நட்பும்_உறவும்

  • ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 2

    “ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி “என்ற கட்டுரையை இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்து இருந்தேன், இதை படித்த நண்பர் போஸ்கோ அவர்கள் சரியா என்ற கலை இலக்கிய ஆய்வு மையத்தை வடலூரில் நடத்தி வருகின்றார், புத்தகங்களை படிப்பதும் சமுதாய சிந்தனையும் தான் இவரின் முழு நேர பணி. அவர் அவருடைய கருத்தை பதிவு செய்து இருந்தார், இதில் அவர் எழுதி இருந்தது, தங்கள் எழுத்து அவப்பொழுது எதையோ தொட்டுவிட்டு சென்று விடுகின்றது அந்த…

  • வாதம் செய்வது சரியா?

    வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும்.வாதம் எங்கு செய்ய வேண்டும், வாதம் இல்லாமல் கருத்தை மட்டும் எங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டதால் வாதத்தைபற்றி ஆய்வு செய்து அதற்கான அளவுகோலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தேன்,அதை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற…

  • நம்மை செதுக்கும் சிற்பிகள்

    நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள்.வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவதும், நம்அறிவாலும், உணர்வாலும் நாம் தேர்வு செய்யும் நண்பர்களால்தான்.

  • கடவுளைவிட உயர்ந்தவர்கள் உண்மையான நண்பர்களும், உறவுகளும்

    இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் நேற்றைய நிகழ்வை நான் பதிவிடுகின்றேன். “இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல் “ ஒரு வரிக்குள் ஆத்திகமும், நாத்திகமும் சேர்ந்து வருவது தான் இந்த வரியின் சிறப்பு. அறிவியல் படி கடவுள் இல்லை என்றாலும் எந்தத்துணையும் இல்லாமல் இருட்டில் தனியாக பயணிக்கும் ஒருவனுக்கு அவன் வணங்கும்…

  • ரகசியம் நம்மை அன்னியப்படுத்திவிடும்

    தேவைப்படும் பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டு தேவைப்படாத பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் வீடு சுத்தமாக இருப்பது போல், நாம் ரகசியம் என்று ஒரு சிலதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் ! மனசு தூய்மையாக இருக்கும். இருந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இடம். இப்போது வாழ்கின்ற இளைஞர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள், எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று. ஏன் என்று கேட்டால் அனைவரும் அப்படித்தான் இருக்கின்றார்கள்…

  • மன்னிப்பு

    தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தன்னை உயர்த்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு. தான் செய்த தவற்றிர்க்கும், குற்றத்திற்கும், பாவத்திற்கு மான விடுதலையே பாவமன்னிப்பு. தன்னுடைய தவற்றை உளமார உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்பது நம்பிக்கை. இது உண்மைதான் தவறு செய்யாதவன் மனிதனாக…