காவல்துறை_ஊழல்
-
என்கவுண்டர் (Encounter)
கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் இரண்டு என்கவுண்டர் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. காவல்துறை தற்காப்பிற்காக இந்த கொலையை செய்யவில்லை என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத அரசும்,காவல்துறையும் தன் மீது உள்ள அவப்பெயரை மறைக்க, மக்களை ஏமாற்ற என்கவுண்டர் என்ற பெயரில் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. அரசால் காவல்துறையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காவல் துறையில் லஞ்சம் பெருகிவிட்டது. காவல்துறையின் கொலைகள் அரசின் கையாலாகாத தனத்தின் வெளிப்பாடு. சட்டத்தை பாதுகாக்க கூடிய…
-
நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல்துறையே !
பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், குற்றம் செய்தவரிடம் பணம் வாங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் செய்தவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு குற்றம் செய்தவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டால், இந்த அனுபவம் குற்றம் செய்தவருக்கு மீண்டும் குற்றம் செய்ய வேண்டும் என்ற அறிவையும்,பாதிக்கப்பட்டவருக்கு காவல்துறையை நம்புவது தவறு, குற்றம் செய்தவனுக்கு நாமே தண்டனை கொடுப்பது தான் சரி என்ற அறிவையும் கொடுக்கும். அரசு ஊழியர்களை போல் இல்லாமல் சமுதாயத்தில் நீதியை…
