திருமணமும்_குடும்பமும்
-
திருமண வாழ்த்து
அறிவற்ற நிலையில் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் ! இதை படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் வாழ்த்துவதாக நினைக்கமாட்டார்கள் சாபம் விடுவதாகதான் நினைப்பார்கள், புரிந்துகொண்டால் மணமக்களை வாழ்த்த இதைவிட சிறந்த வார்த்தை இல்லை என்பது புரியும். அறிவற்ற நிலையில்தான் உணர்வை அனுபவிக்க முடியும். இல்லறத்தில் இன்பமாக வாழ இந்த இரண்டு அறிவும் இருக்கக் கூடாது. ஒன்று, இளமைப்பருவத்தில் இருந்தது போன்று யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயக்கூடிய அறிவு இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டாவது, கற்பு என்ற…
-
வெறுப்பு கலவரத்தின் பிறப்பிடம்
கலவரங்களை மக்கள் செய்தாலும் அதை உருவாக்குபவர்கள் ஆட்சி செய்பவர்களும், ஆட்சிக்கு வரநினைப்பவர்களும்தான். கலவரம் மனித சமுதாயத்திற்கு புதியது அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதவி வெறி பிடித்தவர்கள் மக்களைப் பிரித்தாளவேண்டும் என்பதற்காகவே சாதி, மதம், மொழி, இனம், பொருளாதாரம் ஆகியவற்றால் மக்களிடையே வேற்றுமை வெறுப்பை ஏற்படுத்தி கலவரங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்பது ஒருவித குறுக்குவழி, இந்த குறுக்கு வழியை பிஜேபி கட்சி பயன்படுத்தி பிரிவினையின் மூலம் கலவரங்களை ஏற்படுத்தி தான் ஆட்சிக்கு வந்தது. பிஜேபி…
-
தாயா ! தாரமா !!
திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும் அது அவர்களுடைய கருத்தாகதான் உள்ளதே தவிர, அதற்கான தெளிவு இல்லை. அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு. முக்காலத்தையும் உணர்ந்தவன் இந்த உலகில் யாரும் இல்லை, ஆனால் முக்காலத்திலும் வாழ்பவன் தான் மனிதன். விலங்குகள் நிகழ்காலத்தில்மட்டும் தான் வாழ்கின்றன, ஆனால் மனிதன் இறந்த…
-
திருமண வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற்கான தீர்வை பதிவு செய்து உள்ளேன். நாம் பெற்ற அறிவு தான் நம் வாழ்க்கைக்கு சூனியம், நாம் பெற்ற அறிவே நம்மை உணர்வுபூர்வமாக வாழ விடாமல் தடுக்கின்றது. சிறு வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் (18 வயது முதல் 25 வயதிற்குள்)இருமணம் கலந்து அன்போடும்,…
-
காதல் புனிதமானதா?
காதல் புனிதமானதா ? இதயம் கண்களால் பேசினால் காதல் !உணர்வு வார்த்தைகளால் பேசினால் காமம் !ஒரு முறை மட்டுமே வந்தால் காதல்!பலமுறை வந்தால் அது காமம்!இரண்டு இதயங்கள் பேசிக் கொள்வது என்பது புனிதமானது, தெய்வீகமானது, இரண்டு இதயங்களின் தகவல் பரிமாற்றம் என்பது இரண்டு ஆத்மாக்கள் கலப்பதாகும், இந்த நிகழ்வுகள் காற்றாலும், நிலவாலும், இயற்கையாலும் மட்டுமே நடைபெறுகின்றது, அதனால்தான் சங்க இலக்கியங்களில் காதலுக்கு காற்றையும், நிலவையும், தூது விட்டார்கள்.இந்த நிலை ஆழ்ந்த தியானத்திற்கு சமமானது. இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள பரிசுத்தமான…
-
எச்சரிக்கை மணி
திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் நான் உணவகத்தில் சாப்பிடும்போது சாப்பிட்டது போதாது என்பதை நகைச்சுவையோடு சொல்ல நினைத்து கோட்டை எல்லாம் அழிங்க முதலிலிருந்து என்று சொல்லிவிட்டு நான் மட்டும் சிரித்துக் கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் தான் நான் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருப்பதும்.இந்த சமுதாயத்தால் என்னுடைய எழுத்தை புரிந்துகொள்ளவும் முடியவில்லை, என்னால் புரிய வைக்கவும் முடியவில்லை, இருப்பினும் சென்னையில் 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி என்னுடைய கருத்தை…
-
முத்தலாக் தடை சட்டம்
இஸ்லாமிய ஆணோ,பெண்ணோ, மூன்று முறை தலாக் என்று சொன்னால்,அவர்களுடைய மணவாழ்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பொருள் இது அவர்களுடைய கலாச்சாரம். இது பெண் கொடுமையா ?புதிய சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? இஸ்லாமிய தம்பதிகள் இனி சேர்ந்து வாழ்வார்களா? இதுதான் நம் கேள்வி. இந்து மதக் கலாச்சாரப்படி ஒரு ஆண் ஒரு பெண் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி விட்டால் போதும்,அன்று முதல் அவள் அவனின் மனைவி.இது எப்படி! யார் வேண்டுமானாலும் யார்கழுத்திலும் கயிறை கட்டிவிட்டால்…
