கடவுள்_மறுப்பு
-
துன்பத்திற்கு மருந்து ஞானம்
அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்!அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் இந்த கட்டுரையை படித்து பயன்பெறுங்கள், இதை உங்களுக்காக தான் எழுதி இருக்கின்றேன். அறிவில் இரண்டு வகை உண்டு, நான் என்ற உணர்வின் ஆளுமையில் ஐந்து அறிவு மூலம் பகுத்து அறிந்து வாழ்வதற்கு தேவையான அறிவை பெறுவது முதல் வகை. நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டும், வாழ்வதற்காக…
-
கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்!
கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கடவுளையும் நம்பாமல் நான் நாத்திகனாக தான் இருந்தேன். இறந்த காலத்தின் தொடர்போடுதான் நம்முடைய சிந்தனை முதல் உலக நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கின்றது. அணுவின் அசைவு முதல் பிரபஞ்சத்தின் இயக்கம் வரை அனைத்தும் விதியின் பயனே. என்னுடைய அசைவு ஒவ்வொன்றையும்…
-
மக்கள் பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை
கடவுள் இல்லை என்பதை பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தெளிவு படுத்தாததால், மக்கள் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை. ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை மட்டுமல்ல, மக்களையும் சாதி ஏற்றத்தாழ்வில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், அதை நான் எழுதிய” குமார் விதிகள் “என்ற புத்தகத்தால் மட்டுமே முடியும். நான் எழுதிய புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை நாத்திகர்கள் எப்போது புரிந்து கொள்கின்றார்களோ அப்போதுதான்…
-
இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம்
நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல்லாத சமுதாயத்தில் இருந்து தான் கடவுள் நம்பிக்கை முற்போக்கு சிந்தனையாக உருவாகி உள்ளது.சீனாவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதிகம், எனவே கடவுள் இல்லை என்று சொல்வது முற்போக்கு சிந்தனை அல்ல. கற்கால மனிதனின் முற்போக்கான சிந்தனை தான் ஆத்திகம். தன்னுடைய வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால்தான் மனிதன்…
-
என் பார்வையில் அரசியல் (அரசியல் விழிப்புணர்வு கட்டுரை)
அரசியல்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. கல்வி அறிவு இல்லாமல் கூட இந்த உலகில் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக, சிறப்பாக வாழ முடியும், ஆனால் அரசியல் அறிவு இல்லாமல் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதற்கு சரித்திர நிகழ்வுகளே சான்று. முன்னோர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டால்தான் அவர்கள் பட்ட துன்பத்திலிருந்து சிறிதளவு அறிவை நாம் பெற முடியும். அரசியலால் அவர்கள் அனுபவித்த துன்பத்தை நாம் அறிவாக பெறவில்லை என்றால் நாமும், நம் சந்ததிகளும் வருங்காலத்தில் அரசியல்…
-
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்!
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்! கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றார். இந்த பிரபஞ்சத்தை இயக்குபவர் தான் கடவுள் என்ற ஆன்மீகவாதிகளின் புரிதலோடு நானும் உடன்பட்டு அறிவியலின் உதவியுடன் கடவுளைப் பற்றி ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதுகின்றேன். உயிர் நம்மை இயக்கினாலும் உயிரை நாம் பார்க்க முடியாது, அது போல் கடவுள் இந்த பிரபஞ்சத்தை இயக்கினாலும் கடவுளை நாம் பார்க்க முடியாது. நான் ஆன்மீகவாதியாக இருந்தாலும் அறிவியல் படி கடவுளை ஆய்வு செய்வதால் பலர் என்னை நாத்திகனாகவும்…
-
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான்
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறிவை கொடுத்து ஒருவர் நம்பிக்கையை உடைத்து விடலாம் அப்படி ஒருவர் நம்பிக்கையை உடைத்துவிட்டால் அவர் பெற்ற அறிவே அவருக்கு சூனியமாகிவிடும், எனவே யாருடைய நம்பிக்கையையும் யாரும் உடைக்க வேண்டாம் கனவிலும், கற்பனையிலும்மே மனிதன் வாழ்க்கை சுகமாக கழியட்டும் ! தன்னம்பிக்கையை போல் கடவுள் நம்பிக்கையும் தனிமனித…
-
கடவுள் நம்பிக்கை
கடவுள் இல்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை துன்பத்துக்கு மருந்தாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்றாலும் கடவுளை நம்புவதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகின்றது.யாமிருக்க பயம் ஏன், கடவுள் நிச்சயம் உன்னை காப்பார், இந்த நிலையும் மாறும் என்ற இதுபோன்ற நம்பிக்கையே ஒருவனை துன்பத்திலிருந்து மீண்டு வாழ நம்பிக்கை கொடுக்கின்றது, இதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் தான் அறிவு கடவுள் இல்லை என்று சொன்னாலும் உணர்வு கடவுளையே நம்புகின்றது.
-
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்…
கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள் இல்லை என்பதை புரிய வைக்க அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நான் எழுதிய விதி உண்மை என்ற ஆய்வுக்கட்டுரை மட்டுமே உள்ளது. இதை ஆத்திகமும், நாத்திகமும் புரியாதது போல் தவிர்க்கின்றது. விதி உண்மை என்ற அறிவியல் உண்மையை ஏற்காமல் (புரிந்துகொள்ளலாம்)…
