Spirituality
-
கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்!
கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கடவுளையும் நம்பாமல் நான் நாத்திகனாக தான் இருந்தேன். இறந்த காலத்தின் தொடர்போடுதான் நம்முடைய சிந்தனை முதல் உலக நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கின்றது. அணுவின் அசைவு முதல் பிரபஞ்சத்தின் இயக்கம் வரை அனைத்தும் விதியின் பயனே. என்னுடைய அசைவு ஒவ்வொன்றையும்…
-
பேய் இருக்கா?!!
நடந்த உண்மை சம்பவம் !! என்னிடம் வேலை செய்பவர் பேயை பார்த்ததாக சொன்னார், நான் சொன்னேன் பேய்யென்று ஒன்று இல்லை அது ஒரு பிரம்மை என்று, அதற்கு அவர் சொன்னார் பேய் இருப்பது உண்மை அது சிலர் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்றார், நான் சொன்னேன் ஆமாம் சிலருக்கு மட்டும்தான் தெரியும் ஏன் தெரியுமா! நம் கண் ஒரு காட்சியை பார்த்து மூளைக்கு செய்தியை அனுப்புவதால் தான் நாம் பார்க்கும் பொருள் நமக்கு தெரிகின்றது. இரவு…
-
இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம்
நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல்லாத சமுதாயத்தில் இருந்து தான் கடவுள் நம்பிக்கை முற்போக்கு சிந்தனையாக உருவாகி உள்ளது.சீனாவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதிகம், எனவே கடவுள் இல்லை என்று சொல்வது முற்போக்கு சிந்தனை அல்ல. கற்கால மனிதனின் முற்போக்கான சிந்தனை தான் ஆத்திகம். தன்னுடைய வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால்தான் மனிதன்…
-
பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது
அறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பெரியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.கடவுளை வணங்குபவன் முட்டாள்,காட்டுமிராண்டி என்று உணர்வை தூண்டும் வகையில் பெரியார் கோபப்பட்டதால் தான் கடவுள் இல்லை என்பதை மக்கள் நம்பினார்கள்,கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரத்தையும் பெரியார் மக்களிடம் கொடுத்து புரிய வைக்கவில்லை, கடவுள் இல்லை என்ற நம்பிக்கையே பகுத்தறிவு என்று சொல்லி நம்ப வைத்தார்.கடவுளின் நம்பிக்கையால் நான் பல நன்மைகளைப் பெற்று இருக்கின்றேன் என்று சொல்பவர்களுக்கு பெரியாரிடம் இருந்து…
-
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்!
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்! கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றார். இந்த பிரபஞ்சத்தை இயக்குபவர் தான் கடவுள் என்ற ஆன்மீகவாதிகளின் புரிதலோடு நானும் உடன்பட்டு அறிவியலின் உதவியுடன் கடவுளைப் பற்றி ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதுகின்றேன். உயிர் நம்மை இயக்கினாலும் உயிரை நாம் பார்க்க முடியாது, அது போல் கடவுள் இந்த பிரபஞ்சத்தை இயக்கினாலும் கடவுளை நாம் பார்க்க முடியாது. நான் ஆன்மீகவாதியாக இருந்தாலும் அறிவியல் படி கடவுளை ஆய்வு செய்வதால் பலர் என்னை நாத்திகனாகவும்…
-
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா !
அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்களிடம் இருந்து நான் பெற்று “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். மரத்திலிருந்து விழும் பல லட்சம் விதைகளில் ஏதோ ஒரு விதை மட்டும் மரமாக வளர்ந்து பல உயிர்களுக்கு பயன்படுவது போல் என்னுடைய எழுத்தை பல…
-
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்…
கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள் இல்லை என்பதை புரிய வைக்க அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நான் எழுதிய விதி உண்மை என்ற ஆய்வுக்கட்டுரை மட்டுமே உள்ளது. இதை ஆத்திகமும், நாத்திகமும் புரியாதது போல் தவிர்க்கின்றது. விதி உண்மை என்ற அறிவியல் உண்மையை ஏற்காமல் (புரிந்துகொள்ளலாம்)…
-
கடவுள் நம்பிக்கை
ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடினால் தான் முதல் பரிசை பெற முடியும்.இரண்டாவது இடத்தில் ஓடுகின்ற ஒருவன் ரசிகர்களின் உற்சாகத்தால் முதல் இடத்தைப் பிடிக்கின்றான்.ரசிகர்களின் உற்சாகம் ஒருவனுக்கு எப்படி சக்தியை கொடுத்திருக்கும்.அறிவியல்படி வாய்ப்பே இல்லை,ஆனால் அனுபவரீதியாக உண்மை.ரசிகர்களின் உற்சாகம் இரண்டாவது இடத்தில் ஒடுபவனுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது,அந்த நம்பிக்கைதான் அவனை முதலிடத்தில் வெற்றிபெற செய்துள்ளது.இது போல் நோயால் பாதிக்கப்பட்டவர் கடவுளை வணங்குவதால் அவருக்குள் நம்பிக்கை பிறக்கிறது அது அவருடைய நோயை குணப்படுத்துகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை.கடவுள் இல்லை ஆனால் கடவுளை வணங்குவது தவறு…
-
ஆன்மீகம் ஓர் தொழில்
ஆன்மீகம் ஓர் தொழில். மக்களுக்கு கெடுதல் என்று தெரிந்தும் அரசு லாபத்திற்காக சாராய கடையை நடத்துவது போல், கடவுளை பற்றிய அறிவை மக்களுக்கு ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கொடுக்காமல் ஆன்மீகத்தை ஒரு தொழிலாக செய்துவருகின்றார்கள். விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆன்மீக தொழிலில்தான் அதிகமானோர் சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் பலர் பயன்பெறுகின்றார்கள், ஆன்மீகம் ஓர் தொழில் என்பதால் அவர்களுடைய வாடிக்கையாளர்களை இழக்க கூடாது என்பதற்கு மக்களிடம் மூடநம்பிக்கையையும், மதப்பிரிவினையையும் ஏற்படுத்துகின்றார்கள்.என்னுடைய ஆய்வும் ஊடகத்தால் மறைக்கப்படுகின்றது. மது பிரியர்களை போதையின்…
-
கடவுளைவிட உயர்ந்தவர்கள் உண்மையான நண்பர்களும், உறவுகளும்
இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் நேற்றைய நிகழ்வை நான் பதிவிடுகின்றேன். “இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல் “ ஒரு வரிக்குள் ஆத்திகமும், நாத்திகமும் சேர்ந்து வருவது தான் இந்த வரியின் சிறப்பு. அறிவியல் படி கடவுள் இல்லை என்றாலும் எந்தத்துணையும் இல்லாமல் இருட்டில் தனியாக பயணிக்கும் ஒருவனுக்கு அவன் வணங்கும்…
