All Blog Posts

  • மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்

    மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்பதையே அவருடைய பாடல் நமக்கு தெரியப்படுத்துகின்றது.திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகருக்கே அறிவைப் பற்றிய புரிதல் இல்லாத போது, நாம் யாரை அறிவாளியாக பார்ப்பது ?. அதற்கான பதில் நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற புத்தகத்தில் உள்ளது. நமக்குத் தெரிந்தது…

  • தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல

    தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல, என்னுடைய செயல்கள் அனைத்தும் (இயற்கையின் )இறைவனின் செயல்தான் என்ற புரிதலேஆன்மீகம். ஆன்மீகத்தால் மட்டுமே பூட்டு இல்லாத வீட்டையும், காவல் நிலையம் இல்லாத நாட்டையும் உருவாக்க முடியும். ஆன்மீகத்தால் மட்டுமே நீதியையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும், சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், மத நல்லிணக்கத்தையும்,உலகில் ஏற்படுத்த முடியும்.

  • நின்னை சரணடைந்தேன்…

    பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை, காரணம் நான் வேறு ஒரு அறிவு உலகத்திலும், படிக்கின்றவர்கள் வேறு ஒரு அறிவு உலகத்திலும் இருப்பதுதான். உலகமக்கள் அனைவரையும் புதிய அறிவு உலகத்திற்கு அழைத்துச் செல்வது தான் என்னுடைய எழுத்தின் நோக்கம். ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை என்ற ஆரம்ப நிலையிலிருந்து, புரிதல்…

  • தாயா ! தாரமா !!

    திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும் அது அவர்களுடைய கருத்தாகதான் உள்ளதே தவிர, அதற்கான தெளிவு இல்லை. அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு. முக்காலத்தையும் உணர்ந்தவன் இந்த உலகில் யாரும் இல்லை, ஆனால் முக்காலத்திலும் வாழ்பவன் தான் மனிதன். விலங்குகள் நிகழ்காலத்தில்மட்டும் தான் வாழ்கின்றன, ஆனால் மனிதன் இறந்த…

  • ரகசியம் நம்மை அன்னியப்படுத்திவிடும்

    தேவைப்படும் பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டு தேவைப்படாத பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் வீடு சுத்தமாக இருப்பது போல், நாம் ரகசியம் என்று ஒரு சிலதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் ! மனசு தூய்மையாக இருக்கும். இருந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இடம். இப்போது வாழ்கின்ற இளைஞர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள், எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று. ஏன் என்று கேட்டால் அனைவரும் அப்படித்தான் இருக்கின்றார்கள்…

  • இந்தி மொழியை கற்கலாமா ?

    மத்திய அரசின் நிர்ப்பந்தம் இல்லாமல் விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழியை கற்கலாமா ? அறிவை பற்றி நான் செய்த ஆய்வில் கிடைத்த விடை —நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோம், எதை உணர்கின்றோமோ, அது நம்மை, நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளஆரம்பித்துவிடும் என்பதே,இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. நாம் பெறுகின்ற அறிவு அனைத்தும் நமக்கு நன்மையை செய்யாது. நாம் பெற்ற பல அழிவுகள் நமக்கு சூனியம்மாகவே அமைந்துவிடுகின்றன.அதனடிப்படையில் இந்தியை தாய்மொழியாக இல்லாதவர்கள் இந்தியை விரும்பி கற்றுக்கொண்டால் அது…

  • மன்னிப்பு

    தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தன்னை உயர்த்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு. தான் செய்த தவற்றிர்க்கும், குற்றத்திற்கும், பாவத்திற்கு மான விடுதலையே பாவமன்னிப்பு. தன்னுடைய தவற்றை உளமார உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்பது நம்பிக்கை. இது உண்மைதான் தவறு செய்யாதவன் மனிதனாக…

  • அன்பே அழகு

    குழந்தைகளை பார்த்தால் சிலர் குழந்தைகளாகவேமாறி அவர்களிடம் விளையாடுவார்கள், இதனால் குழந்தைகள் அவர்களிடம் மிகவும் அன்பாக இருக்கும்.அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன். குழந்தைகளுடைய கள்ளமில்லா முகம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே நான் குழந்தைகளை வேற்றுமை பாராமல் கட்டித் தழுவிக்கொள்வேன், பதிலுக்கு குழந்தைகளும் என் மீது அன்பு கொண்டு முகத்தோடு முகம் வைத்து அணைத்துக் கொள்ளும் போது என்னையே நான் மறந்துவிடுவேன், குழந்தைகள் தெய்வத்துக்கு மேலானவர்கள், அவர்களின் முகத்தை பார்த்தால் துன்பம் அனைத்தும் பறந்தோடிவிடும். குழந்தைகளிடம் நாம்…

  • எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்?

