மாற்றமே_நிலையானது

  • நம்பிக்கை

    நம்பிக்கை என்பது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது அல்ல.நம்பிக்கை என்பது நேர்மறை சிந்தனை.எனக்கு எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும்,நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே,நிச்சயம் நான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவேன் என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நிலையில்லா இந்த உலகில் தன்னம்பிக்கை முதல் கடவுள் நம்பிக்கை வரை அனைத்து நம்பிக்கைகளும் பொய்யே, ஆனால் நிலையில்லா இந்த உலகில்“இந்த நிலையும் மாறும் “என்ற நம்பிக்கையே உண்மையானது. இந்த நம்பிக்கை தான் ஒவ்வொரு மனிதனையும் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றது.

  • கடவுள் நம்பிக்கை

    கடவுள் இல்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை துன்பத்துக்கு மருந்தாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்றாலும் கடவுளை நம்புவதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகின்றது.யாமிருக்க பயம் ஏன், கடவுள் நிச்சயம் உன்னை காப்பார், இந்த நிலையும் மாறும் என்ற இதுபோன்ற நம்பிக்கையே ஒருவனை துன்பத்திலிருந்து மீண்டு வாழ நம்பிக்கை கொடுக்கின்றது, இதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் தான் அறிவு கடவுள் இல்லை என்று சொன்னாலும் உணர்வு கடவுளையே நம்புகின்றது.