அறிவுத்_தற்பெருமை

  • பயம்

    யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித்தவர், படிக்காதவர் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி என்னிடம் இல்லாத அறிவை மற்றவர்களிடமிருந்து நான் தினம் தினம் பெறுகின்றேன். அறிவும் நீரும் தாழ்வான பகுதியை நோக்கி தான் செல்லும், நம்மை அறிவாளி என்று நினைத்துக் கொண்டால் அறிவை பெற முடியாது, நம்மிடம் இல்லாத அறிவை…

  • சுய பரிசோதனை

    நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும், எந்த ஊரில் இருக்கிறோம் என்பது தெரிந்தால் தான் பயணத்தின் திசை எந்த திசையை நோக்கி என்பதை அறிந்து பயணிக்க முடியும்,அப்போதுதான் செல்ல வேண்டிய ஊருக்கு சரியாக சென்றடைய முடியும். அதுபோல் நம் வாழ்க்கை பயணத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை முடிவு செய்வதற்கு முன் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு இலக்கை முடிவு செய்தால் தான் வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும்.நாம் ஒவ்வொருவரும்…

  • வாதம் செய்வது சரியா?

    வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும்.வாதம் எங்கு செய்ய வேண்டும், வாதம் இல்லாமல் கருத்தை மட்டும் எங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டதால் வாதத்தைபற்றி ஆய்வு செய்து அதற்கான அளவுகோலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தேன்,அதை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற…

  • அறிவை அளக்கக்கூடிய அளவுகோல்…

    அறிவை அளக்கக்கூடிய அளவுகோல் (scale) என்னிடம் உள்ளது, அதை வைத்து நமக்கு இப்போது எத்தனை அறிவு இருக்கு என்று சுயபரிசோதனையும் செய்து கொள்ளலாம் மற்றவர்களுக்கு எத்தனை அறிவு இருக்கு என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் நாம் அவர்களிடம் பழகலாம். அறிவின் அளவுகோல் தேவைப்படுகின்றவர்கள் விருப்பத்தை தெரிவித்தால் கொடுக்கின்றேன்.

  • அறைக்கூவல்

    குமார்விதிகள் என்ற புத்தகத்தை நான் எழுதி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டிருந்தேன், மேலும் பல ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தேன், இந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரும் அவர்களுடைய கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவில்லை, கருத்தை தெரிவிக்க தயங்குகிறார்கள். காரணம் நான் எழுதிய புத்தகம் என்னுடைய அறிவை வெளிப்படுத்துவது போல், நான் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு என்னுடைய புத்தகத்தை விமர்சித்தால் அவர்களுடைய அறிவு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சமே. பகுத்தறிவாளர்கள், முற்போக்கு வாதிகள், நாத்திகர்கள், ஆன்மீகவாதிகள், மதத்தலைவர்கள், எழுத்தாளர்கள்,கல்வியாளர்கள்…

  • யார் கண் பார்வை இல்லாதவர்?

    சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில், சருகுக்கு அடியில் கிடக்கும் தங்க நாணயத்தை பார்க்காமல் பல ஆயிரம் பேர் சாலையைக் கடந்து செல்வதால் அனைவருக்கும் கண் பார்வை இல்லை என்று பொருள் அல்ல. மரத்தடியில் கிடந்த தங்க நாணயத்தை காட்டிய பிறகும் தெரியவில்லை என்றால் தான் கண் பார்வை இல்லாதவர் என்று பொருள். ஒவ்வொரு மனிதன் பெரும் அறிவும் தற்செயலானவையே !அந்த அடிப்படையில் நானும் “என்னுடைய சிந்தனை எனக்கு கட்டுப்பட்டு இல்லை, இறந்த காலத்தின் தொடர்போடு தான் என்னுடைய…

  • தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன்

    என்னுடைய மகளும், மகனும் எனக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாகவும்,என்னுடைய மனைவியின் ஆதரவின் காரணமாகவும்,புத்தகம் எழுதுவதால் எந்த பயனும் இந்த சமுதாயத்திற்கு இல்லை என்ற விரக்தியில் இருந்த நான் அதிலிருந்து விடுபட்டு மீண்டும் ஒரு முயற்சியாக “குமார் விதிகள் “ என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். தமிழில் நான் எழுதியதை ஆங்கிலத்தில் என்னுடைய மகள் மொழிபெயர்த்து “Kumar laws”என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றார்கள். உடலை ஆளுமை செய்ய யோகா எப்படி உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவசியமோ, அது…

  • யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன?

    என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்கோ அவர்கள் குறிப்பிட்டு நல்லவர் என்பதற்கு என்ன அளவுகோல் வைத்து இருக்கின்றீர்கள், அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவனும், அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுபவனும், கொலைகாரனும், கொள்ளைக்காரனும் தன்னுடைய செயலை சரி என்று நினைப்பதால் தான் செய்கின்றார்கள், அதனால் அனைவரும் தன்னை நல்லவராகவே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உங்களுடைய…

  • முகமூடி

    “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல் “முகமூடி”என்ற இந்த ஆய்வு கட்டுரையை நான் எழுதுவதற்கு என்னுடைய எழுத்தை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் மனம் திறந்து பாராட்டிய நல் உள்ளங்களே காரணம். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என்னுடைய எழுத்தை தொடர்ந்து படிக்கும் சிலர் அதன் வலிமையை புரிந்து, இதுபோன்ற எழுத்தை…

  • புதிய அறிவைப் பெறுவோம்

    தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தான் அறிவாளி என்னுடைய கருத்து தான் சரியானது என்று எண்ணி எதிரியின் கருத்தை ஆரம்பத்திலேயே நிராகரிப்பவன் புதிய அறிவை பெற முடியாது. உதாரணத்திற்கு :-மின்சாரத்தைத் தொட்டால் shock அடிக்கும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் shock அடிக்காது என்று ஒருவர் சொன்னால், அவர்…