திருமணமும்_குடும்பமும்
-
பாத பூசை
திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்வொரு பெற்றோருக்கும் பிள்ளைகள் இறைவன் போட்ட பிச்சை, தவமிருந்து பெற்ற பிள்ளைகளின் கால்களை தொட்டு வணங்கி இறைவனுக்கு நன்றி சொல்லாத பெற்றோர்களே இல்லை. நாம் பிறக்கும் போதே பய உணர்வோடு தான் பிறக்கின்றோம் அதன் காரணத்தால் நம்மை விட உயர்ந்தவர்களை பார்த்தால் நமக்கு பயம்…
-
மணப் பொருத்தம்
திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியர்கள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை வேறு வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும், இந்த உலகில் ஒருவருடைய மணவாழ்க்கை அனுபவம் போல் வேறு ஒருவருக்கு இருக்காது,எனவே திருமணத்தைப் பற்றிய கருத்து ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு தான் இருக்கும் .திருமண வாழ்க்கையில் யார் ,யாருக்கு பொருத்தமாக இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. 30, 40 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகுதான் தம்பதிகளுக்கு தெரியும் அவர்களுக்குள் பொருத்தம் இருந்ததா,இல்லையா என்று .திருமண வாழ்க்கையில் ஆணும், பெண்ணும்…
-
அடிமை உடன்படிக்கை
வாழ்நாள் முழுவதும் நாம் சொல்வதை செய்ய, நம் தேவையை பூர்த்தி செய்ய ஒரு அடிமை கிடைத்தால் நாம் தான் கொடுத்து வைத்தவர்கள் .பணத்தால் வாங்க முடியாத செல்வம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை கிடைப்பது தான்,ஒரு ஆணுக்கு பெண் அடிமை கிடைப்பதும், ஒரு பெண்ணுக்கு ஆண் அடிமை கிடைப்பதும் இயற்கை கொடுத்த வரம்.அடிமை வாழ்க்கையில் உரிமைக்கு இடம் இல்லை,சொல்வதை செய்யக்கூடிய கடமை மட்டுமே உள்ளது ,எனவே இரண்டு அடிமைகளும் இல்லற வாழ்க்கையில் உரிமையை பேசாமல் அடிமையாக இருந்து கடமையை…
-
சாதி
திறமையான திருடனை இந்த சமுதாயம் திருடனாக ஏற்றுக் கொள்ளாது. திறமை இல்லாமல் திருடி மாட்டிகொண்டவனை தான் திருடனாக ஏற்றுக்கொள்ளும். அதுபோல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், மக்களிடம் சாதி உணர்வை தூண்டியும், சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லியும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் தலைவர்களைத் தான் ஆளுமை மிக்க தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்,நேர்மையான, ஒழுக்கமான, அனைவரையும் சமமாக பார்க்கும் திறமையான அரசியல் தலைவர்களை மக்கள் அரசியல் தலைவராகவே ஏற்க மாட்டார்கள்.இது மக்களின் தவறல்ல, இது இயற்கையின் நீதி.…
-
உண்மையான காதல்
காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இதுதான் நாகரிகம். காதல் திருமணம் அதிகரிப்பது நாகரிகத்தின் வளர்ச்சி என்பது தவறான பார்வை, தவறான கருத்து, இது அநாகரிகத்தின் ஆரம்பம். உண்மைக் காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பு. சாதி, மதம், பதவி, செல்வம், கல்வி, அழகு, இது எதையும் பார்க்காமல்…
-
ஆணும், பெண்ணும் சமமா?
அறிவு என்றால் என்ன என்பதை நான் ஆய்வு செய்து “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகம் எழுதியதன் மூலம் நான் பெற்ற அறிவே இந்த கட்டுரை எழுதுவதற்கு மூலக்காரணம். அறிவால் ஆணும், பெண்ணும் தனித்தனி உலகம். ஆணின் உணர்வை பெண்ணும், பெண்ணின் உணர்வை ஆணும் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு நிகழ்வு ஆணுக்கு கொடுக்கும் அறிவும், பெண்ணுக்கு கொடுக்கும் அறிவும் வெவ்வேறு. அறிவிலும், திறனிலும் ஆணும், பெண்ணும் சமம் அல்ல என்பது அறிவியல் உண்மை. ஆண்களின்…
-
பெற்றோர்களே பிள்ளைகளுக்கும் முதல் குரு
என்னுடைய ஆய்வின்படி பெற்றோர்கள், தான் செய்த தவறை, தவறு என்று ஒத்துக் கொண்டால்தான் அதே தவறை பிள்ளைகள் செய்யமாட்டார்கள். பல குடிகாரர்களின் பிள்ளைகள் குடிகாரர்களாகவும், சில குடிகாரர்களின் பிள்ளைகள் குடிக்காமல் இருப்பதற்கு தந்தையே காரணம். எப்படி வாழ வேண்டும் என்பதையும், எப்படி வாழக் கூடாது என்பதையும் பெற்றோர்களைப் பார்த்தே பிள்ளைகள் தெரிந்து கொள்கிறார்கள். தான் செய்த தவறையும், ஒழுக்கக்கேடான செயலையும் நினைத்து வெட்கப்படும், வருத்தப்படும் பெற்றோரை பார்க்கும் பிள்ளைகள் இந்தத் தவறை நாமும் செய்யக்கூடாது என்ற அறிவை…
-
கற்பு
கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு. அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு, கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அனுபவம் இல்லை என்ற அறியாமையே கற்பு ஆகும். ஒருவர் கற்போடு வாழ்வதால் இந்த உலகத்திற்கு பெரிய பயன் ஏதும் இல்லை, ஆனால் தன் வாழ்க்கைத் துணையுடன் கற்போடு வாழ்கின்றவர்களால் மட்டும்தான் நிறைவான இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியும், கற்பு என்பது…
