Politics

  • தேர்தல் 2026

    சீமான் முள் புதர்களை அகற்றி சாலை அமைத்துக் கொடுத்தார், விஜய் அதில் எளிதில் பயணம் செய்து கோட்டைக்கு சென்று விட்டார். சீமான் திராவிடம் மற்றும் தேசிய கட்சிகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்றால் விஜய் வெற்றி பெற்றிருக்க முடியாது. மக்கள் சீமானின் கொள்கையை ஏற்றுக் கொண்டார்களே தவிர சீமானை நம்பவில்லை, சீமான் தேர்தலில் தோற்றுவிட்டாலும் அவருடைய திராவிட ஒழிப்பு கொள்கை வெற்றி பெற்றுவிட்டது. கொள்கை வெற்றி பெற்றால் கொள்கைவாதியும் வெற்றி பெற்றதாக தான் பொருள். விஜய்…

  • கடந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் மாற்ற முடியுமா?

    திரைப்படங்கள், கார்ட்டூன் படங்களில் டைம் டிராவல் செய்து கடந்த காலத்துக்குச் சென்று, கடந்தகால நிகழ்வுகளை மாற்றுவது போல் நாம் திரைப்படம் பார்த்திருப்போம், அதுபோல் திரைப்பட நடிகர் பார்த்திபன் கடந்தகால நிகழ்வுகளின் தொடர்பு இல்லாமல் எந்த மதத்தையும், சாதியையும் சாராமல், பெற்றோர்களே இல்லாமல், பெற்றோர்கள் இல்லாததால் தாய்மொழியே இல்லாத ஒரு புது மனிதனாக இந்த தமிழ்நாட்டில் 27/4/26 அன்று முதல் பார்த்திபன் என்ற நபர் இந்த விலாசத்தில் வாழ்கின்றார் என்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சான்று அளித்துள்ளார் இதை பார்க்கும் போது…

  • தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு சரியா?

    நாம் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நம் ஜனநாயக  உரிமையை பறிப்பது இட ஒதுக்கீடு, தேர்தலில் இட ஒதுக்கீடு  ஜனநாயகத்துக்கு எதிரானது, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் சம உரிமை இருக்கும்போது 33 சதவீத இட ஒதுக்கீடு எதற்கு? ஆண்களுக்கு நிகராக பெண் வாக்காளர்களும் இருப்பதால் பெண்களின் உரிமையை ஆண் எப்படி பறிக்க முடியும்? பெண்கள் பெண்களை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில் ஏன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு…

  • தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!

    மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்கு ஏற்ப இந்த தலைப்பை நான் ஆய்வு செய்வதற்கு முன்னால் காவல்துறை அதிகாரி ரவி IPS அவர்களின் காணொளியை நான் பார்த்ததே காரணம். நான் பார்த்த காணொளியில் வடகொரிய மக்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள் என்று ரவி IPS…

  • மே 17 இயக்கத்திற்கு…

    ஜனநாயகத்தில் சிறுபான்மையினரை எதிர்த்து பெரும்பான்மையினர் ஒன்று திரண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்,பெரும்பான்மையினரை எதிர்த்து சிறுபான்மையினர் ஒருபோதும் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியாது. ​ பிஜேபி யின் வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை இஸ்லாமியரை எதிர்த்து இந்துக்களை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சியின்  வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை பிராமணர்களை எதிர்த்து மற்ற சாதியினரை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சிகளின் மொழி போராட்டம் வெற்றி பெறாமல் போனதற்கு இந்தி பேசும் பெரும்பான்மையினரை தமிழ் பேசும் சிறுபான்மையினர் ஜனநாயகத்தால்…

