All Blog Posts

  • கடவுளைவிட உயர்ந்தவர்கள் உண்மையான நண்பர்களும், உறவுகளும்

    இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் நேற்றைய நிகழ்வை நான் பதிவிடுகின்றேன். “இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல் “ ஒரு வரிக்குள் ஆத்திகமும், நாத்திகமும் சேர்ந்து வருவது தான் இந்த வரியின் சிறப்பு. அறிவியல் படி கடவுள் இல்லை என்றாலும் எந்தத்துணையும் இல்லாமல் இருட்டில் தனியாக பயணிக்கும் ஒருவனுக்கு அவன் வணங்கும்…

  • மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்

    நம்பிக்கையே வாழ்க்கை, நம்பிக்கை இல்லை என்றால் போராட்டம் இல்லை, போராட்டம் இல்லை என்றால் வெற்றி இல்லை, வெற்றி இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை இந்த நாட்டை ஆள்பவர்களால் தான் மாற்ற முடியும் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு தனி மனிதனால் எப்படி முடியும் என்று நான் நினைத்து இருந்தால், “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்” என்ற புத்தகத்தை எழுதி இருக்க மாட்டேன், முடியும் என்ற நம்பிக்கையே என்னை எழுத வைத்தது எழுதிய…

  • காரணமும்,காரியமும்

    காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்கையையே புரிந்ததாக, அறிவாக எண்ணி ஏமாறுகிறோம். இதுதான் இன்றைய சமுதாய அறிவு. விதியைப் பற்றிய என்னுடைய ஆய்வை மக்களிடம் கொண்டு செல்லும் போதுதான் தெரிகின்றது என்னை சுற்றி உள்ளவர்களில் ஆயிரத்தில் 999பேர் நம்பிக்கை என்ற குப்பையால் சிந்திக்க முடியாமல், புரிதல் இல்லாமல், நம்பிக்கையையே புரிதலாக எண்ணி தன்னையே ஏமாற்றிக்…

  • விதியை நம்புதலும், புரிதலும்

    நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மிடம் இருக்கும். பெரும்பாலானவர்கள் நம்புவதையே புரிந்ததாக எண்ணுகின்றார்கள், தகவல் சேகரிப்பதையே அறிவாக எண்ணுகின்றார்கள், அதனால் தான் படித்தவன் அறிவாளியாக இந்த உலகில் பார்க்கப் படுகின்றான். 2+2=4,4×4=16 என்பதை புரிந்துகொண்டால் கணிதம் வாழ்க்கைக்கு பயன்படும். புரிந்து கொள்ளாமல் ஆசிரியர் சரியாகத்தான்…

  • சமத்துவ புரட்சி

    தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்ற அரசியலைக் கடந்து அனைத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்ற உரிமையை போராடிப் பெறமுடியும். பெஞ்சமின் மின்சாரத்தை கண்டுபிடித்ததால் மின்சாரம் அவருக்கு சொந்தமல்ல, யார் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றார்களோ அவர்களுக்கு தான் அது பலன் தரும், அதுபோல் விதி அறிவியல் உண்மை, எது நடக்குமோ அது…

  • நம் மனசாட்சி மாறவேண்டும்

    ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு.அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை.நீதி மாறவேண்டும் என்றால் சமுதாயத்தின் அறிவு மாறவேண்டும்.குற்றவாளி தண்டனைக்கு உரியவன் அல்ல இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அறிவியல் உண்மையை எப்போது இந்த உலகம் உணர்கின்றதோ அப்போதுதான் தூக்குத்தண்டனை தடை செய்யப்படும். இதை நான் எழுதுவதால் இந்த உலகில் நான் மட்டுமே அறிவாளி, மற்றவர்கள் அனைவரும் அறிவு இல்லாதவர்கள் என்று பொருளல்ல. அறிவால் யாரும்,…

  • என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்

    என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அறிவு இல்லாத சிருவயதில் கடவுளை நம்பினேன், வளர்ந்து அறிவைப் பெற்ற பிறகு கடவுள் இல்லை என்றாலும் கடவுள் செய்கின்ற செயலை அறிவியல் செய்கின்றது என்பதையும், அனைத்து வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதையும் புரிந்து கொண்டேன். இந்த சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும், குறைந்ததற்கு காரணம்.…

  • பயன்படாத ஒற்றை செருப்பு

    பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெரிந்து கொள்கின்ற தகவலால் பயனில்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகளை புரிந்துகொள்ளவே இதைப் படிக்கின்ற வாசகர்களுக்கு அறிவை சார்ந்த அறிவு இருக்க வேண்டும் இல்லை என்றால் என் எழுத்து பயனற்றது தான். எழுத்தாளர்களும் அவர்களுடைய எழுத்துக்களும் மக்களிடம் பிரபலம் ஆவதற்கு காரணம், மக்களிடம்…

