாங்காதது இளையராஜா இயலாமையா ? அல்லது இளையராஜாவிற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று வருந்துவது ரசிகர்களின் அறியாமையா? யார் சிறந்த தாய் என்பதை பெற்ற பிள்ளைகள் சொல்வது தான் சரியாக இருக்குமே தவிர வேறொரு தாயின் பிள்ளை சொல்வது சரியாக இருக்காது. இசையை அமைப்பது அறிவு சார்ந்ததாக இருந்தாலும் இசை உணர்வை அடிப்படையாகக் கொண்டது, இந்த மக்களின் உணர்வை எந்த இசை தூண்டுகின்றதோ அதுவே சிறந்த இசை. நம் மொழி தெரியாத,…
-
எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்?
எது சிறந்த எழுத்து ?யார் சிறந்த வாசகர் ?எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது என்பதை பார்க்காமல் எழுத்தின் ஜீவனைப் புரிந்து கொள்கிறானோ அவன் தான் சிறந்த வாசகன். யார் எழுதியது என்பதை தெரிந்து கொண்டு, எழுதியவரை நம்பி கருத்தை புரிந்தது போல் நம்புபவன் சராசரி வாசகன். புத்தர், விவேகானந்தர், காந்தி,…
-
பாலியல் துன்புறுத்தல் #metoo
நீதி உலகெங்கும் ஒன்றல்ல, இந்தியாவின் நீதி, அரபுநாடுகளில் அநீதி, இந்தியாவில் திருமணத்திற்கு முன் காதலிப்பது என்பது புனிதமானது. அரபு நாடுகளில் இதற்கு தூக்குத் தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் காதலித்தவனுக்கு அரபு நாட்டில் தூக்கு தண்டனை கொடுப்பது உலக நீதி அல்ல. திரை உலகம், பாலியல் ஒழுக்கத்தில் அது ஒரு தனி உலகம்.திரை உலகத்தின் பாலியல் நீதி என்பது, நிஜ உலகத்தின் நீதிக்கு முற்றிலும் முரணானது. திரை உலகத்தில் ஆண்-பெண் வேற்றுமையே இல்லை, எனவே அங்கு…
-
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன?
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,கற்பின் சிறப்பை, குடும்ப உறவு முறையை சமுதாயத்தில் சீர்குலைப்பது தான் முற்போக்கு சிந்தனை யாளர்களின் முதல் பணி. ஒழுக்கமான சமுதாயத்தில் ஒழுக்கம் இல்லாதவர்களுக்கு முக்கியத்துவம் பெற்று கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை. தெளிவாக சொல்லவேண்டும் என்றால் நம்வீட்டு தக்காளி கூடையில் ஒருதக்காளி அழுகிவிட்டாள் அப்புறப்படுத்திவிட்டு மீதம்முள்ள…
-
அலங்கார எழுத்துக்களை போல் ஆய்வு எழுத்துக்களையும் படிப்பதால் பயன் இல்லை
கவிதைக்கு வரி அழகு, கண்ணுக்கு ஒளி அழகு, கடலுக்கு அலை அழகு, கல்விக்கு அறிவு அழகு, மண்ணுக்கு மரம் அழகு, நட்புக்கு நம்பிக்கை அழகு, உறவுக்கு உணர்வு அழகு, உடலுக்கு உயிர் அழகு, வானுக்கு விண்மீன் அழகு, வீட்டுக்கு ஒளி அழகு, நாவலுக்கு கதை அழகு, மதத்துக்கு கோட்பாடு அழகு, கட்சிக்கு கொள்கை அழகு, தமிழுக்கு குரல் அழகு, ஆணுக்கு பண்பு அழகு, பெண்ணுக்கு அன்பு அழகு, ஆய்வுக்கு பொருள் அழகு. இது போன்ற அலங்கார எழுத்துக்கள்,…
-
மண்பானை
ஒருவன் மண்பானையிடம் கேட்டான். “இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும்எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?” மண் பானை சொன்னது, ” என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்? என்னைப் போலத்தான் இருப்பான்.” மண்பானை எப்படி தண்ணீரை குளிர்ச்சியாக மாற்றுகின்றது என்று தெளிவுபடுத்தாமல் இது போன்ற பயனற்ற எழுத்துகளைப்போல் பல எழுத்தாளர்கள் கதைளை எழுதி நம் மக்களை முட்டாள்களாகிவிட்டாகள் இவர்களை எப்படி மீட்டு எடுப்பது?
