Understanding knowledge

  • நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல!

    நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன்.என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்காக மட்டும் எழுதப்பட்டது அல்ல,இது ஒவ்வொருவரும் ஏற்க்க வேண்டிய உறுதிமொழியாகும். அப்போது தான் இந்த உலகில் அனைவரும் அறிவாள் சமம் என்ற சமத்துவம் உருவாகும். இதை நான் எழுதியவுடன் இறைவன் விலை மதிக்கமுடியாத ஒன்றை கொடுத்ததை போல் உணர்ந்தேன்.இந்த வார்த்தைகள் சிற்ப்பம் போல் செதுக்கப்பட்டுள்ளது.செங்கல்லை பயன்படுத்தும் கொத்தனாரிடம்…

  • புரியவைப்பதை போல் நம்பவைப்பது

    கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, ” பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்” என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவர்கள் புரிந்து கொண்டது போன்ற மாயையில் உவமையால் நம்பவைக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆம் அதே பாடலை ” பொருத்தால் நீரும் ஆவியாகிவிடும் என்று மாற்றி எழுதி இருந்தால்! நாம் பொருமையாக இருந்தால் கையில் கிடைத்ததும் கை நழுவி போய்விடும் என்பதை புரிந்ததுப்போல் நினைப்பார்கள். இது இரண்டுமே…

  • சாதனையும், சேவையும்

    உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை போல் நான் இருப்பது என் இயல்பு, இது எப்படி சாதனையாக முடியும்.. உசேன் போல்ட் பிறப்பாலும் வளர்ப்பாலும் வேகமாக ஓடக்கூடிய திறனை பெற்று இருக்கின்றார் என்பது அவருடைய இயல்பு இதை சாதனை என்று எப்படி சொல்ல முடியும்.…

  • வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும்.

    “வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது.காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்” பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும் வேறுபாடு உண்டு.அனுபவமுள்ள பெரியவர் சொல்வதை அனுபவமில்லாத சிரியவர் கேட்டு நடந்தால் நல்லது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அனுபவமுள்ள முன்னோர்கள் சொன்னதை தற்போது வாழும் அனுபவம் உள்ளவர்கள் கேட்க வேண்டியதோ, அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டியதோ இல்லை. காரணம்…

  • அவமானம்

    “அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான்———————-தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர்களால் ஏற்படுவது அல்ல,நீயாகவே ஏற்படுத்திக் கொள்வது. எந்த இடத்தில் உனக்கு மரியாதைத் தேவை என்று என்னுகின்றாயோ அந்த இடத்துக்குரிய தகுதியை நீ வளர்த்துக் கொண்டால் மரியாதை தானாக உனக்கு கிடைக்கும், எல்லா இடத்திலும் மரியாதையை பெற்றவர் இந்த உலகில் யாரும் இல்லை. தகுதிக்கு அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பவன் வாழ்நாள் முழுவதும் அவமானப்பட வேண்டியது…

  • விதி

    சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந்தவர்களால் எழுதப்பட்டவை. விதி என்ற வார்த்தையை இவர்கள் முரண்பாடாக பயன்படுத்தி உள்ளனர். உண்மையில் “விதியின்” பொருள் என்ன?“விதி என்பது எது நடக்குமோ, அது நடந்தே தீரும், மாற்றத்திற்கு உட்படாதது, மாற்ற முடியாது என்று பொருள்”. சூரியன் காலையில் கிழிக்கில் உதிக்கும் என்பது விதி. தண்ணீரை…

  • மண்பானை

    ஒருவன் மண்பானையிடம் கேட்டான். “இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும்எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?” மண் பானை சொன்னது, ” என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்? என்னைப் போலத்தான் இருப்பான்.” மண்பானை எப்படி தண்ணீரை குளிர்ச்சியாக மாற்றுகின்றது என்று தெளிவுபடுத்தாமல் இது போன்ற பயனற்ற எழுத்துகளைப்போல் பல எழுத்தாளர்கள் கதைளை எழுதி நம் மக்களை முட்டாள்களாகிவிட்டாகள் இவர்களை எப்படி மீட்டு எடுப்பது?

  • வேறுபாடுகள்

    முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அழிந்துவிடும். ஆனால் மக்களிடம் உள்ள வேற்றுமை உணர்வு அழியாது.அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, மதக்குருக்கலாக இருந்தாலும் சரி. அனைவரும் சாதி வேறுபாடு ஒழிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே புதிய வேறுபாட்டை ஆதரிக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் மற்றவர் இடம் இருந்து வேறுபட்டு…

  • சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்

    “சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்” யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது ‘கற்றது கை அலவு கல்லாதது உலகலவு’ என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி?? அறிவு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள அறிவை பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய புத்தகத்தை படித்து பயன் பெறுங்கள்.

  • பாகிஸ்தான் தீவிரவாதிகளை காப்போம்

    பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு முக்கிய காரணம் அறிவின்மைதான்.தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றால் தான் சுதந்திரம் கிடைக்கும் என்று என்னுவதும், தீவிரவாதிகளை கொன்றால் தான் சுதந்திரமாக ஆட்சியாளர்கள் வாழமுடியும் என்று எண்ணி அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதும் காட்டு மிராண்டி செயல், தீவிர வாதிகளுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதன் மூலம், அரசும், தீவிரவாதிகளை போல் தொடர்ந்து கொலை குற்றத்தை செய்கின்றது என்று தான் பொருள் பாகிஸ்தானில் அமைதி திரும்பினால் நம் நாட்டுக்குதான் நல்லது. எனவே நான் எழுதிய “தூக்கு தண்டனையும்,…