Understanding knowledge
-
நம்பிக்கையும், புரிதலும்
யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது அறிவின் வெளிப்பாடு. கடவுள் இருக்கு என்ற நம்பிக்கையும், கடவுள் இல்லை என்ற நம்பிக்கையும் அறியாமையின் வெளிப்பாடே. ஒரு நம்பிக்கையை மற்றொரு நம்பிக்கையால் சிதைப்பதும் அறியாமையின் வெளிப்பாடே, இந்த இரண்டு நம்பிக்கையையும் தவறு என்று அறிவியலால் புரிந்து கொண்டால் அது தான் அறிவு. இந்த அறிவை…
-
நம்மை செதுக்கும் சிற்பிகள்
நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள்.வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவதும், நம்அறிவாலும், உணர்வாலும் நாம் தேர்வு செய்யும் நண்பர்களால்தான்.
-
வாழத் தெரியாத அறிவாளிகள்
முற்றும் துறந்தவர்கள் தன் உணர்வை அறிவால் அடக்கியாளும் வல்லமையை (அறிவில் சிறந்த, உணர்வை அடக்கும் அறிவை பெற்று இருந்தாலும் ) உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை என்ற அறிவை பெறாது வாழ்க்கையை இழந்தவர்களே. முற்றும் துறக்க, அனைத்து உணர்வுகளையும் அடக்கியாளும் அறிவு எனக்கு இல்லை என்றாலும், உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை, அறிவு வாழ்க்கை அல்ல என்ற அறிவை நான் பெற்றிருப்பதன் வெளிப்பாடு, அறிவால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை, அறிவால் அனைவரும் சமம் என்பதே.
-
மரணிக்கும் அறிவு
ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்று திருவள்ளுவர், புத்தர் போன்ற பல ஆயிரம் மகான்கள் மற்றும் பல ஆயிரம் கோடி மக்கள் வாழ்ந்த இந்த உலகில் வாழத் தெரியாமல் வாழும் இன்றைய சமுதாயமே. முன்னோருக்கும் முன்னோரின் அறிவை நம் முன்னோர்களும், நாமும் பெற்று இருந்தால் உண்மையான ஆன்மீகத்தையும்,…
-
யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன?
என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்கோ அவர்கள் குறிப்பிட்டு நல்லவர் என்பதற்கு என்ன அளவுகோல் வைத்து இருக்கின்றீர்கள், அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவனும், அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுபவனும், கொலைகாரனும், கொள்ளைக்காரனும் தன்னுடைய செயலை சரி என்று நினைப்பதால் தான் செய்கின்றார்கள், அதனால் அனைவரும் தன்னை நல்லவராகவே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உங்களுடைய…
-
கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள் இறந்த பிறகும் உலகத்திற்கு கற்பித்துக் கொண்டேஇருக்கின்றார்கள்,காந்தி, காமராசர், கண்ணகியை போல்.
-
காரணமும்,காரியமும்
காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்கையையே புரிந்ததாக, அறிவாக எண்ணி ஏமாறுகிறோம். இதுதான் இன்றைய சமுதாய அறிவு. விதியைப் பற்றிய என்னுடைய ஆய்வை மக்களிடம் கொண்டு செல்லும் போதுதான் தெரிகின்றது என்னை சுற்றி உள்ளவர்களில் ஆயிரத்தில் 999பேர் நம்பிக்கை என்ற குப்பையால் சிந்திக்க முடியாமல், புரிதல் இல்லாமல், நம்பிக்கையையே புரிதலாக எண்ணி தன்னையே ஏமாற்றிக்…
-
விதியை நம்புதலும், புரிதலும்
நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மிடம் இருக்கும். பெரும்பாலானவர்கள் நம்புவதையே புரிந்ததாக எண்ணுகின்றார்கள், தகவல் சேகரிப்பதையே அறிவாக எண்ணுகின்றார்கள், அதனால் தான் படித்தவன் அறிவாளியாக இந்த உலகில் பார்க்கப் படுகின்றான். 2+2=4,4×4=16 என்பதை புரிந்துகொண்டால் கணிதம் வாழ்க்கைக்கு பயன்படும். புரிந்து கொள்ளாமல் ஆசிரியர் சரியாகத்தான்…
-
பயன்படாத ஒற்றை செருப்பு
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெரிந்து கொள்கின்ற தகவலால் பயனில்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகளை புரிந்துகொள்ளவே இதைப் படிக்கின்ற வாசகர்களுக்கு அறிவை சார்ந்த அறிவு இருக்க வேண்டும் இல்லை என்றால் என் எழுத்து பயனற்றது தான். எழுத்தாளர்களும் அவர்களுடைய எழுத்துக்களும் மக்களிடம் பிரபலம் ஆவதற்கு காரணம், மக்களிடம்…
-
விதியை நம்பாதீர்கள் !
விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு புரிய வைப்பதும் கடினம், நம்ப வைப்பதும் கடினம். நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்ற தொடர்வினை தத்துவம் தான் விதி. விதி உண்மை என்று புரிந்துகொள்வதற்கும், விதியை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. விதி உண்மை என்று நான்…
