All Blog Posts

  • யார் மனிதன்?

    தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிருகத்தை விட கொடியவன். சுற்றம் பாதிக்கும் வகையில் மது அருந்துவது, பொது இடத்தில் புகை பிடிப்பது, பொது இடத்தை அசுத்தம் செய்வது, பெற்றோர் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்துகொள்வது, பாலியல் துன்புறுத்தல் செய்தல், அனைத்தும் மிருக செயல்தான். கொடிய மிருகத்தை விடகொடியவன், மிருகம் கூட…

  • பாலியல் துன்புறுத்தல் #metoo

    நீதி உலகெங்கும் ஒன்றல்ல, இந்தியாவின் நீதி, அரபுநாடுகளில் அநீதி, இந்தியாவில் திருமணத்திற்கு முன் காதலிப்பது என்பது புனிதமானது. அரபு நாடுகளில் இதற்கு தூக்குத் தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் காதலித்தவனுக்கு அரபு நாட்டில் தூக்கு தண்டனை கொடுப்பது உலக நீதி அல்ல. திரை உலகம், பாலியல் ஒழுக்கத்தில் அது ஒரு தனி உலகம்.திரை உலகத்தின் பாலியல் நீதி என்பது, நிஜ உலகத்தின் நீதிக்கு முற்றிலும் முரணானது. திரை உலகத்தில் ஆண்-பெண் வேற்றுமையே இல்லை, எனவே அங்கு…

  • ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு சரியா?

    கடவுள் இல்லை !ஆனால் கடவுளை வணங்கினால் நன்மைகள் உண்டு என்ற முரண்பட்ட அறிவியல் உண்மையை ஆய்வு செய்து 10 ஆண்டுகளுக்கு முன்பே “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “ என்ற புத்தகத்தில் நான் எழுதி இருக்கின்றேன். கடவுள் இல்லை என்று என்னுடைய ஆய்வு உறுதி செய்த போதிலும், கடவுள் இல்லை என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொண்ட போதிலும், கடவுளை நான் தினமும் வணங்கிக் கொண்டு தான் உள்ளேன். காரணம், என்னை நான் ஒழுங்குபடுத்தி கொள்ளவே.…

  • நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல்துறையே !

    பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், குற்றம் செய்தவரிடம் பணம் வாங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் செய்தவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு குற்றம் செய்தவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டால், இந்த அனுபவம் குற்றம் செய்தவருக்கு மீண்டும் குற்றம் செய்ய வேண்டும் என்ற அறிவையும்,பாதிக்கப்பட்டவருக்கு காவல்துறையை நம்புவது தவறு, குற்றம் செய்தவனுக்கு நாமே தண்டனை கொடுப்பது தான் சரி என்ற அறிவையும் கொடுக்கும். அரசு ஊழியர்களை போல் இல்லாமல் சமுதாயத்தில் நீதியை…

  • மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர்

    மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர். (ஓபிஎஸ், இபிஎஸ், பட்டை போட்டு கொள்வது போல்) உண்மையில் 99. 9 % சதவிகிதத்தினர் கடவுள் இருக்கு என்பதை நம்பவில்லை என்பது தான் உண்மை. எதையும் முயற்சிக்காமல் கடவுளையே நம்பியிருந்தால் மனித இனம் எப்பொழுதோ அழிந்திருக்கும். நம் உள் மனது கடவுளை நம்பி கொண்டு இருக்க வேண்டாம் என்று சொல்வதால் தான் நாம் முயற்சிக்கின்றோம். நம் முன்னோர்கள் கடவுளை நம்பவில்லை என்பதற்கு…

  • வருமுன் காப்போம்

    பெரும்பான்மையினர் நாட்டை ஆள்வது ஜனநாயகம் அல்ல.பெரும்பாலானவர்கள் நாட்டை ஆள்வதுதான் உன்மையான ஜனநாயகம். பி ஜே பி யின் பிரிவினை அரசியல் ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும் போதுதான் தீவிரவாத சிந்தனை தலைதூக்கும் என்பது உலக வரலாறு. தீவிரவாதத்தின் முன்பு ஜனநாயகம் தோற்கும் போது அனைவரும் போர்களத்தில் சாக வேண்டியது தான். போர்க்களத்தில் ஜனநாயகம் பேச முடியாது, எனவே காலம் தாழ்த்தாமல் அமைதியான நம் ஜனநாயக நாடு தீவிரவாத நாடாக மாறுவதற்கு முன், பி ஜே…

  • பெரியாரின் பகுத்தறியாமை

    யார் சொல்லியிருந்தாலும்,எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. —-பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரிந்து கொண்டவர்கள் பெரியாரையும் சேர்த்து இந்த உலகில் யாருமில்லை. ஒன்றை ஓருவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதை சார்ந்த அறிவு அவரிடம் இருக்க வேண்டும். அறிவு இல்லாமல் எதை ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாது. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, என்றால் ஒருவர் எப்படி அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். மருத்துவர் சொல்வதை…

