இயற்கையின்_நீதி
-
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்து மதமும் அன்பையும், நீதியையும் தான் மக்களுக்கு போதிக்கின்றது, கல்வி அறிவு இல்லாத காலத்தில் மக்களுக்கு நீதியை கற்பித்தது மதங்கள் தான். அந்த வகையில் இந்து மதத்தின் நீதியை தான் “சனாதன தர்மம்” என்று மதவாதிகள் சொல்கின்றார்கள். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பு…
-
துன்பத்திற்கு மருந்து ஞானம்
அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்!அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் இந்த கட்டுரையை படித்து பயன்பெறுங்கள், இதை உங்களுக்காக தான் எழுதி இருக்கின்றேன். அறிவில் இரண்டு வகை உண்டு, நான் என்ற உணர்வின் ஆளுமையில் ஐந்து அறிவு மூலம் பகுத்து அறிந்து வாழ்வதற்கு தேவையான அறிவை பெறுவது முதல் வகை. நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டும், வாழ்வதற்காக…
-
மணப் பொருத்தம்
திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியர்கள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை வேறு வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும், இந்த உலகில் ஒருவருடைய மணவாழ்க்கை அனுபவம் போல் வேறு ஒருவருக்கு இருக்காது,எனவே திருமணத்தைப் பற்றிய கருத்து ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு தான் இருக்கும் .திருமண வாழ்க்கையில் யார் ,யாருக்கு பொருத்தமாக இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. 30, 40 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகுதான் தம்பதிகளுக்கு தெரியும் அவர்களுக்குள் பொருத்தம் இருந்ததா,இல்லையா என்று .திருமண வாழ்க்கையில் ஆணும், பெண்ணும்…
-
அடிமை உடன்படிக்கை
வாழ்நாள் முழுவதும் நாம் சொல்வதை செய்ய, நம் தேவையை பூர்த்தி செய்ய ஒரு அடிமை கிடைத்தால் நாம் தான் கொடுத்து வைத்தவர்கள் .பணத்தால் வாங்க முடியாத செல்வம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை கிடைப்பது தான்,ஒரு ஆணுக்கு பெண் அடிமை கிடைப்பதும், ஒரு பெண்ணுக்கு ஆண் அடிமை கிடைப்பதும் இயற்கை கொடுத்த வரம்.அடிமை வாழ்க்கையில் உரிமைக்கு இடம் இல்லை,சொல்வதை செய்யக்கூடிய கடமை மட்டுமே உள்ளது ,எனவே இரண்டு அடிமைகளும் இல்லற வாழ்க்கையில் உரிமையை பேசாமல் அடிமையாக இருந்து கடமையை…
-
தமிழ் புத்தாண்டு தை ஒன்றா? சித்திரை ஒன்றா?
எந்த ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாமல், அரசியல் கலப்பு இல்லாமல்,மத உணர்வு இல்லாமல், மொழிப்பற்று இல்லாமல், அனைத்து உணர்விலிருந்தும் விடுபட்டு அறிவின் ஆளுமையில் அறிவியல் பூர்வமாக நடுநிலையில் இந்த கட்டுரையை நான் எழுதிஇருக்கின்றேன். ஒரு மதத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் அடையாளமாக 365 நாட்களில் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் ஆண்டில் முதல் நாளாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம், சூரியனை பூமி சுற்றிவர எடுத்துக் கொள்ளும் 365 நாட்களில் எந்த ஒரு நாளையும் ஆண்டின் முதல் நாளாக எடுத்துக்…
-
யாரிடமும் சொல்லிடாதீங்க
திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலு அவர்கள் நடித்த ஒரு திரைப்பட காட்சியில், ஏரியிலிருந்து ஒருவர் வெளியே வந்து வடிவேலு இடம் யாரிடமும் சொல்லிடாதீங்க என்று சொல்லிவிட்டு ஏரியில் மறைந்து கொள்வார், எதடா சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போற என்று வடிவேலு கேட்பார் அதற்கு மீண்டும் சொல்லிடாதீங்க என்று சொல்லி ஏரியில் மறைந்து கொள்வான், போலீஸ் வடிவேலிடம் என்னடா சொல்லிவிட்டு போனான் என்று கேட்பார்கள், அதற்கு வடிவேலு சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போனான் சார் என்று சொல்வது அனைவரும் ரசிக்கக்கூடிய நகைச்சுவையாக…
-
ஆணும், பெண்ணும் சமமா?
அறிவு என்றால் என்ன என்பதை நான் ஆய்வு செய்து “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகம் எழுதியதன் மூலம் நான் பெற்ற அறிவே இந்த கட்டுரை எழுதுவதற்கு மூலக்காரணம். அறிவால் ஆணும், பெண்ணும் தனித்தனி உலகம். ஆணின் உணர்வை பெண்ணும், பெண்ணின் உணர்வை ஆணும் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு நிகழ்வு ஆணுக்கு கொடுக்கும் அறிவும், பெண்ணுக்கு கொடுக்கும் அறிவும் வெவ்வேறு. அறிவிலும், திறனிலும் ஆணும், பெண்ணும் சமம் அல்ல என்பது அறிவியல் உண்மை. ஆண்களின்…
-
நம்பிக்கையும், புரிதலும்
யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது அறிவின் வெளிப்பாடு. கடவுள் இருக்கு என்ற நம்பிக்கையும், கடவுள் இல்லை என்ற நம்பிக்கையும் அறியாமையின் வெளிப்பாடே. ஒரு நம்பிக்கையை மற்றொரு நம்பிக்கையால் சிதைப்பதும் அறியாமையின் வெளிப்பாடே, இந்த இரண்டு நம்பிக்கையையும் தவறு என்று அறிவியலால் புரிந்து கொண்டால் அது தான் அறிவு. இந்த அறிவை…
