கல்விக்_கொள்கை

  • மத அடையாளம்

    ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிழைப்புக்காகவே தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்துகின்றான், எனவே பிழைப்புக்கு இடையூறாக இருக்கின்ற தன்னுடைய அடையாளத்தை பொதுவெளியில் அனைவரும் மறைந்து விடுகின்றோம். தன்னுடைய அடையாளம் தன்னை இந்த சமுதாயத்தில் இருந்து அன்னியப்படுத்திவிடும் என்ற அச்சத்தால் தான் பிராமணர்கள் பூணூல் தெரியாமல் ஆடையை அணிந்து கொண்டார்கள், சிகை அலங்காரத்தையும் மாற்றிக் கொண்டார்கள். இது போல் தான் நாம் அனைவரும் தன் மத அடையாளத்தையும் சாதி அடையாளத்தையும் பொதுவெளியில் காட்டுவதை தவிக்கின்றோம். இஸ்லாமியர்கள் அவர்களுடைய மத அடையாளத்தை பொதுவெளியில்…

  • சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள்

    சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைப்பது போல் மத கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று மதசார்பு இல்லா தமிழக அரசு விரும்பினால் பலரின் பெயர்களை புதிதாக வைக்க வேண்டி இருக்குமே,எந்தப் பெயர் யாருக்கு என்று புரிந்து கொள்வதில் பெரிய குழப்பமாகிவிடுமே!இறந்தகால நிகழ்வுகளை மாற்றமுடியாது என்று பகுத்தறிவாளர்களுக்கு தெரியாதா?உள்ளதை உள்ளபடியே மாணவர்களுக்கு சொள்வதுதான் சரியான கல்வி.

  • பெரியார்

    பெரியார் (ஈ. வெ. ராமசாமி) அவர்கள் கடவுளை வணங்குபவர்களை காட்டுமிராண்டி என்று சாடியவர், சமத்துவத்தை வலியுறுத்தியவர், இந்து மதத்தை விமர்சித்த இவர் தன் பெயர் இந்து மத கடவுளின் பெயராக இருந்தும் தன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. சமத்துவத்தை விரும்பும் பெரியார் தன்னை மற்றவர்கள் சாமி என்றே அழைக்க வேண்டும் என்று விரும்பி உள்ளார்.பெரியார்..,அவருடைய பெயரை பொருளற்ற அடையாளமாகவே பார்த்ததால்தான் அவருடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. ஏழுமலை என்ற பெயரை எந்த மொழியில் எழுதினாலும் ஏழுமலை தான்.…

  • மும்மொழி கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்?

    1) மும்மொழி கல்விக் கொள்கை மாநில மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும். இருமொழிக்கொள்கை மாநில உரிமை, இதை மீறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் கல்வி கொள்கை இருக்க வேண்டும், மீறினால் உச்ச நீதிமன்றம், அல்லது ஐ நா தலையிடுவதற்கும், மத்திய அரசை எச்சரிப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே மும்மொழி கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 2). உலக ஆய்வின் முடிவு தாய்மொழியால் படிக்கும் மாணவர்களால் மட்டுமே அறிவிலும், சிந்தனைத் திறனிலும் சிறந்து…

  • இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும்

    நம் கல்விமுறை அறிவை கொடுப்பதற்காக மட்டும் இருந்தால் இந்தி மட்டுமல்ல அனைத்து மாநில மொழியையும் படிக்கலாம் தவறு இல்லை, ஆனால் நம் கல்விமுறை ஒருவனுடைய அறிவுத்திறனையும் மதிப்பிடுவதால் இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும். நம் தாய்மொழியின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கும் இசை அமைப்பாளர் யுவனை கேலி செய்யும் தமிழர்கள் தன் கையாலேயே தன் கண்ணை குத்திக்கொள்பவர்கள். தன்னுடைய குருதி என்று அறியாமல் தன் குருதியை தானே சுவைத்து அருந்தும் அரசியல் கைக்கூலி…

  • மீண்டும் ஒரு கோமாளி செயல்

    அன்னநடையை கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட வாத்தைப்போல், அன்ன நடையையும் கற்றுக்கொள்ளமுடியாமல், சொந்த நடையையும் மறந்து தத்தி தத்தி வாத்து நடப்பது போல் அனைத்து மாநில மக்களும் தங்கள் தாய் மொழியையும் இழந்து புது மொழியையும் கற்றுக் கொள்ள முடியாமல், எந்த மொழியையும் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாமல், தவிக்கின்ற நிலைதான் வரும். பலமொழிகளை கற்றிருந்தாலும் தாய்மொழியாலேயே சிந்திக்கின்றனர் என்றும், பல மொழிகளைக் கற்கும் மாணவர்கள், மொழி ஆளுமைக்கே கவனம் முழுவதையும் செலுத்துவதால் சிந்திக்கும் திறன் (creativity )குறைக்கின்றது என்று…

  • மும்மொழி கொள்கையை எதிர்ப்பது ஆரோக்கியமான செயலா ?

    உடல்வலிமை, அறிவு, பொருள், போன்ற அனைத்து செல்வத்தையும் பெற்றுஇருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியத்தை செயலின் மூலம் ஒருவன் வெளிப்படுத்த முடியும். ஒருவனுடைய செயலே அவனுடைய ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். ஆரோக்கியம் இல்லாதவர்களால் போராடவோ, புரட்சி செய்யவோ,முடியாது என்பது இயல்பு. நம்மில் பல நண்பர்கள் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றார்கள் என்றால் அதன் பொருள் அவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதின் வெளிப்பாடே. எனவே அவர்கள் அவர்களின் உடலையும், அறிவையும், சுய பரிசோதனை செய்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இந்தியா முழுவதற்கும் ஒரே…

  • நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு அல்ல.

    நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்று என்னாதீர்கள். அது தென் இந்திய மக்கள் அனைவரையும் அடிமை படுத்துவதற்க்கான மத்திய அரசின் சூழ்ச்சி. இந்தியாவில் CBSE, MATRIC, மாநில அரசு கல்வி முறை என்று பல பாடதிட்டங்கள் இருக்கும் போது CBSE பாடதிட்டம் மூலம் மாணவர்களை மருத்துவர்களாக தேர்ந்து எடுக்கும் முறை எப்படி சரியான தாக இருக்கும். நாடு முழுவதும் பல கல்வி முறையில் படித்த மாணவர்கள் எப்படி ஒரு கல்வி முறையால் தேர்வு…