தன்_மதிப்பு

  • பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா?

    பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உன்னை விட உயர்ந்தவன், நீ என்னை விட தாழ்ந்தவன் என்ற மனநிலை உணர்வின் வெளிப்பாடு,ஒருவர் நமக்கு அடிமையாக இருப்பதன் மூலம் நாம்பெரும் மகிழ்ச்சியும் உணர்வின் வெளிப்பாடு. உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். மனிதன் அறிவால் உணர்வை ஆளுமை செய்வதால் தான் !…

  • நேர்மையைப் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை

    நேர்மையில் உண்மை இருக்கவேண்டும், உண்மையில்லா நேர்மை, நேர்மை அல்ல. தர்மத்தில் இரக்கம் இருக்கம் வேண்டும், சுயநலத்துக்காக இரக்கமில்லா தர்மம், தர்மம் அல்ல. விளம்பரத்துக்காக அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், தர்மம் செய்வது தர்மம் அல்ல. வலது கை கொடுப்பதை இடதுகை அறியாத வகையில் தர்மம் இருந்தால்தான் அது தர்மம். ஒருவருடைய நேர்மை அவருடைய இயல்பாக இருந்தால் அது உண்மையான நேர்மை. தன்னுடைய நேர்மைக்கு பலனை (புகழை, பதவியை ) எதிர்பார்க்கின்றவர்கள் உண்மையான நேர்மையானவர்கள் அல்ல. பல ஐஏஎஸ்,…

  • யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன?

    என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்கோ அவர்கள் குறிப்பிட்டு நல்லவர் என்பதற்கு என்ன அளவுகோல் வைத்து இருக்கின்றீர்கள், அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவனும், அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுபவனும், கொலைகாரனும், கொள்ளைக்காரனும் தன்னுடைய செயலை சரி என்று நினைப்பதால் தான் செய்கின்றார்கள், அதனால் அனைவரும் தன்னை நல்லவராகவே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உங்களுடைய…

  • கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு

    பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள் இறந்த பிறகும் உலகத்திற்கு கற்பித்துக் கொண்டேஇருக்கின்றார்கள்,காந்தி, காமராசர், கண்ணகியை போல்.

  • அன்பே அழகு

    குழந்தைகளை பார்த்தால் சிலர் குழந்தைகளாகவேமாறி அவர்களிடம் விளையாடுவார்கள், இதனால் குழந்தைகள் அவர்களிடம் மிகவும் அன்பாக இருக்கும்.அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன். குழந்தைகளுடைய கள்ளமில்லா முகம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே நான் குழந்தைகளை வேற்றுமை பாராமல் கட்டித் தழுவிக்கொள்வேன், பதிலுக்கு குழந்தைகளும் என் மீது அன்பு கொண்டு முகத்தோடு முகம் வைத்து அணைத்துக் கொள்ளும் போது என்னையே நான் மறந்துவிடுவேன், குழந்தைகள் தெய்வத்துக்கு மேலானவர்கள், அவர்களின் முகத்தை பார்த்தால் துன்பம் அனைத்தும் பறந்தோடிவிடும். குழந்தைகளிடம் நாம்…

  • சாதனையும், சேவையும்

    உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை போல் நான் இருப்பது என் இயல்பு, இது எப்படி சாதனையாக முடியும்.. உசேன் போல்ட் பிறப்பாலும் வளர்ப்பாலும் வேகமாக ஓடக்கூடிய திறனை பெற்று இருக்கின்றார் என்பது அவருடைய இயல்பு இதை சாதனை என்று எப்படி சொல்ல முடியும்.…

  • அவமானம்

    “அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான்———————-தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர்களால் ஏற்படுவது அல்ல,நீயாகவே ஏற்படுத்திக் கொள்வது. எந்த இடத்தில் உனக்கு மரியாதைத் தேவை என்று என்னுகின்றாயோ அந்த இடத்துக்குரிய தகுதியை நீ வளர்த்துக் கொண்டால் மரியாதை தானாக உனக்கு கிடைக்கும், எல்லா இடத்திலும் மரியாதையை பெற்றவர் இந்த உலகில் யாரும் இல்லை. தகுதிக்கு அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பவன் வாழ்நாள் முழுவதும் அவமானப்பட வேண்டியது…