Understanding knowledge
-
ஏழாவது அறிவு
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை… ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம்,அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே…
-
புதிய அறிவைப் பெறுவோம்
தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தான் அறிவாளி என்னுடைய கருத்து தான் சரியானது என்று எண்ணி எதிரியின் கருத்தை ஆரம்பத்திலேயே நிராகரிப்பவன் புதிய அறிவை பெற முடியாது. உதாரணத்திற்கு :-மின்சாரத்தைத் தொட்டால் shock அடிக்கும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் shock அடிக்காது என்று ஒருவர் சொன்னால், அவர்…
-
மனசாட்சி
ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செயல்படுகின்றார், மனசாட்சி என்பது சமுதாய நீதி அல்ல, அது அவர், அவர் பெற்ற அறிவு.
-
புத்தகம் படிப்பதால் அறிவு வளராது
எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது, அறிவால் அனைவரும் சமம், அனுபவத்தால் மட்டுமே அறிவை பெற முடியும், அனுபவம் இல்லாக் கல்வி அறிவை கொடுக்காது.என்ற அறிவை பற்றிய அறிவியல் உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்திய முதல் ஆய்வு கட்டுரை இதுதான்.இந்த புத்தகம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் ஆசிரியர்களிடமும்,…
-
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்…
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய்வு செய்தபிறகு ஏற்றுக்கொள் என்று பொருள். அறிவு என்ற வார்த்தையின் இடையில் வல்லினம் ‘றி ‘யா இடையினம் ‘ரி’ யா என்று எழுதுவதற்கு தமிழ்ப்புலமை தேவை, அறிவைப் பற்றி எழுதுவதற்கு வாழ்வியல் அறிவு வேண்டும் தமிழ்ப்புலமை தேவையில்லை. தமிழ்ப் புலமை பெற்றவர்கள்…
-
புதிய பெரியாரியம்
பெரியாரின் கொள்கையை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்வதற்க்காகவே அந்த இயக்கத்தில் இனைகின்றார்கள். ஆத்திகத்தை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை நேர்மையானவர் என்று மற்றவர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே நெற்றியில் பட்டை அடித்து கொள்கின்றார்கள்.பெரியார் சொன்னது போல் பகுத்தரிவு என்பது முன்னோர்கள் சொன்னதை அப்படியே கேட்பது அல்ல.100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்ன கொள்கையை இன்று நாம் ஆய்வு செய்யாமல் ஏற்பது பகுத்தறிவு அல்ல.உன்மையான பகுத்தறிவாளன் இன்று பெரியார் கருத்தை அப்படியே ஏற்க மாட்டான்!புதிய மேன்மையான நாத்திகத்தையும், பகுத்தறிவையும்…
-
புதிய நீதி
ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. – புத்தர், பட்டினத்தார், மாணிக்க வாசாகர் முதல் பல்லாயிரம் மத தலைவர்கள் சொன்னதும், சொல்லிக்கொண்டு இருப்பதும். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் மதி பாதி, விதி பாதி. -சத்குரு ஜக்கி வாசுதேவ். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும், கடவுள் காரணம் அல்ல; விதியை நினைப்பவன் முட்டாள், மதியை நினைப்பவன் அறிவாளி.…
-
அலங்கார எழுத்துக்களை போல் ஆய்வு எழுத்துக்களையும் படிப்பதால் பயன் இல்லை
கவிதைக்கு வரி அழகு, கண்ணுக்கு ஒளி அழகு, கடலுக்கு அலை அழகு, கல்விக்கு அறிவு அழகு, மண்ணுக்கு மரம் அழகு, நட்புக்கு நம்பிக்கை அழகு, உறவுக்கு உணர்வு அழகு, உடலுக்கு உயிர் அழகு, வானுக்கு விண்மீன் அழகு, வீட்டுக்கு ஒளி அழகு, நாவலுக்கு கதை அழகு, மதத்துக்கு கோட்பாடு அழகு, கட்சிக்கு கொள்கை அழகு, தமிழுக்கு குரல் அழகு, ஆணுக்கு பண்பு அழகு, பெண்ணுக்கு அன்பு அழகு, ஆய்வுக்கு பொருள் அழகு. இது போன்ற அலங்கார எழுத்துக்கள்,…
-
என் ஆய்வு முடிவுகள்
1.அறிவால் அனைவரும் சமம். 2.அனுபவம் இல்லாமல் புத்தகம் படிப்பதால் அறிவு வளராது. 3.அறிவு என்பது படிப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. 4.அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது. அறிவை அறிவால் ஆளுமை செய்வது ஏழாவது அறிவு. 5.எதை நாம் பார்க்கின்றோமோ, எதை நாம் கேட்கின்றோமோ அது நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளும். 6.திருமனத்திற்கு முன் காதல் என்பது விபச்சாரத்திற்கு சமமானது. 7.தூக்கு தண்டனை என்பது அறிவற்ற சமுதாயத்தின் செயல். 8.தண்டனை என்ற வார்த்தையே புதிய நீதிக்கு…
-
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்!
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்!ஒருவர் அறிவை வேறுஒருவர் அறிவால் மதிப்பிட முடியாது!+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களே உங்கள் அறிவை இந்த சமுதாயம் மதிப்பிட முடியவில்லை என்பதையே இந்த தேர்வு முறை காட்டுகின்றது. நீ யாரைவிடவும் அறிவால் குறைந்தவன் அல்ல! தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம், வாழ்த்துக்கள்!