  • அரசியல் 🇮🇳🇮🇳

    அரசியல் பேசாமல் அரசியலைப் பற்றி பேசுவோம் வாருங்கள், அரசியல் என்றால் என்ன?அரசியலை யார் கிட்ட பேசணும்? எங்க பேசணும் ?என்பதை பற்றிய என்னுடைய கருத்தே இந்த கட்டுரை. அரசியல் என்றால் என்ன? தனக்கு எந்த கொள்கையால் நன்மையோ அதை ஆதரித்து பேசுவது தான் அரசியல், இதுதான் ஜனநாயகம் நமக்கு கொடுக்கும் உரிமை. மதம், சாதி, மொழி, பொருளாதாரம், இனமென்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கான ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தான் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்கள். சிறுபான்மை இஸ்லாமியரை…

  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

    கடலூர் மாவட்டம் வடக்குத்து ஊராட்சியில் உள்ள ரெயின்போ நகரில் தார் சாலை அமைப்பதை பார்த்த அனுபவத்தில் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். ரெயின்போ நகர் 27 ஆண்டுகள் பழமையான நகர், இந்த நகர் மக்கள் “இலவு காத்த கிளி போல்” இவர் தலைவராகி விட்டால் சாலை போட்டுக் கொடுப்பார், அவர் எம்எல்ஏவாக ஆகிவிட்டால் சாலை அமைத்துக் கொடுப்பார்,என்று நம்பி ஏமார்ந்தது தான் மிச்சம். கடைசியில் திரு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ அவர்களின் முயற்சியில் 19 லட்சம் மதிப்பீட்டில் ரெயின்போ நகருக்கு…

  • சீமானின் சேவை நாட்டுக்கு தேவை !!!

    சாதி, மதம், மொழி ஆகிய வேற்றுமையில் இருந்து விடுபட்டு மாநில உரிமை என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கான அரசியல் விழிப்புணர்வு கட்டுரைதான் இது. வாழ்க்கைக்கு பொருளாதாரமே ஆதாரம், ஒன்றிய அரசுக்கு நாம் கட்டும் வரி மீண்டும் மாநில நலனுக்காக வருகின்றதா என்றால் இல்லை, வரி என்ற பெயரில் நம் பொருளாதாரத்தை சுரண்டி தான் வடக்கில் வாழ்கின்றார்கள்.கண்ணுக்குத் தெரியாமல் நம் மக்களின் உழைப்பு வடக்கர்களால் சுரண்டப்படுகின்றது, நம் வரி பணத்தை செலவு செய்துதான் இந்தியை,சமஸ்கிருதத்தை…

  • விட்டில் பூச்சி

    கரூர் சம்பவம் ஒருபுறம் வேதனையாக இருந்தாலும் மறுபுறம் மிகப் பெரும் தலை குனிவாக உள்ளது, வடநாட்டில் ஆன்மிகம் என்ற பெயரில் கூட்ட நெரிசலில் பலர் இறந்த சம்பவங்களை கேலி செய்த நாம் இன்று நம் மாநிலத்தில் அதைவிட கேவலமாக ஒரு நடிகனை பார்க்கச் சென்று விட்டில் பூச்சை போல் 39க்கும் மேல் உயிரை இழந்து இருக்கின்றார்கள் என்றால் நாம் எந்த அளவுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இருக்கின்றோம் என்பதற்கு இது ஒன்றே போதும். இரண்டு நாட்களுக்கு முன்…

  • சுதந்திர தினம் 2025

    சாதி, மதம், மொழி, மாநிலம், ஆகியவற்றின் பிரிவினை அரசியலால், கற்காலத்துக்கு சென்றுள்ள இந்திய ஜனநாயகத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந்திருக்கும் இந்த நிலையில், பிரிவினை அரசியலால் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்வதா, அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதா, என்ற வேதனையில் இந்த சுதந்திரத் திருநாளை கடந்து செல்லக்கூடிய கட்டாயத்தில் இந்திய ஜனநாயகம் உள்ளது. இந்த நிலை மாறி சமத்துவமும், சமாதானமும், ஜனநாயகமும்,இந்தியாவில் மலர்ந்திட வாழ்த்துக்கள். 72 ஆண்டுகளாக வடஇந்தியர்களிடம், தென்இந்தியர்களாகிய நாம் மொழியாலும்,…