Politics
-
அரசியல் சூழ்ச்சி
சமூக நீதிக்கு எதிராக சாதி ஒழிய வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் மக்களை ஏமாற்றி, சிறுபான்மை சாதியினர் மக்களை கடந்த 75 ஆண்டுகளாக ஆண்டு விட்டார்கள், செல்வங்களையும் பல ஆயிரம் கோடிக்கு சேர்த்து விட்டார்கள். மக்களிடம் சாதி உணர்வை தூண்டி பெரும்பான்மை சாதியின் தலைவர்களான ராமதாஸ், திருமாவளவன் போன்ற தலைவர்கள் பல கோடிகளை சம்பாதித்து மிகப்பெரிய ஆளுமையாக இந்த சமுதாயத்தில் வாழ்கின்றார்கள். ஆனால் மக்கள் சாதியைப் பற்றிய புரிதல் இல்லாமல் சாதி ஒழியனும் என்றாலும் கை தட்டுகின்றான்,…
-
சாதி ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை!
மனிதர்களுக்கு இடையில் சாதி சமத்துவம் வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், அரசியல் லாபத்திற்காக சிறுபான்மை மக்கள் அரசியல் செல்வாக்கை பெற வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு “சாதி ஒழிய வேண்டும் “என்று பொய் பிரச்சாரங்கள் செய்து மக்களை நம்ப வைத்து விட்டார்கள். சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதுதான் முற்போக்கு சிந்தனை என்று எண்ணி, படித்த அறிவில்லாதவர்கள் மக்களிடம் சாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் திணித்தார்கள். சாதி ஒழிய வேண்டும் என்பது…
-
மக்கள் பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை
கடவுள் இல்லை என்பதை பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தெளிவு படுத்தாததால், மக்கள் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை. ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை மட்டுமல்ல, மக்களையும் சாதி ஏற்றத்தாழ்வில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், அதை நான் எழுதிய” குமார் விதிகள் “என்ற புத்தகத்தால் மட்டுமே முடியும். நான் எழுதிய புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை நாத்திகர்கள் எப்போது புரிந்து கொள்கின்றார்களோ அப்போதுதான்…
-
சனாதன தர்மம்
அறிவைப் பற்றிய அறிவு ஆயிரத்தில் ஒருவருக்கு கூட இல்லை என்பதால் தான் சனாதன தர்மத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள்.அறிவைப் பற்றிய புரிதல் மக்களுக்கு வந்து விட்டால் (அழியாத நீதி )சனாதன தர்மம் என்ற ஒன்று இந்த உலகில் எதுவும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். சனாதன தர்மம் (அழியாத நீதி )என்று இந்த உலகில் எதுவுமே இல்லை. ஒரு மனிதனின் அறிவு வளர வளர நீதி மாறிக்கொண்டே தான் இருக்கும், இதை யாராலும் தடுத்து நிறுத்த…
-
சுதந்திர இந்தியாவில் இந்திய குடிமக்கள் அனைவரும் சமமா !
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற பாதுகாப்பைக் கொடுக்கின்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு குடியரசுத் தலைவருக்கும் அவருக்கு இணையாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிஅரசருக்குமே உள்ளது. ஒன்றிய மந்திரிசபை அனுப்பும் கோப்புகளில் கையெழுத்து போடும் அதிகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு இல்லை, தானாக முன்வந்து சில உத்தரவுகளையும் ஒன்றிய அரசுக்கு பிறப்பிக்கவும் உரிமை உள்ளது, அது போல் வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிப்பது மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை…
-
அனைத்து குடிமக்களும் சமம்
மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து குடிமக்களும் சமம், அதன்படி அனைத்து மாநிலத்தில் வாழும் மக்களும் சமம், அனைத்து மாநில மக்களும் சமம் என்றால் மாநில மொழிகள் அனைத்திற்கும் சமமான அங்கீகாரம் வேண்டும். எனவே 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் அனைத்து குடிமக்களும் சமம் என்பதை உறுதிசெய்ய இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிக்கும் அங்கீகாரம் வேண்டும் என்று நம் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு நான் பெற்ற…
-
குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை…
குடிக்கிறவன பார்த்து குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான, தகுதியான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை, மது அருந்துபவர்கள் கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் சொல்ல துணிவு இல்லை, அப்படி சொன்னால் ஒரு உறுப்பினர் கூட கட்சியில் இருக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் மதுவை கொடுத்து தான் மக்களை சேர்க்கின்றார்கள், ஆனால் மது ஒழிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் போராடுகின்றார்கள்.…
-
தேர்தல் 2024
மத்தியில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தால் மட்டும் தான் நாடு முழுவதும் அதிகார பகிர்வு சீராக இருக்கும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும், அனைத்து மாநிலத்திற்கும் நிதி பகிர்வு சீராக இருக்கும், அனைத்து மாநில மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான அங்கீகாரம் கிடைக்கும், எனவே மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி அல்லது பிஜேபி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி, கூட்டாட்சி மட்டுமே தென் மாநிலங்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும். மத்தியில்…
-
யாரிடமும் சொல்லிடாதீங்க
திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலு அவர்கள் நடித்த ஒரு திரைப்பட காட்சியில், ஏரியிலிருந்து ஒருவர் வெளியே வந்து வடிவேலு இடம் யாரிடமும் சொல்லிடாதீங்க என்று சொல்லிவிட்டு ஏரியில் மறைந்து கொள்வார், எதடா சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போற என்று வடிவேலு கேட்பார் அதற்கு மீண்டும் சொல்லிடாதீங்க என்று சொல்லி ஏரியில் மறைந்து கொள்வான், போலீஸ் வடிவேலிடம் என்னடா சொல்லிவிட்டு போனான் என்று கேட்பார்கள், அதற்கு வடிவேலு சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போனான் சார் என்று சொல்வது அனைவரும் ரசிக்கக்கூடிய நகைச்சுவையாக…
-
வாக்குக்கு பணம் வாங்குவது குற்றமா?
வாக்கு என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமை, இந்த வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது நமது கடமை. நம்முடைய கடமையை சரியாக செய்தால் மட்டும் தான் நாமும், நம் நாடும் முன்னேறமுடியும். ஜனநாயகம் நமக்கு பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாக்குரிமையை அனைவர் கையிலும் கொடுத்துள்ளது, அதை நாம் பயனுள்ள வகையில் செலவு செய்தால் மட்டும் தான் சிறப்பாக வாழ முடியும். அரசியல் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவர்களுடைய விலைமதிப்பில்லா வாக்குரிமையை சரியாக பயன்படுத்துகிறார்கள்,அரசியல் முக்கியத்துவம்…
