Understanding knowledge
-
முகமூடி
“உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல் “முகமூடி”என்ற இந்த ஆய்வு கட்டுரையை நான் எழுதுவதற்கு என்னுடைய எழுத்தை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் மனம் திறந்து பாராட்டிய நல் உள்ளங்களே காரணம். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என்னுடைய எழுத்தை தொடர்ந்து படிக்கும் சிலர் அதன் வலிமையை புரிந்து, இதுபோன்ற எழுத்தை…
-
மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்
மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்பதையே அவருடைய பாடல் நமக்கு தெரியப்படுத்துகின்றது.திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகருக்கே அறிவைப் பற்றிய புரிதல் இல்லாத போது, நாம் யாரை அறிவாளியாக பார்ப்பது ?. அதற்கான பதில் நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற புத்தகத்தில் உள்ளது. நமக்குத் தெரிந்தது…
-
எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்?
எது சிறந்த எழுத்து ?யார் சிறந்த வாசகர் ?எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது என்பதை பார்க்காமல் எழுத்தின் ஜீவனைப் புரிந்து கொள்கிறானோ அவன் தான் சிறந்த வாசகன். யார் எழுதியது என்பதை தெரிந்து கொண்டு, எழுதியவரை நம்பி கருத்தை புரிந்தது போல் நம்புபவன் சராசரி வாசகன். புத்தர், விவேகானந்தர், காந்தி,…
-
நமக்கு பிடித்ததை நாம் அடைவது தான் வெற்றி
வெற்றிக்கு முதல் படி முயற்சி !முயற்சிக்கு முதல் படி நம்பிக்கை !நம்பிக்கைக்கு முதல் படி (ஆசை )தேவைகள் !தேவைகளுக்கு முதல் படி உணர்வு! வெற்றி என்பது சமுதாயத்துக்கு பிடித்ததை நாம் அடைவதில் இல்லை, நமக்கு பிடித்ததை நாம் அடைவதில் தான் உள்ளது.
-
உணர்வின் கடிவாளம் அறிவு
ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்ற வாழ்க்கையில்தான் உள்ளது. ஒருவனுடைய அறிவின் வெளிப்பாடு அவன் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் தான் வெளிப்படுகின்றது. இளைஞர்களை பார்த்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்வது மிக எளியது, ஆனால் இதுவரை யாரும் அறிவால் உணர்வுகளை எப்படி ஆளுமை செய்து ஒழுக்கமாக வாழ்வது…
-
பெரியாரின் பகுத்தறியாமை
யார் சொல்லியிருந்தாலும்,எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. —-பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரிந்து கொண்டவர்கள் பெரியாரையும் சேர்த்து இந்த உலகில் யாருமில்லை. ஒன்றை ஓருவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதை சார்ந்த அறிவு அவரிடம் இருக்க வேண்டும். அறிவு இல்லாமல் எதை ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாது. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, என்றால் ஒருவர் எப்படி அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். மருத்துவர் சொல்வதை…
-
என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும்
ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விட்டதால், தன்னம்பிக்கையை இழந்து மிகவும் சோகத்தில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த அப்பாவின் நண்பர் எனக்கு ஆறுதலாக நீ பெரிய அறிவாளி, உன்னிடம் திறமைகள் அதிகம் இருக்கு,“வெற்றி பெறுபவர்கள் அனைவரும் அறிவாளியும் இல்லை,…
-
பயனற்ற உபதேசங்கள்
“கனவு காணுங்கள்” என்று டாக்டர் அப்துல்கலாமும், ” அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்” என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், அனைத்துக்கும் ஆசைப்படுவதும், பிறப்பால் நாம் பெற்ற உணர்வு, இந்த உணர்வுகள் அறிவால் பெறப்படுபவை அல்ல, அது பிறப்பின் இயல்பு. எனவே உணர்வை ஏற்படுத்துவது என்பது கல்லை பறக்காமல் அமுக்கி பிடிப்பது போன்றது. கல்லை எப்படி தூக்குவது என்பதை தெரிந்து கொள்வதற்குதான் நமக்கு அறிவு தேவைப்படுகின்றது.…
-
மரணம்
மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இருக்கும்போதே மரணத்தை உணர முடியும். நம்முடைய அறிவின் முதிர்ச்சியால் நான் நான்அல்ல என்ற ஞான நிலையை நாம் அடையும் போது தற்காலிகமாக ஒரு சில கணம் நான் என்ற உணர்வில் இருந்து முழுவதுமாக விடை பெற்று விடுவோம் இந்த நிலை மரணத்திற்குச் சமமானது.…
-
புரிந்துகொள்ள முடியாத வாசகன் நம்புவான்
புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக. எழுத்தாளர்கள் பலர் பிரபலமானவர் பெயரைச் சொல்லி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதன் நோக்கம் உன்னை சிந்திக்க விடாமல் நம்ப வைப்பதற்கு என்பதை வாசகன் புரிந்துகொள்ள வேண்டும். விதி உண்மை என்று ஒரு எழுத்தாளர் சொல்ல நினைத்தால் எப்படி என்று விளக்க வேண்டுமே தவிர, மாறாக பெரிய மனிதர்களின் பெயரை…
