All Blog Posts

  • தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன்

    என்னுடைய மகளும், மகனும் எனக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாகவும்,என்னுடைய மனைவியின் ஆதரவின் காரணமாகவும்,புத்தகம் எழுதுவதால் எந்த பயனும் இந்த சமுதாயத்திற்கு இல்லை என்ற விரக்தியில் இருந்த நான் அதிலிருந்து விடுபட்டு மீண்டும் ஒரு முயற்சியாக “குமார் விதிகள் “ என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். தமிழில் நான் எழுதியதை ஆங்கிலத்தில் என்னுடைய மகள் மொழிபெயர்த்து “Kumar laws”என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றார்கள். உடலை ஆளுமை செய்ய யோகா எப்படி உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவசியமோ, அது…

  • குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை…

    குடிக்கிறவன பார்த்து குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான, தகுதியான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை, மது அருந்துபவர்கள் கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் சொல்ல துணிவு இல்லை, அப்படி சொன்னால் ஒரு உறுப்பினர் கூட கட்சியில் இருக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் மதுவை கொடுத்து தான் மக்களை சேர்க்கின்றார்கள், ஆனால் மது ஒழிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் போராடுகின்றார்கள்.…

  • வைரமுத்து பேசியது சரியா?

    இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன். வைரமுத்து சொன்னது போல் இசையும், மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா? அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று. என்னுடைய…

  • இசையும், பாடலும்

    திரைப்பட பாடலை பொருத்தவரையில், மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும்.மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது.வைரமுத்து அவர்களை ஒழுக்கம்…

  • சர்வதேச புத்தக தினம்

    “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதி 10 ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இந்த புத்தகம் இதுவரை இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, காரணம் இந்த புத்தகத்தில் உள்ள தகவலை அறிவாக பெறுவதற்கு வாசகர்களிடம் அறிவு (அனுபவம்)இல்லை. அறிவு என்பது அனுபவத்தால் பெறுவது மட்டுமே. கண்ணால் பார்த்து படித்து ஒரு தகவலை பெறுவதற்கும், காதால் கேட்டு ஒரு தகவலை பெறுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இரண்டும் ஒன்றுதான். பழங்காலத்தில் குரலை பதிவு செய்யக்கூடிய…

  • தமிழ் புத்தாண்டு தை ஒன்றா? சித்திரை ஒன்றா?

    எந்த ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாமல், அரசியல் கலப்பு இல்லாமல்,மத உணர்வு இல்லாமல், மொழிப்பற்று இல்லாமல், அனைத்து உணர்விலிருந்தும் விடுபட்டு அறிவின் ஆளுமையில் அறிவியல் பூர்வமாக நடுநிலையில் இந்த கட்டுரையை நான் எழுதிஇருக்கின்றேன். ஒரு மதத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் அடையாளமாக 365 நாட்களில் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் ஆண்டில் முதல் நாளாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம், சூரியனை பூமி சுற்றிவர எடுத்துக் கொள்ளும் 365 நாட்களில் எந்த ஒரு நாளையும் ஆண்டின் முதல் நாளாக எடுத்துக்…

  • தேர்தல் 2024

    மத்தியில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தால் மட்டும் தான் நாடு முழுவதும் அதிகார பகிர்வு சீராக இருக்கும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும், அனைத்து மாநிலத்திற்கும் நிதி பகிர்வு சீராக இருக்கும், அனைத்து மாநில மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான அங்கீகாரம் கிடைக்கும், எனவே மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி அல்லது பிஜேபி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி, கூட்டாட்சி மட்டுமே தென் மாநிலங்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும். மத்தியில்…

  • யாரிடமும் சொல்லிடாதீங்க

    திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலு அவர்கள் நடித்த ஒரு திரைப்பட காட்சியில், ஏரியிலிருந்து ஒருவர் வெளியே வந்து வடிவேலு இடம் யாரிடமும் சொல்லிடாதீங்க என்று சொல்லிவிட்டு ஏரியில் மறைந்து கொள்வார், எதடா சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போற என்று வடிவேலு கேட்பார் அதற்கு மீண்டும் சொல்லிடாதீங்க என்று சொல்லி ஏரியில் மறைந்து கொள்வான், போலீஸ் வடிவேலிடம் என்னடா சொல்லிவிட்டு போனான் என்று கேட்பார்கள், அதற்கு வடிவேலு சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போனான் சார் என்று சொல்வது அனைவரும் ரசிக்கக்கூடிய நகைச்சுவையாக…

  • வாக்குக்கு பணம் வாங்குவது குற்றமா?