  • என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும்

    ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விட்டதால், தன்னம்பிக்கையை இழந்து மிகவும் சோகத்தில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த அப்பாவின் நண்பர் எனக்கு ஆறுதலாக நீ பெரிய அறிவாளி, உன்னிடம் திறமைகள் அதிகம் இருக்கு,“வெற்றி பெறுபவர்கள் அனைவரும் அறிவாளியும் இல்லை,…

  • பயனற்ற உபதேசங்கள்

    “கனவு காணுங்கள்” என்று டாக்டர் அப்துல்கலாமும், ” அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்” என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், அனைத்துக்கும் ஆசைப்படுவதும், பிறப்பால் நாம் பெற்ற உணர்வு, இந்த உணர்வுகள் அறிவால் பெறப்படுபவை அல்ல, அது பிறப்பின் இயல்பு. எனவே உணர்வை ஏற்படுத்துவது என்பது கல்லை பறக்காமல் அமுக்கி பிடிப்பது போன்றது. கல்லை எப்படி தூக்குவது என்பதை தெரிந்து கொள்வதற்குதான் நமக்கு அறிவு தேவைப்படுகின்றது.…

  • உணர்வின் பிறப்பு

    நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெறுகிறோம், அதைத் தொடர்ந்து நான் என்ற உணர்வை பெறுகிறோம் இந்த நான் என்ற உணர்வை பெற்ற பிறகுதான் போட்டி, போறாமை, பாசம், நட்பு, அன்பு, வெறுப்பு, போன்ற பல உணர்வுகளை பெறுகின்றோம். கடைசியாக காம உணர்வை பெறுகிறோம். வயது முதிர்ச்சியில்…

All Tags

அறிவுரை, அறிவின்_தோற்றம், தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, அனுபவ_அறிவு, கடவுள்_மறுப்பு, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, அரசுமொழி_அந்தஸ்து, திருமணமும்_குடும்பமும், பெரியார், மனமும்_உணர்வும், மறுப்புக்_கட்டுரை, குற்றமும்_தண்டனையும், பகுத்தறிவு_விமர்சனம், குற்றப்_பொறுப்பு, BJP, குமார்_விதிகள், நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, மாநில_உரிமை, இந்தி_திணிப்பு, மதமும்_சடங்கும், உச்ச_நீதிமன்றம், இட_ஒதுக்கீடு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, அனுபவமே_அறிவு, மதவாத_அரசியல், ஆறாவது_அறிவு, இயற்கையின்_நீதி, பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், அறிவுத்_தற்பெருமை, உணர்வுக்_கட்டுப்பாடு, கற்பு, அறிவு_உணர்வு_மோதல், திருமணத்திற்கு_முந்தைய_காதல், ஏழாவது_அறிவு, ஊடகமும்_கலையும், அரசியலமைப்புச்_சட்டம், புத்தக_வாசிப்பு, சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நீதிமன்ற_அதிகாரம், நிர்வாகமும்_ஊழலும், மூளைச்சலவை, நான்_எனும்_உணர்வு, ஊடக_நேர்மை, திமுக, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, கல்விக்_கொள்கை, கோயில்_சடங்கு, தன்_மதிப்பு, உள்_ஒதுக்கீடு, உழைப்பு, மும்மொழிக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, ஸ்டாலின், அம்பேத்கர், தோல்வியை_எதிர்கொள்ளல், திருமண_வாழ்க்கை, பாலியல்_குற்றம், நட்பும்_உறவும், கலப்புத்_திருமணம், ஆன்மீக_வணிகம், தேர்தல்_பணம், வாக்கு_வங்கி, இளையராஜா, திருக்குறள், பாமக, திருமாவளவன், இலவசத்_திட்டம், ஒன்றிய_அரசு, கருணாநிதி, ஜெயலலிதா, சனாதன_தர்மம், லஞ்சம், மது_பழக்கம், NLC, பெண்_ஆண்_வேறுபாடு, சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், தேர்தல்_ஆணையம், அப்துல்_கலாம், ஜக்கி_வாசுதேவ், பெற்றோர்_பிள்ளை_உறவு, மோடி, விவசாய_மானியம், கால்_தொடும்_வழக்கம், NLC_நிலப்_பிரச்சினை, கல்வி_மொழி, NEET, வரிக்_கொள்கை, பொதுப்_பணி_தரம், காவல்துறை, வைரமுத்து, விவேகானந்தர், ஏ_ஆர்_ரகுமான், விஜய், சீமான், வள்ளலார், போட்டி_மனப்பான்மை, ரஜினிகாந்த், காந்தி, மாணவர்_நெருக்கடி, காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, காமராசர், காங்கிரஸ், அதிமுக, சாதிக்_கணக்கெடுப்பு