    எது சிறந்த எழுத்து ?யார் சிறந்த வாசகர் ?எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது என்பதை பார்க்காமல் எழுத்தின் ஜீவனைப் புரிந்து கொள்கிறானோ அவன் தான் சிறந்த வாசகன். யார் எழுதியது என்பதை தெரிந்து கொண்டு, எழுதியவரை நம்பி கருத்தை புரிந்தது போல் நம்புபவன் சராசரி வாசகன். புத்தர், விவேகானந்தர், காந்தி,…

  • அவநம்பிக்கை

    கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு கைத்தடியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறும்போது கைத்தடி போதைப் பொருளாக மாறி அவர்களின் உழைப்பையும், பொருளையும், அறிவையும், அழித்து விடுகின்றது. கடவுள் இல்லை என்ற கருத்தை உடையவர்கள் கடவுளை நம்பாததில் எந்தத் தவறும் இல்லை. அதுபோல் கடவுள் இருக்கு என்ற கருத்தை உடையவர்கள் கடவுளை நம்புவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கடவுள் இருக்கு என்று நம்புவார்களில் பெரும்பாலானவர்கள் தான் வணங்கும் எந்த கடவுளையும் அவர்கள்…

All Tags

அறிவுரை, அறிவின்_தோற்றம், தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, அனுபவ_அறிவு, கடவுள்_மறுப்பு, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, அரசுமொழி_அந்தஸ்து, திருமணமும்_குடும்பமும், பெரியார், மனமும்_உணர்வும், மறுப்புக்_கட்டுரை, குற்றமும்_தண்டனையும், பகுத்தறிவு_விமர்சனம், குற்றப்_பொறுப்பு, BJP, குமார்_விதிகள், நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, மாநில_உரிமை, இந்தி_திணிப்பு, மதமும்_சடங்கும், உச்ச_நீதிமன்றம், இட_ஒதுக்கீடு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, அனுபவமே_அறிவு, மதவாத_அரசியல், ஆறாவது_அறிவு, இயற்கையின்_நீதி, பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், அறிவுத்_தற்பெருமை, உணர்வுக்_கட்டுப்பாடு, கற்பு, அறிவு_உணர்வு_மோதல், திருமணத்திற்கு_முந்தைய_காதல், ஏழாவது_அறிவு, ஊடகமும்_கலையும், அரசியலமைப்புச்_சட்டம், புத்தக_வாசிப்பு, சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நீதிமன்ற_அதிகாரம், நிர்வாகமும்_ஊழலும், மூளைச்சலவை, நான்_எனும்_உணர்வு, ஊடக_நேர்மை, திமுக, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, கல்விக்_கொள்கை, கோயில்_சடங்கு, தன்_மதிப்பு, உள்_ஒதுக்கீடு, உழைப்பு, மும்மொழிக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, ஸ்டாலின், அம்பேத்கர், தோல்வியை_எதிர்கொள்ளல், திருமண_வாழ்க்கை, பாலியல்_குற்றம், நட்பும்_உறவும், கலப்புத்_திருமணம், ஆன்மீக_வணிகம், தேர்தல்_பணம், வாக்கு_வங்கி, இளையராஜா, திருக்குறள், பாமக, திருமாவளவன், இலவசத்_திட்டம், ஒன்றிய_அரசு, கருணாநிதி, ஜெயலலிதா, சனாதன_தர்மம், லஞ்சம், மது_பழக்கம், NLC, பெண்_ஆண்_வேறுபாடு, சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், தேர்தல்_ஆணையம், அப்துல்_கலாம், ஜக்கி_வாசுதேவ், பெற்றோர்_பிள்ளை_உறவு, மோடி, விவசாய_மானியம், கால்_தொடும்_வழக்கம், NLC_நிலப்_பிரச்சினை, கல்வி_மொழி, NEET, வரிக்_கொள்கை, பொதுப்_பணி_தரம், காவல்துறை, வைரமுத்து, விவேகானந்தர், ஏ_ஆர்_ரகுமான், விஜய், சீமான், வள்ளலார், போட்டி_மனப்பான்மை, ரஜினிகாந்த், காந்தி, மாணவர்_நெருக்கடி, காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, காமராசர், காங்கிரஸ், அதிமுக, சாதிக்_கணக்கெடுப்பு