    வாக்கு என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமை, இந்த வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது நமது கடமை. நம்முடைய கடமையை சரியாக செய்தால் மட்டும் தான் நாமும், நம் நாடும் முன்னேறமுடியும். ஜனநாயகம் நமக்கு பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாக்குரிமையை அனைவர் கையிலும் கொடுத்துள்ளது, அதை நாம் பயனுள்ள வகையில் செலவு செய்தால் மட்டும் தான் சிறப்பாக வாழ முடியும். அரசியல் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவர்களுடைய விலைமதிப்பில்லா வாக்குரிமையை சரியாக பயன்படுத்துகிறார்கள்,அரசியல் முக்கியத்துவம்…

  • என் பார்வையில் அரசியல் (அரசியல் விழிப்புணர்வு கட்டுரை)

    அரசியல்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. கல்வி அறிவு இல்லாமல் கூட இந்த உலகில் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக, சிறப்பாக வாழ முடியும், ஆனால் அரசியல் அறிவு இல்லாமல் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதற்கு சரித்திர நிகழ்வுகளே சான்று. முன்னோர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டால்தான் அவர்கள் பட்ட துன்பத்திலிருந்து சிறிதளவு அறிவை நாம் பெற முடியும். அரசியலால் அவர்கள் அனுபவித்த துன்பத்தை நாம் அறிவாக பெறவில்லை என்றால் நாமும், நம் சந்ததிகளும் வருங்காலத்தில் அரசியல்…

All Tags

அறிவுரை, அறிவின்_தோற்றம், தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, அனுபவ_அறிவு, கடவுள்_மறுப்பு, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, அரசுமொழி_அந்தஸ்து, திருமணமும்_குடும்பமும், பெரியார், மனமும்_உணர்வும், மறுப்புக்_கட்டுரை, குற்றமும்_தண்டனையும், பகுத்தறிவு_விமர்சனம், குற்றப்_பொறுப்பு, BJP, குமார்_விதிகள், நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, மாநில_உரிமை, இந்தி_திணிப்பு, மதமும்_சடங்கும், உச்ச_நீதிமன்றம், இட_ஒதுக்கீடு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, அனுபவமே_அறிவு, மதவாத_அரசியல், ஆறாவது_அறிவு, இயற்கையின்_நீதி, பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், அறிவுத்_தற்பெருமை, உணர்வுக்_கட்டுப்பாடு, கற்பு, அறிவு_உணர்வு_மோதல், திருமணத்திற்கு_முந்தைய_காதல், ஏழாவது_அறிவு, ஊடகமும்_கலையும், அரசியலமைப்புச்_சட்டம், புத்தக_வாசிப்பு, சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நீதிமன்ற_அதிகாரம், நிர்வாகமும்_ஊழலும், மூளைச்சலவை, நான்_எனும்_உணர்வு, ஊடக_நேர்மை, திமுக, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, கல்விக்_கொள்கை, கோயில்_சடங்கு, தன்_மதிப்பு, உள்_ஒதுக்கீடு, உழைப்பு, மும்மொழிக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, ஸ்டாலின், அம்பேத்கர், தோல்வியை_எதிர்கொள்ளல், திருமண_வாழ்க்கை, பாலியல்_குற்றம், நட்பும்_உறவும், கலப்புத்_திருமணம், ஆன்மீக_வணிகம், தேர்தல்_பணம், வாக்கு_வங்கி, இளையராஜா, திருக்குறள், பாமக, திருமாவளவன், இலவசத்_திட்டம், ஒன்றிய_அரசு, கருணாநிதி, ஜெயலலிதா, சனாதன_தர்மம், லஞ்சம், மது_பழக்கம், NLC, பெண்_ஆண்_வேறுபாடு, சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், தேர்தல்_ஆணையம், அப்துல்_கலாம், ஜக்கி_வாசுதேவ், பெற்றோர்_பிள்ளை_உறவு, மோடி, விவசாய_மானியம், கால்_தொடும்_வழக்கம், NLC_நிலப்_பிரச்சினை, கல்வி_மொழி, NEET, வரிக்_கொள்கை, பொதுப்_பணி_தரம், காவல்துறை, வைரமுத்து, விவேகானந்தர், ஏ_ஆர்_ரகுமான், விஜய், சீமான், வள்ளலார், போட்டி_மனப்பான்மை, ரஜினிகாந்த், காந்தி, மாணவர்_நெருக்கடி, காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, காமராசர், காங்கிரஸ், அதிமுக, சாதிக்_கணக்கெடுப்பு