  • சுய விடுதலை

    தஞ்சை பெரிய கோயிலின் 2020 குடமுழுக்கு தமிழர்களின் அறியாமைக்கும், அடிமைத்தனத்துக்கும் முழுக்காக அமைய வாழ்த்துக்கள். தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று போராடிய, ஆதரவு கொடுத்த தமிழர்களில் 90 சதவிகிதத்தினர் அவர்களுடைய குடும்ப சுபநிகழ்ச்சிகளை சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி தான் நடத்துகின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது, மறைத்து விடக்கூடாது. தமிழ் மொழியை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் அவர்களுடைய குடும்ப சுபநிகழ்ச்சிகளை தமிழில் செய்ய முன்வரவேண்டும். அண்ணாவின் மொழிப் புரச்சியால் 60 ஆண்டுக்கு முன்பே மக்கள் மொழி விழிப்புணர்வு பெற்று…

  • விதியை நம்பாதீர்கள் !

    விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு புரிய வைப்பதும் கடினம், நம்ப வைப்பதும் கடினம். நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்ற தொடர்வினை தத்துவம் தான் விதி. விதி உண்மை என்று புரிந்துகொள்வதற்கும், விதியை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. விதி உண்மை என்று நான்…

All Tags

அறிவுரை, அறிவின்_தோற்றம், தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, அனுபவ_அறிவு, கடவுள்_மறுப்பு, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, அரசுமொழி_அந்தஸ்து, திருமணமும்_குடும்பமும், பெரியார், மனமும்_உணர்வும், மறுப்புக்_கட்டுரை, குற்றமும்_தண்டனையும், பகுத்தறிவு_விமர்சனம், குற்றப்_பொறுப்பு, BJP, குமார்_விதிகள், நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, மாநில_உரிமை, இந்தி_திணிப்பு, மதமும்_சடங்கும், உச்ச_நீதிமன்றம், இட_ஒதுக்கீடு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, அனுபவமே_அறிவு, மதவாத_அரசியல், ஆறாவது_அறிவு, இயற்கையின்_நீதி, பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், அறிவுத்_தற்பெருமை, உணர்வுக்_கட்டுப்பாடு, கற்பு, அறிவு_உணர்வு_மோதல், திருமணத்திற்கு_முந்தைய_காதல், ஏழாவது_அறிவு, ஊடகமும்_கலையும், அரசியலமைப்புச்_சட்டம், புத்தக_வாசிப்பு, சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நீதிமன்ற_அதிகாரம், நிர்வாகமும்_ஊழலும், மூளைச்சலவை, நான்_எனும்_உணர்வு, ஊடக_நேர்மை, திமுக, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, கல்விக்_கொள்கை, கோயில்_சடங்கு, தன்_மதிப்பு, உள்_ஒதுக்கீடு, உழைப்பு, மும்மொழிக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, ஸ்டாலின், அம்பேத்கர், தோல்வியை_எதிர்கொள்ளல், திருமண_வாழ்க்கை, பாலியல்_குற்றம், நட்பும்_உறவும், கலப்புத்_திருமணம், ஆன்மீக_வணிகம், தேர்தல்_பணம், வாக்கு_வங்கி, இளையராஜா, திருக்குறள், பாமக, திருமாவளவன், இலவசத்_திட்டம், ஒன்றிய_அரசு, கருணாநிதி, ஜெயலலிதா, சனாதன_தர்மம், லஞ்சம், மது_பழக்கம், NLC, பெண்_ஆண்_வேறுபாடு, சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், தேர்தல்_ஆணையம், அப்துல்_கலாம், ஜக்கி_வாசுதேவ், பெற்றோர்_பிள்ளை_உறவு, மோடி, விவசாய_மானியம், கால்_தொடும்_வழக்கம், NLC_நிலப்_பிரச்சினை, கல்வி_மொழி, NEET, வரிக்_கொள்கை, பொதுப்_பணி_தரம், காவல்துறை, வைரமுத்து, விவேகானந்தர், ஏ_ஆர்_ரகுமான், விஜய், சீமான், வள்ளலார், போட்டி_மனப்பான்மை, ரஜினிகாந்த், காந்தி, மாணவர்_நெருக்கடி, காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, காமராசர், காங்கிரஸ், அதிமுக, சாதிக்_கணக்கெடுப்பு