அப்துல்_கலாம்
-
மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்று தெரியாதவர்கள் தான் குடிக்கின்றார்களா !
“மது அருந்துவது உடன் நலத்திற்கு தீங்கானது “என்று மது குடுவையில் இருக்கும் வாசகத்தை படித்துவிட்டு எத்தனை பேர் குடியை நிறுத்திவிட்டார்கள் ?இல்லை என்றால் ஏன் தொடர்ந்து அச்சிட வேண்டும் ?இது அரசின் கடமை நான் சொல்வதை நீ கேட்க மாட்டாய் இருப்பினும் நான் சொல்வது எனது கடமை என்பதின் வெளிப்பாடே இது. மதுவுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவது மக்களை மது போதையில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அல்ல, தன்னுடைய அரசியல்…
-
மக்களாட்சி
மக்களாட்சிதான், மக்களுக்கான ஆட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மக்களை ஆள்பவர்கள் காமராசர், அப்துல் கலாமை போல் சுயவாழ்க்கையை துறந்து மக்களுக்காகவே வாழ்பவராக இருந்தால் மட்டுமே மக்களாட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். செல்வம் கொழித்த மன்னர்களையும், சுயநலவாதிகளையும், தேர்ந்தெடுத்துவிட்டு மக்களுக்கான ஆட்சியை அவர்களிடம் எதிர்பார்ப்பது யார் தவறு ?சிந்தியுங்கள்!. சுய வாழ்வைத் துறந்து, மக்களுக்காகவே வாழ்பவர்களுக்கு தான் என்னுடைய வாக்கு என்று ஒவ்வொருவரும் நினைத்தாலே போதும், காட்சிகள் மாறும், உண்மையான மக்களாட்சி மலரும். சுய வாழ்க்கையைத் துறந்து,…
-
பயனற்ற உபதேசங்கள்
“கனவு காணுங்கள்” என்று டாக்டர் அப்துல்கலாமும், ” அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்” என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், அனைத்துக்கும் ஆசைப்படுவதும், பிறப்பால் நாம் பெற்ற உணர்வு, இந்த உணர்வுகள் அறிவால் பெறப்படுபவை அல்ல, அது பிறப்பின் இயல்பு. எனவே உணர்வை ஏற்படுத்துவது என்பது கல்லை பறக்காமல் அமுக்கி பிடிப்பது போன்றது. கல்லை எப்படி தூக்குவது என்பதை தெரிந்து கொள்வதற்குதான் நமக்கு அறிவு தேவைப்படுகின்றது.…
-
வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும்.
“வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது.காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்” பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும் வேறுபாடு உண்டு.அனுபவமுள்ள பெரியவர் சொல்வதை அனுபவமில்லாத சிரியவர் கேட்டு நடந்தால் நல்லது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அனுபவமுள்ள முன்னோர்கள் சொன்னதை தற்போது வாழும் அனுபவம் உள்ளவர்கள் கேட்க வேண்டியதோ, அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டியதோ இல்லை. காரணம்…
