நீதிமன்ற_அதிகாரம்
-
உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின்றோம் என்பதையும் அறிவியல் ஆதாரத்தோடு நிரூபித்து ஆய்வு கட்டுரைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். இருப்பினும் புதிய நீதி உருவாகவில்லை. இந்த அறிவியல் உண்மையை ஆதாரமாக வைத்து உச்சநீதிமன்றம் புதிய நீதியை உருவாக்க வேண்டும்.மாறாக ஒருவன் செயலுக்கு அவன்தான் காரணம் என்ற பழைய நம்பிக்கையிலேயே நீதித்துறை செயல்பட்டால்…
-
என்கவுண்டர் (Encounter)
கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் இரண்டு என்கவுண்டர் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. காவல்துறை தற்காப்பிற்காக இந்த கொலையை செய்யவில்லை என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத அரசும்,காவல்துறையும் தன் மீது உள்ள அவப்பெயரை மறைக்க, மக்களை ஏமாற்ற என்கவுண்டர் என்ற பெயரில் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. அரசால் காவல்துறையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காவல் துறையில் லஞ்சம் பெருகிவிட்டது. காவல்துறையின் கொலைகள் அரசின் கையாலாகாத தனத்தின் வெளிப்பாடு. சட்டத்தை பாதுகாக்க கூடிய…
-
ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா?
பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா என்பதுதான். கடவுள் இருக்கு என்பது நம்பிக்கை என்பது போல், கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கைதான். ஒருவரின் நம்பிக்கையை பொய் என்று சொல்ல இருவரிடமும் அதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. என்னுடைய கேள்வி கடவுளைப் பற்றிய அறிவு…
-
நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது
நீதி, சட்டத்தை ஆதாரமாக வைத்திருக்கும் நம் நாட்டில், சட்டத்தை உருவாக்கக்கூடிய எம் எல் ஏ, எம் பி, யை குற்றவாளிகளாக தேர்ந்தெடுத்துவிட்டு, நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. நீதிமன்றம், நீதியை நிலைநாட்டுகின்ற இடம் அல்ல, அது சட்டத்தை செயல்படுத்தும் இடம். அங்கு நீதி கிடைக்காது. சட்டத்தை உருவாக்குகின்ற சட்டமன்றமும், நாடாளுமன்றமும் தான் நீதிமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் அங்கு நீதிபதிகள் என்பதை, மக்கள் புரிந்து கொண்டால் நேர்மையானவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்போதுதான் நீதி அனைவருக்கும்…
-
கடவுள் நம்பிக்கை விவாதத்திற்கு உட்பட்டதா?
இந்திய இறையாண்மைக்கு எதிராக, சட்டத்திற்கும் எதிராக மக்களை மதத்தால், சாதியால், பிரிவினை செய்ததற்கு பல ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும், கட்சித்தடைக்கு தகுதியான அரசியல் கட்சி நாட்டை ஆள்வதால் ஆன்மீக மூடநம்பிக்கைக்கு எதிராக பகுத்தறிவு விழிப்புணர்வு செய்தால் குற்றமாக தெரிகின்றது இன்றைய காவல்துறைக்கு. “யாமிருக்க பயமேன் “ இது வெறும் வார்த்தையல்ல மந்திரம், துன்பத்தில் இருந்து இறைவன் நம்மை காப்பார் என்று ஒருவர் நம்பினால் அதை யாரும் பாழ்பண்ணக்கூடாது. என்னை கடவுள் காப்பார் என்று நான் நம்பினால் அது…
-
எது ஜனநாயகம்?
மக்களுக்கு அறிவுரை சொல்லும் ஆட்சியாளர்களும், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும், ஜனநாயகத்தை மதிக்கிறார்களா என்று முதலில் பார்ப்போம், அதன் பிறகு மக்களிடம் தனிமனித ஜனநாயக கடமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும். 1)மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, MPக்கள் ஜனநாயகத்துக்கு எதிராக இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியது ஜனநாயக படுகொலை, இந்த ஜனநாயக கொடுமையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லாத ஊடகங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று மக்களுக்கு அறிவுரை கூற தகுதியில்லாத ஊடகங்கள். 2)குற்றம் செய்த…
-
நிர்பந்திக்காதே!
உங்கள் வாக்கு யாருக்கு என்று, நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் வாக்களிக்கப் போகும் கட்சியின் பெயரை சொன்னேன். அதை கேட்ட நண்பர் நானும் அதற்கே போடட்டுமா என்று கேட்டார். நான் அதற்கு வேண்டாம் என்றேன்.நண்பருக்கு புரியவில்லை, நான் சொன்னேன், நாம் எடுத்த முடிவு நமக்கு சரியானதாக இருக்கலாம் அது மற்றவர்களுக்கும் சரியானதாக தான் இருக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதற்கு உங்களுடைய வாக்கை போடுங்கள்…
-
உடுமலைப்பேட்டை சங்கர்
உடுமலைப்பேட்டை சங்கரின் செயலை கண்டித்து காவல்துறையும், நீதித்துறையும், கௌசல்யாவை, சங்கரிடம் இருந்து மீட்டு கௌசல்யா பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தால், கௌசல்யாவும், கௌசல்யா குடும்பமும், சங்கரும், சங்கர் குடும்பமும், ஆனந்தமான வாழ்வை வாழ்ந்து இருப்பார்கள். சங்கரும், கௌசல்யாவும், சிறு வயதில் தெரியாமல் செய்த தவறுக்கு அங்கீகாரம் கொடுத்து அவர்களை சீரழித்தது நம்முடைய சட்டமும், காவல் துறையும் தான்.ஒழுக்கம் இல்லாத கௌசல்யாவுக்கு பாராட்டும், ஒழுக்கமாக வாழ்ந்த கௌசல்யா பெற்றோர்களுக்கு ஆணவக்காரர்கள் என்ற பட்டயம் கொடுத்ததும் நம் ஊடகங்கள் தான்.இதுபோன்ற தொடர் நிகழ்வுகளின்…
